𝐈𝐊𝐌 𝐌𝐄𝐃𝐈𝐀

𝐈𝐊𝐌 𝐌𝐄𝐃𝐈𝐀 social media news

30/05/2026

#வெளிநாட்டு...வாழ்க்கை

பலரின் கனவுகளை நிறைவேற்றியிருக்கலாம்,

ஆனால் பல சொந்தங்களின் ஆயுள் காலத்தையே அமைதியாக விழுங்கியிருக்கிறது.

குடும்பத்தின் நலனுக்காக எண்ணற்றோர் தங்களின் இளமையையும், ஆரோக்கியத்தையும், சந்தோஷங்களையும் தியாகம் செய்து அந்நிய மண்ணில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் பலரின் துயரங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.

சில குடும்பங்கள் அவர்களின் தியாகத்தை உணர்ந்து மதிக்கின்றன. ஆனால் சிலர், அவர்கள் அனுப்பும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டே, அந்த உழைப்பின் வலியையும் விலையையும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

இப்படியே காலம் நகர்ந்தால், வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஒரு முடிவே இல்லாமல் போய்விடும்.

வாழ்க்கை முழுவதும் உழைத்தும், இறுதியில் சொந்த மண்ணில் தனது ஜனாஸா கூட அடக்கம் செய்ய முடியாத நிலை வரக்கூடாது.

எனவே, அனைவரும் சிறந்த திட்டமிடலுடன் செயல்பட்டு, தேவையான பொருளாதார நிலையை உருவாக்கிய பின் சொந்த நாட்டிற்கு திரும்பி, ஏதாவது ஒரு தொழில் முயற்சியில் ஈடுபட்டு, குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முயற்சிக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் வெளிநாட்டு சொந்தங்களுக்கு அருள் புரிந்து, அவர்களின் உழைப்பில் பரக்கத் வழங்கி, அவர்கள் நினைக்கும் நன்மையான இலக்குகளை விரைவில் அடையச் செய்வானாக. ஆமீன்.🤲🤲

இந்த பதிவு அனைவருக்கும் பொருந்த வேண்டியதில்லை. ஆனால் யாருக்கு இது பொருந்துகிறதோ அவர்கள் சிந்தித்துப் பாருங்கள்.

100 பேர் இதைப் பார்த்தால், அதில் ஒருவராவது தனது வாழ்க்கையை சரியான பாதையில் திட்டமிட்டு முன்னேறினால், அதுவே இந்த பதிவின் நோக்கம் நிறைவேறியதாக நான் கருதுவேன்.

யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. மாறாக, யாருடைய மனமும் புண்படாத ஒரு நல்ல வாழ்க்கை அமைவதே என் விருப்பம்.

வெளிநாட்டில் இருக்கும் நம் சொந்தங்களின் வலியை உணர்வோம்.

அவர்களுக்காக துஆ செய்வோம்.

சிந்திப்போம். செயல்படுவோம்.

இறைவன் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக. 🤲🏻🤲🤲❤️❤️

18/05/2026

மக்கள் அவதானம்

“சமூக சேவை” என்ற பெயரில் சிலர் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த பதிவு உண்மையாகவும் நேர்மையாகவும் சமூக சேவை செய்பவர்களுக்கு அல்ல.

மக்களின் உணர்வுகளையும் ஏழைகளின் துயரங்களையும் பயன்படுத்தி புகழும் பணமும் தேடும் சிலருக்காக.

5 மாடுகளை வைத்து 10 இடங்களில் புகைப்படம் எடுத்து,
50 மாடுகள் வழங்கியதாக பொய்யாக கூறி பணம் சேகரிப்பது எந்த மனிதநேயம்?

ஒரு ஏழையின் கண்ணீர் உங்களுக்கு மூலதனமா?

வெட்கம் இல்லையா?

உங்களின் முகத்திரைகள் கிழியும் நாள் மிகவும் அருகில் உள்ளது.

இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். 🤲

15/05/2026

சில.......
காடையர்களால் ஏழு எட்டு மாதங்கள் முடக்கப்பட்டிருந்த Ban செய்யப்பட்டிருந்த
ஐ கே எம் மீடியா என்ற எமது பக்கம் நீண்ட நாள் முயற்சிக்குப் பிறகு கையில் கிடைத்திருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்..

"பணக்காரர்கள்!!!
"காசிக்காரர்கள்!!🤲🤲

ஆனால் ஏழை மக்களின் நிலை யாருக்குத் தெரியும்?”

​யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, யாரும் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வார்த்தைகளை பகிர்கிறேன்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்...
​இன்றைய காலத்தில் வறுமை பல மக்களின் வாழ்க்கையை வாட்டிக் கொண்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

தொழில் செய்து, வியாபாரம் செய்து சம்பாதிப்பவர்களுக்குக் கூட வாழ்க்கையை நடத்துவது சிரமமாகியுள்ளது. அப்படியானால், ஏழைகளின் நிலைமை எப்படி இருக்கும்?

