Document writer

Document writer பத்திரங்கள் சிறந்த முறையில் பதிவு செய்து தரப்படும் மற்றும் திருமண பதிவு செய்து தரப்படும்

18/05/2024

சட்டம் ஒரு பார்வை

*பக்கத்து
வீட்டுக்காரர் மோசமாக பேசுகிறார், எப்படி புகார் செய்வது*

பக்கத்து வீட்டுக்காரருடன் எழும் தகராறுகள்.

உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களை தவறாக பேசினால் புகார் கொடுப்பதற்கு முன் அது கிரிமினல் வழக்கா அல்லது சிவில் வழக்கா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு பிறகு புகாரை எப்படி கொடுப்பது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் அவர் பேசியது மூலமாக நீங்கள் மிரட்டப்படுகிறீர்களா அல்லது கெட்ட வார்த்தையில் அவர் பேசுகிறாரா என்பதை தெளிவாக கவனிக்க வேண்டும், ஏனென்றால் ஒருவரை கெட்ட வார்த்தைகள் பேசுவது, மிரட்டுவது, கொலை மிரட்டல் விடுவது, இவை அனைத்தும் கிரிமினல் குற்றங்கள் ஆகும்.

ஒரு நபரை திட்டுவது, மிரட்டுவது, போன்றவை அவரை நேரடியாக பாதிக்கும் இதனால் இவை கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. இந்த கிரிமினல் குற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்காக காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள், கிரிமினல் குற்றங்கள் நடைபெறுகிறது என்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

ஒருவேளை உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களை பற்றி தவறாக பேசி அவதூறுகளை பரப்புகிறார் என்றால் அது உங்களை நேரடியாக பாதிக்காது அது உங்களது நற்பெயரை சமூகத்தில் குறைக்கும்.

இவை சிவில் குற்றங்களாக கருதப்பட்டு இதற்கு மான நஷ்ட வழக்குகள் பதிவிடப்படுகிறது, இதற்கும் காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்கலாம் ஆனால் எப்படி அணுகலாம் இந்த வழக்குகளை எப்படி கையாளுவது என்பதை தொடர்ந்து தெரிந்துகொள்ளும்.

கிரிமினல் குற்றம் என்றால் எங்கே புகார் அளிப்பது

உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களை கெட்ட வார்த்தையில் பேசினாலோ அல்லது கொலை மிரட்டல் விடுத்தாலோ நேரடியாக அது உங்களை பாதிக்கும் பட்சத்தில் அது கிரிமினல் வழக்காக கருதப்படுகிறது.

கிரிமினல் குற்றங்களை விசாரணை செய்வதற்கு காவல் துறை இருக்கிறது. கிரிமினல் குற்றத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம்.

ஒரு நபர் கிரிமினல் குற்றத்தை செய்தார் என்றால் புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலைய அதிகாரி அந்த புகாரை பதிவு செய்து அந்த நபரின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார், உண்மையில் அந்த நபர் குற்றம் செய்தவர் என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும்.

காவல் நிலையத்தில் எப்படி புகார் அளிக்க வேண்டும்

காவல் நிலையத்தில் நீங்கள் புகார் அளிக்கும் போது அதை வாய்மொழியாக இல்லாமல் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுப்பது தான் வழிமுறையாகும். என்ன பிரச்சனை நடந்தது, எதிர்மனுதாரருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம், குற்றத்திற்கான காரணம் என்ன, அவர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையை பற்றி தெளிவாக எழுதி எழுத்துப்பூர்வமான ஒரு புகாரை காவல்நிலையத்தில் கொடுக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உங்களால் எழுத முடியாவிட்டால் காவல் நிலையத்தில் காவல் நிலைய எழுத்தாளர் இருப்பார் அவரிடம் சொல்லச் சொல்ல அவர் உங்களுடைய புகாரை எழுதிக் கொள்வார்.

புகாரை பெற்றுக் கொண்ட பின் என்ன நடக்கும்

காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொண்ட பிறகு அந்த குற்றம் நடந்திருக்கிறதா என்று காவல் நிலைய அதிகாரி ஆய்வு செய்வார். அதன் அடிப்படையில் குற்றம் நடந்திருக்கிறது என்றால் உடனடியாக முதல் தகவல் அறிக்கையை தயார் செய்து குற்றவாளி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் படி குற்றங்கள் தனித்தனியாக பதிவு செய்யப்படும்.

மேலும் வேறு சட்டங்களின் அடிப்படையில் குற்றம் நடைபெற்று இருக்கிறது என்றால் எந்தெந்த கிரிமினல் குற்றங்களின் அடிப்படையில் சம்பவம் நடந்திருக்கிறது என்பதை குறிப்பிட்டு அந்த கிரிமினல் வழக்குகளின் பிரிவுகளை பதிவிட்டு ஒரு காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பார்.

அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மீது சிவில் சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பது எப்படி?

