Rathna Offset Printers-vpm

Rathna Offset Printers-vpm All kind of printing and binding works

22/10/2024
22/10/2024
22/10/2024

விழுப்புரத்திலிருந்து புதுவை செல்ல ஏற்கனவே ரூபாய் 27 டிக்கெட் இருந்தது. பிறகு கண்டமங்கலம் மேம்பாலம் வேலையால் பேருந்துகள் சுற்றி செல்வதால் ரூபாய் 32 ஆக டிக்கெட் விலை உயர்த்தபட்டது.

தற்போது கண்டமங்கலம் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது ஆனாலும் தற்போது 32 ரூபாய் டிக்கெட் தருகிறார்கள். பயணாகள் கேட்டதற்கு மீண்டும் மேம்பாலம் மூடப்பட்டால் டிக்கெட் விலை உயர்த்த முடியாது அதுவும் இல்லாமல் சுங்ககட்டணம் செலுத்த வேண்டும் தற்போது டிக்கெட் விலை குறைக்க முடியாது என கூறியுள்ளார்கள்.

அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் லாபம் முக்கியம் தான் அதற்காக பயணிகள் மீது உங்கள் சுமையை திணிக்க வேண்டாம்.

மீண்டும் டிக்கெட் விலையை குறைத்தால் பயணிகளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.

20/10/2024

1000 Visting card (Glossy Lamination) @ Rs.500 (With out Designing Charge & Parcel Charge) We Will Through Courier @ you door Step Card card Printers

" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்...
19/10/2024

" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "..கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே........✍🏻

18/10/2024

18/10/2024

          😃
18/10/2024

😃

16/10/2024
13/10/2024
05/10/2024

விழுப்புரத்தில்* *வருகின்ற 5ம் -தேதி சனிக்கிழமை* *முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை* *விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது*.
*இம்முகாமில்*
*150க்கும் மேற்பட்ட* *தனியார்துறைசார்ந்த நிறுவனங்கள்* *பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு* *தேவையான தகுதியான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்*.

*இதற்கான கல்வி தகுதி8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்*

*மேலும் விவரங்கள் அறிய*
*04146 226417 மற்றும் 9499055906 / 9080515682 / 7010827725 *என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. *இவ் வேலைவாய்ப்பு *முகாமிற்கான ஏற்பாடுகளை*
*உதவி இயக்குநர்* ,
*மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்*,
*விழுப்புரம்.செய்து வருகிறார்*.
*இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு* *மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்*

Address

Villupuram

Opening Hours

Monday 8:30am - 9pm
Tuesday 8:30am - 9pm
Wednesday 8:30am - 9pm
Thursday 8:30am - 9pm
Friday 8:30am - 9pm
Saturday 8:30am - 9pm
Sunday 10am - 2pm

Telephone

+91 98439 72600

Alerts

Be the first to know and let us send you an email when Rathna Offset Printers-vpm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rathna Offset Printers-vpm:

Share