நம்ம தேவகோட்டை

நம்ம தேவகோட்டை நம்மதேவகோட்டை சம்பந்தமான அணைத்து
விதமானசெய்திகளும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களை பாலோ பண்ணுங்கள்
(1)

 #தேவகோட்டை வெள்ளையன் ஊருணி  தூர்வாரப்படுமா❓❓ #தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட  #வெள்ளையன் ஊரணி பல வருடங்களாக தூர்வாராமல்...
24/06/2026

#தேவகோட்டை வெள்ளையன் ஊருணி தூர்வாரப்படுமா❓❓

#தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட #வெள்ளையன் ஊரணி பல வருடங்களாக தூர்வாராமல் உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் நீராதாரத்திற்கு உதவி வரும் இந்த ஊருணியில் ஆகாயத்தாமரைகள், கரையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஊரணியில் அடிக்கடி நீர் வற்றி விடுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை...

Chief Minister of Tamil Nadu Sivagangai District Administration Sethu Tk DrPrabhu TK

#தேவகோட்டை
#வெள்ளையன்ஊருணி
#ஊருணிதூர்வாரம்
#நகராட்சிநடவடிக்கை
#பொதுமக்கள்கோரிக்கை
#நீராதாரபாதுகாப்பு





22/06/2026

Nammadevakottai ❤️

#தேவகோட்டை
#தேவகோட்டை


#தேவகோட்டை #

சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான தேவகோட்டையில் பல ஆண்டுகளாக அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததால், குறிப்பாக ஏ...
16/06/2026

சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான தேவகோட்டையில் பல ஆண்டுகளாக அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததால், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேல்நிலைப் படிப்பை தொடர மாணவர்கள் தொலைதூர பகுதிகளுக்கு தினமும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நேர விரயம் மற்றும் கூடுதல் செலவுகள் பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

எனவே, மாணவர்களின் கல்வி நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றை உடனடியாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📢 "ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க தேவகோட்டைக்கு அரசு மேல்நிலைப் பள்ளி அவசியம்" என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#பொதுமக்கள்கோரிக்கை #தேவகோட்டை #அரசுமேல்நிலைப்பள்ளி #சிவகங்கை #நம்மதேவகோட்டை

Prabhu TK கா.சுந்தரலிங்கம் சேர்மன் I love Devakottai ❤️ 𝘿𝙚𝙫𝙖𝙠𝙤𝙩𝙩𝙖𝙞 𝙂𝙚𝙩𝙝𝙪 ⚡ Sivagangai District Administration Chief Minister of Tamil Nadu Nadu school Education department fans

தேவகோட்டை மக்களே!நம் ஊரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வசதிகள் தேவை என்று உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்...
15/06/2026

தேவகோட்டை மக்களே!
நம் ஊரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வசதிகள் தேவை என்று உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

🛣️ சாலை வசதி
💡 தெருவிளக்கு வசதி
🌳 பூங்கா மற்றும் பொதுமக்கள் ஓய்விடங்கள்
🚰 குடிநீர் வசதி
🚌 போக்குவரத்து வசதி
🏥 மருத்துவ வசதிகள்

உங்கள் கருத்துகளும் கோரிக்கைகளும் தேவகோட்டையின் வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும்.

#நம்ம_தேவகோட்டை #மக்கள்_குரல் #தேவகோட்டை_வளர்ச்சி #உங்கள்_கருத்து_எங்கள்_முன்னேற்றம்

தேவகோட்டையில் தீவிர வாகன சோதனை: போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்..தேவகோட்டை, ஜூன்.14- சிவகங்கை மாவட்டம், தேவ...
14/06/2026

தேவகோட்டையில் தீவிர வாகன சோதனை: போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்..

தேவகோட்டை, ஜூன்.14- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள சென்ட் மேரிஸ் (St. Mary's) மேல்நிலைப்பள்ளி அருகில் போக்குவரத்து காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் (ஷிஷிமி) மைக்கேல் அஸ்லாம் தலைமையில் இந்த வாகன சோதனை நடைபெற்றது.

இச்சோதனையின் போது, பதிவு எண் பலகை (Number Plate) இல்லாமல் வந்த வாகனங்களுக்கும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகனங்களுக்கும்
காவல்துறையினர் அபராதம் விதித்தனர். விழிப்புணர்வு: அபராதம் விதித்ததோடு மட்டுமின்றி, வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த வாகன சோதனையில், சிறப்பு சார்பு
ஆய்வாளருடன் காவலர்கள் கெளதம், யோக ராஜா மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். காவல்துறை பயினரின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

📢 பொதுமக்கள் கோரிக்கை 📢தேவகோட்டை நகரின் முக்கிய நுழைவுப் பகுதியாக விளங்கும் முள்ளு குண்டு அருகே, நகரின் அடையாளத்தை வெளிப...
14/06/2026

📢 பொதுமக்கள் கோரிக்கை 📢

தேவகோட்டை நகரின் முக்கிய நுழைவுப் பகுதியாக விளங்கும் முள்ளு குண்டு அருகே, நகரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் "தேவகோட்டை நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற வாசகத்துடன் பிரம்மாண்டமான வரவேற்பு ஆர்ச் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செட்டிநாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை பெருமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆர்ச் அமைக்கப்பட்டால், தேவகோட்டைக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பாக அமையும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் வண்ணமயமான மின் விளக்குகளுடன் இந்த வரவேற்பு ஆர்ச் அமைக்கப்பட்டால் நகரின் அழகு மேலும் அதிகரிப்பதோடு, தேவகோட்டையின் தனித்துவ அடையாளமாகவும் விளங்கும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் இதனை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

#தேவகோட்டை #மக்கள்கோரிக்கை #வரவேற்புஆர்ச் #தேவகோட்டைநகராட்சி Devakottai PublicDemand TamilNews

கா.சுந்தரலிங்கம் நகர்மன்ற தலைவர் தேவகோட்டை Sethu Tk

தேவகோட்டைக்கு ஏர்போர்ட் வருதாம்... ✈️இனி பஸ் டிக்கெட் இல்லை, நேரா பிளைட் கனவு தான்!" 😂 😄 தேவகோட்டைக்கு விமான நிலையம் வந்...
14/06/2026

தேவகோட்டைக்கு ஏர்போர்ட் வருதாம்... ✈️
இனி பஸ் டிக்கெட் இல்லை, நேரா பிளைட் கனவு தான்!" 😂

😄 தேவகோட்டைக்கு விமான நிலையம் வந்தா எப்படி இருக்கும்?