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்களைப் பற்றி தவறாக பேசி அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் தீர்க்க விரும்பினால் நீங்கள் எடுக்க வேண்டிய சில படிகள் உள்ளன:

1.தொடர்பு கொண்டு பேசுங்கள்

உங்கள் அண்டை வீட்டாருடன் வெளிப்படையான மற்றும் நேர்மையாக தொடர்பு கொண்டு பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள், பேசி விஷயத்தைத் தீர்க்க முயற்சி செய்வது நல்லது. அவர்கள் தவறான கருத்துக்களை பரப்புவதன் மூலமாக அண்டை வீட்டாராகிய உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பேசி சரி செய்து கொள்வது நல்லது. உங்களது கவலைகளை அவர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும், இந்த நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தும் மூலமாக பிரச்சனையை தவிர்க்க முடியும்.

2.மத்தியஸ்தம்

நேரடித் தொடர்பு சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், நீங்கள் மத்தியஸ்தம் செய்ய ஏற்பாடு செய்யலாம். மத்தியஸ்தம் என்பது உங்களுக்கும் உங்கள் பக்கத்து வீட்டுகாரருக்கும் நடுநிலையான ஒருவரை தொடர்பு கொண்டு பேசி மத்தியஸ்தம் செய்து இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும், அவர் உங்களுக்கும் உங்கள் அண்டை வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றி பேசி உங்களுக்குள் பரஸ்பரம் ஒரு புரிதலை ஏற்படுத்த முடியும், இதன் மூலமாக உங்களுக்குள் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடு பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை காண முடியும். சிறிய பிரச்சனைகளாக இருந்தால் மத்தியஸ்தம் பேசி ஒரு பிரச்சினையை முடிப்பது என்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்..

3.நிறுத்தம் மற்றும் விலகல் கடிதம்

நிலைமையைத் தீர்க்க நீங்கள் முயற்சித்த போதிலும் எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால், நீங்கள் நிறுத்தம் மற்றும் விலகல் கடிதத்தை அனுப்புவது குறித்து பரிசீலிக்கலாம். ஒரு வழக்கறிஞரால் வரைவு செய்யப்பட்ட இந்தக் கடிதம், உங்களைப் பற்றி அவதூறான அல்லது தீங்கிழைக்கும் அறிக்கைகளை உங்கள் அண்டை வீட்டுக்காரர் நிறுத்த வேண்டும் என்று கோருகிறது. இந்தக் கடிதம் சட்டப்பூர்வ அடிப்படையாக இல்லை என்றாலும், அண்டை வீட்டாரோடு நடைப்பெறும் பிரச்சனையை முடித்து வைப்பதற்கு ஒரு கடிதத்தை (லீகல் நோட்டீசை) அனுப்பி வைக்கலாம், இதன் மூலமாக இந்த பிரச்சனையை இதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று அண்டை வீட்டாரிடம் எடுத்துரைத்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். இந்தக் கடிதத்தின் மூலமாக பக்கத்து வீட்டுக்காரர் மேலும் தொடர்ந்து தவறாக பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கடிதத்தின் மூலமாக ஒரு எச்சரிக்கை அறிக்கையை பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியப்படுத்த முடியும். இதன் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கடிதம் எழுதும் முறை தொடர்ந்து ஏற்படுகிற பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இது விளங்குகிறது வீண் வாய் சண்டைகளை தவிர்ப்பதற்கும் இது பயன்படுகிறது.

4.சட்ட நடவடிக்கை

உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களைப் பற்றிய அவதூறுகளை சமூகத்தில் பரப்பி அதன் மூலமாக உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் என்றால் அவர் மீது உரிமையியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். அவர் மீது அவதூறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும், இதன் மூலமாக சமூகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட கெட்ட பெயருக்கு மான நஷ்டமாக அவரிடமிருந்து ஒரு பெருந்தொகையை மான நஷ்டமாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு சட்ட ரீதியாக வழக்கறிஞரை அணுகி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய | வேண்டும்.

தகவல்

என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

Kumaravel Anbalagan

17/05/2024

சட்டம் ஒரு பார்வை

இறப்புக்குப் பின்பு ஒருவரின் ஆதார் கார்டை, பான் (PAN) Card, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் (PASSPORT) போன்ற ஆவணங்களை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக உள்ளன. உங்களின் அனைத்து பரிவர்த்தனைக்கும் தேவைப்படும், இது போன்ற அரசாங்க ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆதார் கார்டு: ஆதார் முக்கியமான முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கார்டு அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. எல்பிஜி மானியம், அரசாங்க உதவித்தொகை, EPF கணக்குகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் நம்பர் கட்டாயமாகும். ஒருவர் இறந்து இறப்புச் சான்றிதழைப் பெற்றால் ஆதார் தானாகவே செயலிழந்து விடும் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் அவ்வாறு இல்லை. ஆதாரை இறப்பு தேதியை வைத்து புதுப்பிக்க முடியாது. இதுபோன்ற இறந்தவர்களின் ஆதார் அட்டைகளை பயோமெட்ரிக் லாக் செய்வதன் மூலம் பாதுகாக்கலாம். இதனால் இறந்தவரின் ஆதாரத்தை தவறாக மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வதால் இறந்தவரின் ஆதாரை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

