Amudham Technologies

Amudham Technologies Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amudham Technologies, Web designer, Kanyakumari.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
24/12/2023

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

நண்பர்களே நான் எழுதிய சிறுவர் கதைகளின் முதல் தொகுப்பு 'நியுமூன் சிட்டி' தற்போது அமேஸான் கென்டிலில் விற்பனைக்கு உள்ளது. உ...
18/07/2022

நண்பர்களே நான் எழுதிய சிறுவர் கதைகளின் முதல் தொகுப்பு 'நியுமூன் சிட்டி' தற்போது அமேஸான் கென்டிலில் விற்பனைக்கு உள்ளது. உங்கள் ஆதரவினை தாருங்கள்.

This is link to buy in India
https://www.amazon.in/gp/product/B0B6GJKZHQ

This is link to buy in US
https://www.amazon.com/gp/product/B0B6GJKZHQ

The book can be viewed even with Android phones using a mobile app provided by Amazon

நியூமூன் சிட்டி: சிறுவர் கதைகள் தொகுப்பு – 1 (Tamil Edition) eBook : ஆல்டிரின் பிரிட்டோ, ஜி: Amazon.in: Kindle Store

25/06/2022

யாருக்கெல்லாம் மீன் சாப்பிட பிடிக்கும் என யாராவது கேட்டால் கை தூக்கும் முதல் ஆள் வரிசையில் நானும் இருப்பேன். மீன் சாப்பிட மட்டும்தான் பிடிக்குமா? என்றால். அந்த மீன்கள் வாழும் கடலின் கொள்ளை அழகு இன்னும் பிடிக்கும்.

கடல் சார்ந்த தொழில் செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி? இருக்கும் அவர்களின் வாழ்க்கை என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் நம்மில் பலருக்கும் உண்டு. இவர்கள் கடலோடிகள் எனப்படுகின்றனர்.

நான் அதிகமாக பார்க்கும் யு டியூப் வீடியோக்கள் இவர்களை பற்றியதாகவே இருக்கும். இவர்கள் மிகவும் கடினமான வாழ்க்கை சூழ்நிலையை தினமும் எதிர் கொள்கின்றனர்.

கப்பலில் பணியாற்றுவோர், கடற்படையினர், மீன் பிடிப்போர், முத்து குழிப்போர் என அந்த உப்புநீரை சார்ந்து தொழில் செய்வோர் அனைவரும் "கடலோடி" களே.

இன்று' சர்வதேச கடலோடிகள் தினம்'.

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன் 25, 2022)

23/06/2022

புதிய தொழில்நுட்பங்கள் வர வர பழையதன் மீது நாட்டம் குறையும். அப்படிதான் அச்சு புத்தகங்கள் மீதான ஈர்ப்பு மாறி பிடிஎப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவும் இப்போது ஆடியோ புத்தகங்கள் கேட்கும் பழக்கமாக மாறி வருகின்றது.

இந்த ஆடியோ புத்தகங்களை கேட்பதில் சில சிக்கல்கள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. உதாரணமாக கேட்பதற்கு காது மட்டுமே போதும் என்பதால் மற்ற புலன்களின் கவனம் வேறு பக்கம் திரும்பிவிட வாய்ப்புகள் அதிகம். மேலும் சிலர் ஆடியோ புத்தகங்களை கேட்க ஆரம்பித்தவுடன் தூங்கி விடுவதாகவும் சொல்கின்றனர்.

அவசரமாக இயங்கும் இன்றைய மக்கள் புத்தகங்கள் படிப்பதையும், அறிவை வளர்த்துக் கொள்வதையும் முக்கியமாக கருதுவதில்லை. இன்னிலையை மாற்ற ஆடியோ புத்தகங்களை கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது தேவையாகிறது.

இந்த மாதம் 'ஆடியோ புத்தக மாதமாக' கடைபிடிக்கப்படுகிறது.

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன், 2022)

21/06/2022

என் சிறு வயது நினைவு... அப்போது ரேடியோ கூட கிடையாது, பக்கத்தில் ஏதாவது திருமணம், சடங்கு வீடு என்றால் இரண்டு நாட்களுக்கு பாடல்கள் முழங்கும். வேறு எந்த சத்தமும் காதில் விழாத அளவு சத்தமாக வைப்பார்கள். காரணம் அந்த காலகட்டத்தில் அதுதான் ஆக பெரிய கொண்டாட்டம்.