#தேவகோட்டை #காமெடி #விமானநிலையம் ✈️😂

⚡ மின் தடை அறிவிப்பு..சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உப கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் வரும் 15.06.2026 அன்று ...
13/06/2026

⚡ மின் தடை அறிவிப்பு..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உப கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் வரும் 15.06.2026 அன்று திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாதாந்திர
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை.

தேவகோட்டை டவுன், இராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை கண்ணங்கோட்டை, காரை, கோட்ளர், வேப்பங்குளம், கல்லங்குடி, திருமணவயல் நாகாடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் தடை ஏற்படும்.

#தேவகோட்டை

#தேவகோட்டை_செய்திகள்
#மின்தடை



#மின்வாரியம்
#சிவகங்கை










⚡📰

✈️வெளிநாட்டு வேலை மோசடிகளில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற, போலி ஏஜென்சிகளை சரியாக அடையாளம் காண்பது மிகவும் அவசியம். ஏம...
12/06/2026

✈️வெளிநாட்டு வேலை மோசடிகளில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற, போலி ஏஜென்சிகளை சரியாக அடையாளம் காண்பது மிகவும் அவசியம். ஏமாற்றுபவர்களை எளிதாகக் கண்டறிய சில முக்கிய வழிமுறைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

⛔️போலி ஏஜென்சிகளைக் காட்டிக் கொடுக்கும் 5 முக்கிய அறிகுறிகள்

⚠️சுற்றுலா விசாவில் வேலை (Tourist Visa Trap): ஒரு ஏஜென்சி உங்களை 'சுற்றுலா விசா' (Visit/Tourist Visa) அல்லது 'பிசினஸ் விசாவில்' வெளிநாட்டிற்குச் சென்று, அங்கு சென்றதும் வேலை விசாவாக (Work/Employment Visa) மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினால், அது 100% மோசடியாகும்.

⚠️அரசு பதிவு எண் இல்லாதது: உண்மையான முகவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் (MEA) பதிவு செய்து 'Registration Certificate' (RC) எண் பெற்றிருப்பார்கள். இந்த எண் இல்லாத எந்த ஏஜென்சியும் போலியானதே.

⚠️தனிப்பட்ட கணக்கிற்கு பணம் கேட்பது: ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிற்கு பதிலாக, தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கோ (Personal Accounts), GPay/PhonePe போன்ற UPI மூலமாகவோ அல்லது ரொக்கமாகவோ பணம் கேட்டால் உஷாராகிவிட வேண்டும்.

⚠️இலவச மின்னஞ்சல் முகவரிகள்: உங்களுக்கு வரும் வேலைக்கான 'ஆஃபர் லெட்டர்' (Offer Letter) ஜிமெயில் (Gmail), யாகூ (Yahoo) போன்ற இலவச மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து வந்தால் அது போலியானது. உண்மையான நிறுவனங்கள் தங்களது சொந்த இணையதள முகவரியில்தான் (உதாரணம்: [email protected]) மின்னஞ்சல் அனுப்பும்.

⚠️நேர்காணல் இல்லாமல் வேலை: எந்த ஒரு முறையான இன்டர்வியூவும் இல்லாமல், எடுத்த உடனே அதிக சம்பளத்தில் வேலை உறுதியாகிவிட்டது என்று கூறுவது மோசடி கும்பலின் முதல் தந்திரமாகும்.

➡️ஏஜென்சிகளை எப்படி சரிபார்ப்பது? (How to Verify)
eMigrate இணையதள சோதனை: இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான emigrate.gov.in என்ற தளத்திற்குச் செல்லவும். அங்குள்ள 'List of Active Recruiting Agents' என்ற பகுதியில் ஏஜென்சியின் பெயர் அல்லது RC எண்ணை உள்ளிட்டு அவர்கள் உண்மையானவர்களா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

🇮🇳 தூதரகத்தை தொடர்பு கொள்ளுதல்: உங்களுக்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் (Offer Letter) உண்மையானது தானா என்பதை அறிய, சம்மந்தப்பட்ட நாட்டின் இந்தியத் தூதரகத்தை (Indian Embassy) மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

🤝உதவிக்கு: போலி ஏஜென்சிகள் மூலம் ஏமாற்றப்பட்டாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ, உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தின் சைபர் கிரைம் பிரிவு (1930) அல்லது அயலகத் தமிழர் நலத்துறையை (1800-309-3793) தொடர்பு கொள்ளவும்.

தேவகோட்டை நகரில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள்காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..சிவகங்கை மா...
12/06/2026

தேவகோட்டை நகரில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள்
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவதால் விபத்து அபாயம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குவோர் மீது காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#தேவகோட்டை #சாலைபாதுகாப்பு











Sivagangai District Administration Tamil Nadu Police Sivagangai District Police Chief Minister of Tamil Nadu

Address

Devakottai
630302

Telephone

+917904368517

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம தேவகோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்ம தேவகோட்டை:

Share