பான் கார்டு: பேங்க் அக்கவுண்ட், டிமேட் அக்கவுண்ட், ITR தாக்கல் செய்வது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில் வருமானவரித்துறையினரிடம் இருந்து இறந்தவருக்கு ஏதேனும் ரீஃபண்ட் வர இருந்தால் நீங்கள் அவருடைய வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது போன்ற எல்லா விஷயங்களும் முடிவடைந்த பின்னர் பான் கார்டை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கலாம்.
இறந்தவரின் பான் கார்டு ஒப்படைக்க என்ன செய்ய வேண்டும்?: இறந்தவரின் வாரிசு அல்லது குடும்ப உறுப்பினர் மதிப்பீட்டு அதிகாரிக்கு (AO) ஒரு விண்ணப்பத்தை எழுத வேண்டும். அதில் என்ன காரணத்தினால் பான் கார்டு வைத்திருப்பவர் இறந்தார், அவருடைய பெயர், பான் விவரங்கள், பிறந்த தேதி போன்றவற்றை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் ஜெராக்ஸ் காப்பியை கடிதத்தில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் பான் விவரங்களை ஒப்படைப்பது என்பது கட்டாயம் இல்லை. இருந்தாலும் தேவைப்பட்டால் நீங்கள் அதனை ஒப்படைக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை: வாக்காளர் அட்டையை பொருத்தவரை, வாக்காளர் விதிகள் 1960-இன் கீழ் இறந்தவருடைய வாக்காளர் அட்டையை ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இறந்தவரின் சட்டபூர்வ வாரிசு உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று படிவம் எண் 7 -ஐ பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதளை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட்: இறந்தவரின் பாஸ்போர்ட் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தானாகவே காலாவதியாகிவிடும். இதுபோன்ற இறந்தவர்களின் ஆவணங்களை சட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படாவிட்டால் எந்த அபராதமும் இல்லை. இருப்பினும், இது போன்ற ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது அல்லது டி-ஆக்டிவேட் செய்வது, ஆன்லைனில் மோசடிகள் நடப்பதைத் தவிர்க்க உதவும். ஒரு வேலை, உங்களால் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியவில்லை என்றாலும், நீங்களே இறந்தவர்களின் ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்கலாம்.

தகவல்

என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

Kumaravel Anbalagan

17/05/2024

*NHRCCB,TAMILNADU*
*தினம் ஒரு சட்டம் கற்றுக் கொள்ளுங்கள் அது உங்களை தலை நிமிர்ந்து வாழ செய்யும்..*
*''''''''''''''''''''''''''''''''''''''''*
*வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை! தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்*

சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என்று விளக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும், பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் A.D. ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர். கலைமதி அமர்வு, அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

16/05/2024

சார்பதிவகத்தில்_தடை_மனு_எப்படி_வழங்க_வேண்டும்*

1) உங்களுக்கு உரிமை இருக்கிற அல்லது உரிமை பட்டம் இருக்கிற அல்லது உரிமையில் ஒரு கூறு இருக்கிற பங்கு இருக்கிற ஒரு சொத்தை வேறு யாரோ போலி ஆவணங்கள் அல்லது தவறான ஆவணங்கள் மூலமோ ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ நீதிமன்றம் வங்கி வருவாய்துறை போன்ற வேறு ஏதாவது அமைப்பகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ புதிதாய் பத்திரங்கள் உருவாக்கி மேலும் சட்ட குழப்பங்கள் உருவாக்கும் நோக்கில் பத்திரப்பதிவு செய்ய தாக்கல் செய்வார்கள் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்த சார் பதிவாளருக்கு உங்கள் தரப்பு நியாயத்தை எழுதி தடை மனு என்று எழுதிக் கொடுக்கலாம்.

2) தடை மனுவில் சொத்து விவரங்களை தெளிவாக எழுதி அதற்கான உங்கள் தரப்பு உரிமைக்கான ஆவணங்களை இணைத்து எதிர்தரப்பினர் பத்திரப்பதிவு தாக்கல் செய்வதை ஆட்சேபித்து மனு எழுதி அதனை நேரில் கொடுக்க வேண்டும்.சார்பதிவாளரை சந்தித்து நேரடியாக முறையிட வேண்டும்.

3) பிறகு அன்றைக்கு மாலையே பதிவு தபாலில் அதே மனுவை சார்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். நேற்று நேரடியாக வந்து பேசி மனு கொடுத்த நபர் இன்று பதிவு தபால் அனுப்பி இருக்கிறார் என்று சார்பதிவாளர் மனசில் பதிய வைக்க வேண்டும்.பிறகு அனுப்பிய பதிவு தபாலுக்கான அத்தாட்சியை திரும்பப் பெறுதல் வேண்டும் .