அவை இல்லாத நாட்களில் நம் கச்சேரி நடக்கும். சத்தமாக பாடிக்கொண்டே இருப்பேன். கையால் எதிலாவது தட்டி இசை ஒலிகளை எழுப்புவேன். நாற்காலி, எழுதும் ஸ்லேட், நோட்டு புத்தகங்கள், பாத்திரங்கள், பேனா பென்சில் என அனைத்திலும் இசை ஒலிகளை தேடினேன். என் வயதினர் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நியண்டர்தால் மனிதர்கள் பயன்படுத்திய புல்லாங்குழலே கிடைத்துள்ள பழமையான இசைக்கருவி ஆகும்.

இசை மனிதனின் பரிணாமத்தில் முக்கிய பங்கு வகித்தது. இன்றும் நம் வாழ்வியலில் இசை பிரிக்க முடியாத ஒன்று. கற்று மகிழலாம். கேட்பதை விட இசைத்தல் இன்னும் இனிமையானது.

இன்று 'உலக இசை தினம்'.

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன் 21, 2022)

20/06/2022

அப்படி ஒரு நிலைமை உலகில் இனியும் யாருக்கும் வரக்கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொள்வோம். ஆனால் அப்படி ஒரு நிலைமை நமக்கு ஏற்பட்டால் எதை எடுத்துச் செல்வோம் என பலமுறை கற்பனை செய்திருக்கிறேன்.

நாம் 'அகதிகள்' என ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு கடந்து சென்று விடுகிறோமே, அவர்களின் வலியை எத்தனை பேரால் உண்மையாக உணர முடிகிறது.

இயற்கை சீற்றங்கள், போர்கள், பஞ்சங்கள், நில ஆக்கிரமிப்புகள், இன ஒடுக்குமுறைகள் என அகதிகளை உருவாக்கும் காரணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

மனிதன் வகுத்து வைத்திருக்கும் எல்லைகள் 'புலம்பெயர்ந்தோர்' என்பதை 'அகதி' என அழைக்கச் சொல்கிறது. யாருக்கு எப்போது என தெரியாத இந்த நிலையில் இருப்பவர்களிடம் அன்பு செலுத்த நம் மனதிற்கு கட்டளை இடலாமில்லையா? முயற்சிப்போம் அன்பு சொந்தங்கள்!

இன்று 'உலக அகதிகள் தினம்'.

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன் 20, 2022)

18/06/2022

சுற்றுலா செல்வதில் பலருக்கும் விருப்பம் உண்டு தான். ஆனால் அதை எவ்வளவு ஆர்வத்துடன் அனுபவிக்கின்றனர் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. நம் வாழ்க்கை சூழ்நிலையால் ஏற்படும் இறுக்கங்களை தவிர்த்து புதிய இடத்தில் மனதை இலகுவாக்கி கொள்ள சுற்றுலா பெரும் உதவி புரிகிறது.

நம்மில் பலரும் சுற்றுலா என்றவுடன் ஏதோ புதிய இடங்களை பார்ப்பது என்று எண்ணி அவசர அவசரமாக நகர்ந்து சென்று விடுகின்றோம். ஆனால் உண்மையான சுற்றுலா விரும்பிகள், ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு தங்கியிருந்து, அந்த இடத்தின் அழகை ரசித்து, அங்கு கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு, அந்த இடத்தின் தட்பவெப்ப நிலையையும் அனுபவித்து மகிழ்வர்.

இந்த இரண்டாம் வகை சுற்றுலா பயணிகள் தங்கள் மன அழுத்தங்களிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற்று உடல் நலமும் பெறுகின்றனர்.

நாமும் அப்படி ஒரு சுற்றுலாவை அனுபவித்து மகிழலாமே. இன்று 'சர்வதேச சுற்றுலா தினம்'.

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன் 18, 2022)

15/06/2022

இப்போது கன்னியாகுமரி வரும் வடஇந்திய சுற்றுலா பயணிகள் காற்றாடிகளின் பின்புலத்தில் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறுவதில்லை. அந்தளவிற்கு பரந்து விரிந்து சுழன்று கொண்டிருக்கும் காற்றாடிகளை கண்டு வியந்து போகின்றனர்.

இந்த காற்றாலை சக்தி பயன்பாட்டின் வரலாற்றை தேடினால் 5000 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. அப்போது எகிப்தியர் நைல் நதியில் கப்பல்களை செலுத்த காற்றாலை சக்தியை பயன்படுத்தி உள்ளனர். கி.மு. 200 ல் சீனர்கள் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணி பம்புகளை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர்.