4) பிறகு தபால் அனுப்பிய அத்தாட்சியை (acknowledgement card) எடுத்து கொண்டு மீண்டும் நேரடியாக சார்பதிவாளரை சந்திதித்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி பத்திரபதிவு தாக்கலுக்கு தடை சொல்ல வேண்டும்

5) ஆக இரண்டு முறை நேரடியாக சந்தித்து ஒரு முறை மனு ,ஒரு முறை தபாலில் திரும்பி வந்த அத்தாட்சி அட்டை காட்டி சார்பதிவாளரிடம் பேசி இருக்கிறீர்கள்.நீங்கள் சென்ற இரண்டு நாளுக்கு இடையில் ஒருநாள் உங்கள் பதிவு தபால் உங்களை உங்கள் விஷயத்தை நினைவு ஊட்டி இருக்கிறீர்கள்.

6) சார்பதிவாளர் அதிக கூட்டத்தில் நெருக்கடியாக இருக்கும் போது அவசர அவசரமாக உங்கள் வேலையை முடிக்கும் நோக்கில் இந்த காரியத்தை செய்ய கூடாது.ஆற அமர நின்று நிதானமா விளையாட வேண்டிய விளையாட்டு இந்த தடை மனு விளையாட்டு.

7) சிலர் சார்பதிவாளரிடம் எரிச்சலை ஏற்படுத்தும் படியும் அதிகார ஆணவமாகவும் அல்லது புலம்பி அழுதும் ஓலமிட்டும் முறையிடுவர்.அவையெல்லாம் தேவையில்லாதது சார்பதிவாளர் ஒரு நடுநிலையான அதிகாரி என்ற எண்ண ஓட்டத்திலேயே அவரிடம் பேசுங்கள்.

8) மேற்படி தடை மனுவை சார் பதிவாளர் அதிக வேலைப்பளுவிலோஅல்லது வேண்டும் என்ற காரணத்தினாலோ அல்லது தெரியாமலோ எதிர்தரப்பை விசாரிக்காமல் காலம் தாழ்த்தலாம்.

9) அப்படி காலம் தாழ்த்தி இழுத்துகொண்டு இருந்தால் கொடுக்காமல் இருந்தால் நீங்கள்மீண்டும் ஒரு நினைவு ஊட்டல் கடிதம் நேரடியாகவும் பதிவு தபால் மூலமும் அனுப்ப வேண்டும். தபாலில் வந்த அத்தாட்சி அட்டையை வைத்து மீண்டும் சார்பதிவாளரை சந்திக்க வேண்டும்(இந்த வேலையில் எல்லாம் சலிக்கவே கூடது காரியம்தான் முக்கியம்)

10) இரண்டாவது அனுப்பும் நினைவூட்டல் கடித்த்தில் பத்திரப்பதிவு துறையின் சுற்றறிக்கை கோப்பு எண் 46 44 5 / c1 2010 என்ற சுற்றறிக்கையின் படி விசாரக்க வேண்டும் என்ற வசனம் குறிப்பிட்டு இருப்பது மிகுந்த பயனை தரும்.

11) சார் பதிவாளர் உங்களுடைய எதிர்த்தரப்பினருக்கும் தங்களுக்கும் அழைப்பாணை அனுப்பி உடனடியாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி எதிர் தரப்பினருக்கு ஆவணங்கள் சாதகமாக இருக்கிறது என்று சார்பதிவாளர் நம்பினால் அவர் பத்திரத்தை போடுவர் .சார்பதிவாளர் மன நிறைவு அடையாமல் இருக்க வேண்டியது நீங்கள் சொல்லும் காரணத்தில் இருக்கிறது.

12. உங்களுக்கு ஆவணங்கள் சாதகமாக இருக்கிறது என்று சார்பதிவாளர் உணர்ந்தால் மனநிறைவு அடைந்தால் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவார். சார்பதிவாளர் பத்திரபதிவு மறுத்துவிட்டார் என்றவுடன் நீங்கள் மனநிறைவு அடைந்து விடாதீர்கள்.

13) பதிவு மறுத்ததற்கான காரணத்தை விரைவிலேயே சார்பதிவக புத்தகம் இரண்டில் எழுதி விட வேண்டும்.அந்த எழுதுற சாங்கியம் முடிந்துவிட்டதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

14) இரு தரப்பு விசாரணையின்போதும் விசாரணைகளை தொகுத்து சார்பதிவாளரின் முடிவை எழுத்துபூர்வமாக அறிக்கையாக இரண்டு தரப்பிற்கும் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் தடை மனு கோரிக்கை முற்று பெற்றது என்று ஆகும்

15) தடை மனு சார்பதிவாளர் வாங்குவார் விசாரணை நடத்துவது இல்லை. இறுதி முடிவை எழுத்தால் உங்களிடம் கொடுப்பது இல்லை.புத்தகம் 2 ல் பதிவதுல்லை இது போன்ற மனுக்களுடன் வந்தாலே அன்றைய சார்பதிவாளரின் நேரத்தை வருவாயை கெடுக்க வந்த நபராகவே உங்களை பார்க்கிறார்களா ?

16) வில்லங்கமான நபராகவே உங்களை பற்றி பார்க்கிறார்கள் என்று உணர்ந்தால்கொஞ்சம் சமூகத்தில் நற்பெயருடன் விளங்குபவர் அல்லது வழக்கறிஞர் துணை மூலம் இந்த தடை மனுவை கொடுக்கலாம்.

17) மேற்படி தடை மனுவை மாவட்ட பதிவாளருக்கும் பதிவு தபாலில் அனுப்பி அத்தாட்சி வந்தவுடன் நேரடியாகவும் சென்று முறையிடலாம்.அவருக்கு கீழ் உள்ள சார்பதிவாளருக்கு அவர் நடவடிக்கை எடுக்க சொல்லி பேச வைக்கலாம்.....
என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

Kumaravel Anbalagan

16/05/2024

சட்டம் ஒரு பார்வை

"பிறக்காத குழந்தையின் மீது உயில்"

*பிறக்காத குழந்தைக்கு சொத்தைக் கொடுப்பது*

இந்துக்களின் உயில், செட்டில்மெண்டுகளில், பிறக்காத குழந்தைக்கும் எழுதி வைக்கலாம் என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் பிரிவு 13-ல் சொல்லி உள்ளது. எனவே ஒரு இந்துவின் உயில் அல்லது செட்டில்மெண்ட் பத்திரத்தில் (தானப்பத்திரத்தில்) ஒருவர், திருமணம் ஆகாத தன் மகனுக்கோ, மகளுக்கோ (அதாவது அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு) அவரின் சொத்தை செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்து, அதை அவரின் மகன்/மகள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வந்து, பின்னர் அவர்களுக்கு இனிமேல் பிறக்கும் குழந்தைகள் முழு உரிமையுடன் அந்தச் சொத்தை அடையும்படி எழுதி வைக்கமுடியும்.

சொத்து மாற்றம் என்றால் என்ன (What is Transfer of Property):

இப்படி சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 13-ல் சொல்லி உள்ளதில் சிலர் குழம்பி விடுகின்றனர். பொதுவாக, சொத்துரிமை மாற்றுச் சட்டம் Transfer of property-ல் “சொத்து மாற்றம்” என்றால் என்ன என்று அந்தச் சட்டத்தின் பிரிவு 5-ல் சொல்லி உள்ளது. அதன்படி, ஒரு சொத்தை (அசையும் சொத்து, அசையாச் சொத்து) ஒரு உயிர் உள்ள நபர், மற்றொரு உயிர் உள்ள நபருக்கு, சொத்தை உரிமை மாற்றிக் கொடுப்பது என்று விளக்கி உள்ளது. (Transfer of property means – an act by which a living person conveys property to another living person). இங்கு “உயிர் உள்ள நபர்” என்பதற்கு விளக்கமாக, மனிதர்களையும், கம்பெனிகளையும், தனிநபர் நிறுவனங்களையும், கூட்டு நிறுவனங்களையும், சொசைட்டிகளையும் சேரத்தே “உயிர் உள்ள நபர்” என்று சொல்லி உள்ளது. எனவே கம்பெனிகளும் ஒரு உயிர் உள்ள நபர் போலவே என்று இந்தச் சட்டம் விளக்கி உள்ளது.

ஆனால், பிரிவு 13-ல் பிறக்காத பிள்ளை என்பது ஒரு உயிர் உள்ள மனிதன் இல்லையே, அப்படி இருக்கும்போது, அவனுக்கு எப்படி சொத்தை மாற்றம் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்துக்களுக்கு மட்டும் அப்படி ஒரு சிறப்பு சலுகையை, இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 இவை இரண்டிலும் இந்தச் சலுகையைக் கொடுத்துள்ளது.

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 என்பது கிறிஸ்தவர்களின் வாரிசு உரிமை பற்றியது. மேலும் அதில் இந்துக்களின் உயில் எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாகச் சொல்லி உள்ளது. அதை அப்படியே சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் 2-வது அத்தியாயம் (பிரிவுகள் 5-லிருந்து 53ஏ வரை) சொல்லி உள்ளது. இது ஒன்றை ஒன்று காப்பி அடித்தது போலவே இருக்கும்.

இந்துக்களின் பிறக்காத பிள்ளைக்கு ஒருவர், தனது சொத்தை எழுதிக் கொடுப்பது என்பது, இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 5-க்கு எதிராகவே உள்ளது. எப்படி என்றால்: அந்த சட்டப்படி, உயிரோடு இருப்பர், மற்றொரு உயிரோடு இருப்பவருக்கு மட்டுமே சொத்தை கொடுக்க முடியும் என்று பிரிவு 5-ல் சொல்லி உள்ளது.

ஆனால் இந்த பிரிவு 5-க்கு விதிவிலக்காகவே, அந்த சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவு 13-ல் சொல்லப் பட்டுள்ளது. அந்த பிரிவு 13-ன்படி, பிறக்காத பிள்ளைக்கும் சொத்தை மாற்றிக் கொடுக்கலாம் என்று சொல்லி உள்ளது. (ஆண், பெண் யாராக இருந்தாலும், தன்னுடைய பிள்ளையாக இருந்தாலும், வேறு யாருடைய பிள்ளையாக இருந்தாலும் சரியே).

அப்படி என்றால், அந்த பிறக்காத பிள்ளை, எப்படி அந்த சொத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற சந்தேகம் எழுகிறது. சொத்தை தானம் கொடுக்கும்போது, அதை வாங்கிக் கொள்வதற்கு ஒரு ஆள் வேண்டும். அவர்தான் இன்னும் பிறக்கவே இல்லையே என்பதே அந்த சந்தேகம்.