அவர்களை தொடர்ந்து பெர்சியர்கள் தானியங்களை திரிக்க இதை பயன்படுத்தினர். பின்னர் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலும் 1100 களில் ஐரோப்பாவிலும் இது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

1800 - 1900 ல் மேற்கு அமெரிக்காவில் மின் உற்பத்திக்கான சிறிய காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. அங்கு தொடங்கிய காற்றாலை மின்னுற்பத்தி இப்போது பல உச்சங்களை தொட்டு நிற்கிறது. இன்று "உலகளாவிய காற்றாலை தினம்"

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன் 15, 2022)

14/06/2022

1983 ல் நான் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ரத்தம் அடைக்க வேண்டும் என்ற உடன் எனக்கு என் தந்தையின் ரத்தமே ஏற்றினார்கள். காரணம் யாருடைய ரத்தத்தையாவது அடைப்பதை விட நம் ரத்தம் நம் பிள்ளைக்கு சரியாக இருக்கும் என்ற உணர்வுதான்.

இப்போதெல்லாம் உறவினர் யாருக்காவது உடல்நிலை சரியில்லை, ரத்த தானம் தேவை என்றால் உடனே சமூக ஊடகங்களில் பகிர்ந்து யார் என்றே தெரியாத நபரின் ரத்தத்தை ஏற்றுகின்றனர்.

ஏன்? அந்த குடும்பத்தில் அவருக்கு ரத்தம் வழங்க தகுதியான நபர் ஒருவர் கூட இல்லையா? என்ற கேள்வி எழுகிறதல்லவா!

உறவு என்பது பேச்சுக்கு மட்டுமல்ல உடல் ரீதியாகவும் தொடர்புடையது. எனவே உறவினர்கள் ரத்த கொடை வழங்குவது இன்னும் சிறப்புடையதாக இருக்கும் என கருதுகிறேன். இன்று "உலக ரத்த கொடையாளர் தினம்".

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன் 14, 2022)

13/06/2022

எனக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அணியும் உடைகளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் நிறையவே உண்டு. அதை பற்றி சிந்திக்கும் போது இந்த கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.

"தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்படும் முன் துணிகளை எப்படி தைத்து இருப்பார்கள்? " கையால் தைப்பதென்றால் எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்.

1790 ல் தாமஸ் செயின்ட் முதல் தையல் இயந்திரத்தை கண்டுபிடித்து காப்புரிமையை பெற்றார். இப்போது நவீன இயந்திரங்கள் தோன்றியதன் விளைவு இன்று பெரும் நிறுவனங்கள் உடை தயாரிப்பு துறையில் கோலோச்சுகின்றன. மக்களிடமும் விதவிதமான மாறுபட்ட உடைகளை அணியும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இன்று 'தேசிய தையல் இயந்திர தினம்'.

ஜி. எ. பிரிட்டோ.
(ஜூன் 13, 2022)

03/05/2022

சமூக வலைதளங்களில் சாமானியனும் செய்திகளை பகிரலாம் என்றான பின் படிக்க முடியாத அளவு செய்திகள் தினமும் வந்து குவிகின்றன.

அப்படி பகிரப்பட்டது தான் அந்த ஓட்டப்பந்தய வீரர் தன் இரு கால்களிலும் வெவ்வேறு நிற ஷூ அணிந்து ஓடிய புகைப்படம். முதலில் அவர் வெற்றி பெற்றதாக பகிரப்பட்ட அந்த படம் பின்னர் கண் காது மூக்கு எல்லாம் வைத்து மறு பதிவுகள் செய்யப்பட்டன. அதில் அவர் வறுமையின் காரணமாக வெவ்வேறு ஜோடி ஷூக்களில் ஒவ்வொன்றை போட்டுக்கொண்டு ஓடினார் என்பதுவும் ஒன்று.

ஆனால் மேலை நாடுகளில் "இருவேறு நிற ஷூக்கள் தினம்" என்று ஒரு நாளையே அனுசரிக்கிறார்கள். பல பிரபல காலணி தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு கால்களுக்கும் வெவ்வேறு நிறம் உடைய ஷூக்களை விற்பனை செய்கின்றன.

இன்றைய இளைய தலைமுறையினரும் அதை அணிவதை கவுரவமாகவே கருதுகின்றனர்.

ஜி. எ. பிரிட்டோ.
(மே 3, 2022)

Address

Kanyakumari
629003

Alerts

Be the first to know and let us send you an email when Amudham Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amudham Technologies:

Share

Category