அதற்குதான், அந்த பிரிவு 13-ல், ஒருவர் ஒரு சொத்தை, உயிருடன் இருப்பவருக்கு கொடுத்து, அவர் காலத்துக்குப் பின்னர், அந்த பிறக்காத பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தி உள்ளது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதாவது, ஒருவர் தன் சொத்தை, செட்டில்மெண்ட் (அல்லது உயில்) எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் ஆயுட்காலம் வரை அதை அனுபவிக்க உரிமை உண்டு என்றும், அவரின் காலத்துக்குப் பின்னர், அவரின் அப்போது உயிருடன் உள்ள திருமணம் ஆகாத மகன், அவன் ஆயுட்காலம் வரை இந்த சொத்தை அனுபவித்து வரு வேண்டும் என்றும், அந்த மகன் ஆயுட்காலத்துக்குப் பின்னர், அவனுக்கு திருமணம் ஆகி அதன் மூலம் பிறந்த அவனின் மகனுக்கு முழு உரிமையுடன் சேர வேண்டும் என்று எழுதி இருக்கிறார். இந்த செட்டில்மெண்ட் எழுதும்போது, அவரின் மகன் மட்டுமே உயிருடன் இருக்கிறான். பேரன் பிறக்கவேயில்லை. இப்படிப்பட்ட செட்டில்மெண்ட் சட்டப்படி செல்லும்.Contingent Interrest நடக்கும் வாய்ப்பு உள்ள செயல்கள்:

ஆனால், அந்த பிறக்காத பிள்ளையின், பிறக்காத பிள்ளைக்கு அவ்வாறு எழுதி வைக்க முடியாது. ஏனென்றால், பிறக்காத பிள்ளை என்பதே, பிறக்குமா பிறக்காதா என்பதே சந்தேகம். அப்படி இருக்கும்போது, பிறக்காத பிள்ளையின், பிறக்காத பிள்ளை என்பது இரண்டு சந்தேகங்களை கொண்டது. இதை Contingent Interest என்று சட்டம் சொல்கிறது. அதாவது, நடக்குமா நடக்காதா என்ற ஒரு வாய்ப்புக்கு மட்டும் சட்டம் அனுமதிக்கிறது. அப்படி சந்தேகத்தில் இருக்கிற இன்னொரு வாய்ப்புக்கு சட்டம் அனுமதிக்கவில்லை.

இன்னொரு உதாரணம்: ஒருவர் தன் சொத்தை, தனது பிறக்காத மகனுக்கு எழுதிக் கொடுக்கிறார். அவர் செட்டில்மெண்ட் எழுதும்போது, அவர் மகன் பிறக்கவே இல்லை. இது செல்லும். ஆனால், சொத்தை கொடுத்தவர் இறக்கும்போது, அந்த மகன் பிறந்து இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த பத்திரம் செல்லாது. அவர் இறந்தபின்னர் பிறந்த மகனுக்கு சொத்து கிடைக்காது. ஏனென்றால், அவர் இறக்கும்போது, சொத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளே இல்லை.

இதையே, அவர் தன் மனைவி அவள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வந்து, அவள் ஆயுட்காலத்துக்குப் பின்னர், அவரின் பிறக்காத மகன் அடைய வேண்டும் என்று எழுதி இருந்தால் அது செல்லும். ஒரே வேளை, அவளுக்கு மகனே பிறக்காமல் போய் விட்டால், Contingent Interest என்னும் வாய்ப்பு நடக்கவே இல்லை என்பதால், அவளே முழுஉரிமையுடன் அடைந்து கொள்வாள். (அதாவது அவள் கணவன் இறந்துவிட்டால், அவளுக்கு குழந்தை பிறக்காது, அல்லது அவளுக்கு 50 வயதை தாண்டி விட்டால் அவள் Menopause என்னும் கரு உருவாகும் நிலை முடிந்து விட்டால், அப்போது அவள் சொத்தை முழுஉரிமையுடன் அடைந்து கொள்வாள்.

ஆக, Contingent என்பது நடக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று பொருள். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. இனி நடக்கலாம் என்ற வாய்ப்பு உள்ளவைகளை இவ்வாறு Contingent என்று சட்டம் சொல்கிறது. ஒருவன் ஆகாயத்தில் நடந்து சென்றால் அவனுக்கு என் சொத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதி இருந்தால், அது எப்போதுமே நடக்க முடியாத வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எழுதி இருந்தால், நடக்க முடியாத வாய்ப்பு (Not certain to happen) என்று சட்டம் கருதி அந்த நிபந்தனையே செல்லாது என்றும், எனவே அந்த நடத்திக் காட்ட முடியாத நிபந்தனையை நிறைவேற்றாமலேயே அவனே சொத்தை முழுஉரிமையுடன் அடைந்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.

இப்படிப்பட்ட விபரங்களைத்தான் இந்திய சொத்துரிமை சட்டம் அத்தியாயம் 2-ல் பிரிவு 5 முதல் 53ஏ வரை சொல்லி உள்ளது. இந்த அத்தியாயம் 2-ல் சொல்லி உள்ள எவையும் முஸ்லீம்களுக்கு பொருந்தாது. ஆகவே முஸ்லீம்கள், பிறக்காத பிள்ளைக்கு சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது.முகமதியர்களின் (Mohammedan or Muslim) செட்டில்மெண்ட் அல்லது தானம்:

இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 என்பது ஒரு பொதுச் சட்டம். அது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் என்பது பொதுவான விதி. ஆனால், அந்த சட்டத்தின் அத்தியாயம்-2 (Chapter-II) என்பது, பிறக்காத குழந்தைக்கு சொத்துக் கொடுப்பது பற்றிச் சொல்வதால், அது முகமதியர்களுக்கு அந்த அத்தியாயம் மட்டும் செல்லாது என்று அந்தச் சட்டத்தில் விலக்கி வைக்கப் பட்டுள்ளது.

அதே போலவே, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் தானம் என்பதைப் பற்றிச் சொல்லும் பிரிவான பிரிவு 122-ம் அதேபோல முகமதியர்களுக்குச் செல்லாது என்று விலக்கி வைக்கப் பட்டுள்ளது.

ஏனென்றால், ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போது, இந்துக்கள் பிறக்காத பிள்ளைக்கும் கொடுப்பது வழக்கம். அதைப்பற்றி அந்த சட்டம் பிரிவு 122 சொல்வதால், அதையும் முகமதியர்களுக்குச் செல்லாது என்று விலக்கி விட்டுள்ளது.

முகமதியர்களின் தானம் (செட்டில்மெண்ட்) சற்று வித்தியாசமானது. முகமதிய சட்டப்படி, (ஷரியத் சட்டப்படி- Sharit Law), ஒரு முகமதியர், அவரின் சொத்தை எந்த பத்திரமும் (தானம், செட்டில்மெண்ட்) எழுதாமலேயே, வாய்மொழியாக, அவரின் சொத்தை யாருக்காவது தானம் கொடுக்கலாம் என்று முகமதிய சட்டம் சொல்கிறது. இதை ஷரியத் சட்டப்படி ஹிபா (Hiba) என்பர். ஹிபா என்றால் அரபு மொழியில் “தானம்” என்று பொருள். ஹிபா என்ற தானம் கொடுக்கும்போது, பத்திரம் எழுதிக் கொள்ள வேண்டியதில்லை என்றும் அதை பதிவு செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் சொல்கிறது. ஆனால், அந்த தானம் கொடுக்கும் சொத்தை உடனே முழு உரிமையுடன் கொடுக்க வேண்டும் என்பதே நிபந்தனை. ஆயுட்கால உரிமை ஏதும் வைத்துக் கொள்ள முடியாது. அதேபோல பிறக்காத பிள்ளைக்கும் கொடுக்க முடியாது. ஏனென்றால், சொத்தை தானமாகப் பெறுபவர் அன்றே கைநீட்டி அதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது அதன் பொருள்.

ஆனாலும், முகமதியர் எழுதிக் கொள்ளும் செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதிப் பதிவு செய்து கொள்வது நல்லது என்பதால், (அப்போதுதான் அது ஒரு பத்திர ஆதாரமாக இருக்கும் என்பதால்), பலரும் செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதிப் பதிவு செய்து கொள்கின்றனர்.

இஸ்லாமியர்கள் செட்டில்மெண்ட் எழுதும் போது, கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், சொத்தின் முழு உரிமையும் அன்றே கொடுத்திருக்க வேண்டும். ஆயுட்கால உரிமை போன்றவைகளை எழுத முடியாது. பிறக்காத முடியும். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்)...

தகவல்

என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

Kumaravel Anbalagan

16/05/2024

பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்.

1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.

2. கிரயம், செட்டில்மெண்ட் (Settlement), பாகப்பிரிவினை (partition), உயில் சாசனம் (will) , பவர் பத்திரம் (Power), அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.

4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.

5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.

6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.

7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரண பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.

8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- மொத்த செலவும், 500 க்குள் முடியும்.

9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா (patta) மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.

11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.

12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.

14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.

15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.

16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.

17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்

18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.

20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.

தகவல்

என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

Kumaravel Anbalagan

16/05/2024

*நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர்களைக் கொண்டுவரும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்*

ஒரு முக்கிய முன்னேற்றமாக, செவ்வாய்க்கிழமை (மே 14) உச்ச நீதிமன்றம், மருத்துவ நிபுணர்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்த இந்திய மருத்துவக் கழகம் எதிராக வி.பி. சாந்தா வழக்கில் 1995 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது .
நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் , சேவைக் குறைபாட்டிற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் பொறுப்பேற்கலாமா என்ற பிரச்சனையை எழுப்பிய மேல்முறையீட்டு மனுவைத் தீர்ப்பளிக்கும் போது அவ்வாறு கூறியது. பிப்ரவரி 26 அன்று தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு முன், டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை நீண்ட நேரம் விசாரித்தது .

தீர்ப்பை உச்சரிக்கும் போது, ​​நீதிபதி திரிவேதி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் (2019ல் மீண்டும் அமல்படுத்தப்பட்டது) நோக்கமும் நோக்கமும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நெறிமுறையற்ற வணிக நடைமுறைகளிலிருந்து நுகர்வோருக்குப் பாதுகாப்பை வழங்குவதாகும் என்று கருத்து தெரிவித்தார்.

சட்டத்தின் வரம்பிற்குள் ஒரு தொழில் அல்லது நிபுணத்துவத்தை உள்ளடக்கியதாக சட்டமன்றம் எப்பொழுதும் உத்தேசித்துள்ளது என்று பரிந்துரைக்க எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

" இந்திய மருத்துவ சங்கத்திற்கு எதிராக VP சாந்தாவின் (1995) 6 SCC 651 இல் உள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் கருத்து தெரிவித்துள்ளோம், மேலும் அதை மறுபரிசீலனைக்கு பெரிய பெஞ்சிற்கு அனுப்புமாறு CJI க்கு கோரிக்கை விடுத்துள்ளோம் " என்று நீதிபதி திரிவேதி கூறினார். தீர்ப்பை வாசிக்கும் போது.

"வணிகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுத்தப்பட்ட தொழிலை நாங்கள் கொண்டுள்ளோம். ஒரு தொழிலுக்கு கற்றல் அல்லது அறிவியலின் சில துறைகளில் மேம்பட்ட கல்வி மற்றும் பயிற்சி தேவைப்படும் என்று நாங்கள் கூறியுள்ளோம். வேலையின் தன்மை நிபுணத்துவம் மற்றும் திறன் ஆகும், இதில் கணிசமான பகுதி கையேட்டை விட மனது. ஒரு தொழில்முறை நிபுணரின் பணியின் தன்மைக்கு, உயர் கல்வி மற்றும் பயிற்சி மற்றும் திறமை தேவை, மற்றும் சிறப்புத் துறைகளில் செயல்படும் திறன் மற்றும் சிறப்பு வகையான மனநல வேலைகளை உள்ளடக்கியது, உண்மையான வெற்றி ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. ஒரு தொழிலதிபர் அல்லது வர்த்தகர் அல்லது பொருட்கள் அல்லது பொருட்களின் சேவை வழங்குநருக்கு சமமாக அல்லது சமமாக நடத்தப்பட வேண்டும்" என்று நீதிபதி திரிவேதி கூறினார்.

"எனவே, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 2019 இல் மீண்டும் இயற்றப்பட்டதன் நோக்கமும் நோக்கமும் நுகர்வோருக்கு நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நெறிமுறையற்ற வணிக நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பை வழங்குவதாகும் என்று நாங்கள் கருதுகிறோம். சட்டமன்றம் பரிந்துரைக்க எதுவும் இல்லை. சட்டத்தின் வரம்பிற்குள் தொழில்கள் அல்லது தொழில் வல்லுநர்களை சேர்க்கும் நோக்கம் கொண்டது" என்று நீதிபதி திரிவேதி மேலும் கூறினார்.

2007 ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஆணையம் வழங்கிய தீர்ப்பில் இருந்து பார் உறுப்பினர்களுக்குப் பொருத்தமான பிரச்சினை வெளிப்பட்டது. வழக்கறிஞர்கள் வழங்கும் சேவைகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2 (o) இன் கீழ் உள்ளடங்கும் என்று ஆணையம் தீர்ப்பளித்தது. .

இந்த முடிவை ரத்து செய்யும் போது, ​​சேவைகளின் குறைபாட்டிற்காக வழக்கறிஞர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 (2019 இல் மீண்டும் அமல்படுத்தப்பட்டது) கீழ் பொறுப்பேற்க முடியாது என்று தீர்ப்பளித்தது. தொழில் மற்றும் வர்த்தகம் செய்யும் நபர்களிடமிருந்து தொழில் வல்லுநர்கள் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என்று அது நியாயப்படுத்தியது.

'வழக்கறிஞர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழலில் செயல்படுகிறார்கள்': வழக்கறிஞர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று SCAORA உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்துகிறது

டாக்டர்கள், இரு தொழில்களும் வெவ்வேறானவை என்பதால், வழக்கறிஞர்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

ஒரு இறையாண்மை செயல்பாட்டிற்கு உதவும் வழக்கறிஞர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞரைப் பொறுப்பாக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

வழக்கு தலைப்பு: அதன் தலைவர் ஜஸ்பிர் சிக் மாலிக் மூலம் இந்திய வழக்கறிஞர்களின் பட்டிமன்றம் எதிராக டி.கே.காந்தி PS தேசிய தொற்று நோய்கள் நிறுவனம்., டைரி எண்.- 27751 - 2007

தகவல்

என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

Kumaravel Anbalagan

Address

25e. Mohammed Pura 3rd Street
Ambur
635802

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:15pm - 9:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9am - 8:45pm
Friday 9:30am - 8:30pm
Saturday 10:15am - 7:45pm

Telephone

+917639895517

Website

Alerts

Be the first to know and let us send you an email when Document writer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Document writer:

Share