வருமானம் இல்லாமல் வாழ்பவர்களின் வேதனை எவ்வளவு அதிகமாக இருக்கும்?

​மனிதன் மனிதனுக்கு உதவி செய்து வாழ வேண்டும். இல்லையெனில், மனித நேயமற்ற வாழ்க்கை மனிதர்களை மிருகங்களாக மாற்றிவிடும்.

பலர் வேலை இல்லாமல் தவித்து, இறைவனிடம் கையேந்தி நிற்கிறார்கள்.
​இறைவன் சிலருக்கு செல்வத்தையும் வசதிகளையும் அளித்திருக்கிறார். அந்த அருளுக்காக, எம்மை படைத்த இறைவனின் பெயரில் ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் கரம் நீட்டுவது நமது கடமையாகும்.

அன்பும் உதவியும் இல்லாத சமூகத்தில் அமைதி நிலைக்காது. இயற்கையின் எச்சரிக்கைகளும் அனர்த்தங்களும் மனிதனை சிந்திக்க வைக்கின்றன. இன்று நமக்குள்ள செல்வமும் நாளை நிலைத்திருக்கும் என யாராலும் சொல்ல முடியாது.

​ஆகையால்,

சிந்திப்போம்...
உதவி செய்வோம்...
மனிதநேயத்துடன் வாழ்வோம்...
இறைவன் அனைவரையும் பாதுகாத்து அருள்புரிவானாக. 🙌



05/09/2025

மீலாது நபி விழா என்பது : கடமையா, நினைவா?

முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது –
நாம் நபியை (ஸல்) கொண்டாடுவது என்பது...

அல்லாஹ் கட்டாயப்படுத்திய ஒரு கடமை அல்ல.

ஆனால் நபியின் பிறப்பை நினைவு கூறுதல் என்பது முஸ்லிம்களின் மனத்தில் அன்பையும் நன்றியையும் அதிகரிக்கும் ஒரு நற்செயல்.

குர்ஆன் நமக்கு நபியைப் பற்றி:

நிச்சயமாக நீங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதரில் ஒரு சிறந்த முன்னுதாரணம் இருக்கின்றது" (அஹ்ழாப்:21)

அதாவது, நபியின் வாழ்க்கைமுறையை பின்பற்றுவதே மிகப் பெரிய வழிபாடு.
விழாவைக் கொண்டாடுவதை விட, நபி காட்டிய வாழ்க்கைப் பாதையில் நடப்பதே நமக்குச் சிறந்த கொண்டாட்டம்.

🤲 நபியை நினைவு கொள்வது –

சலவாத்து சொல்லுதல்...
நற்பண்புகளை நடைமுறைப்படுத்தல்

இதுவே உண்மையான மீளாத்து நபி நினைவு.

அனைவருக்காகவும் பிராத்தித்தவனாக🤲🤲


🌍 ஒன்றிணைவோம் – நம் தேசத்தை பாதுகாப்போம் 🇱🇰இஸ்ரேலியர்கள் பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்தது போல, சிலர் இலங்கையிலும் அப்படிப்பட்...
01/09/2025

🌍 ஒன்றிணைவோம் – நம் தேசத்தை பாதுகாப்போம் 🇱🇰

இஸ்ரேலியர்கள் பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்தது போல, சிலர் இலங்கையிலும் அப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு எண்ணங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் எமது பிரதிநிதிகள் இருவரை வீதியில் தாக்கிய சம்பவம் இதற்குத் தெளிவான சான்றாகும். அதிலும் கவலைக்கிடமானது, இதை செய்தவர்கள் எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி அனைவரையும் சண்டைக்கு அழைத்திருப்பதே.

எமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் இஸ்ரேலுக்குச் சென்று, அங்குள்ள ஒருவரைத் தாக்கி விட்டு மீண்டும் எமது நாட்டுக்குத் திரும்பி வருவதை நினைத்துக் கூட பார்க்க முடியுமா?

ஏன் எமது நாட்டுக்குள் இலகுவாக வந்து எம் நாட்டவர்களையே தாக்குகிறார்கள்? என்ன தைரியம்?

நாம் முதுகெலும்பு அற்றவர்களா?

சிந்திக்க வேண்டிய விடயம் ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கான ஆரம்ப கட்டமாக கூட இது இருக்கலாம்.

இத்தகைய சூழ்நிலையில் அரசு மற்றும் காவல்துறை மௌனமாக இருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நீதியும் ஒழுக்கமும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இத்தகைய சம்பவம் நடந்திருக்காது.

இது முஸ்லிம்களுக்கு நடக்கிறது, இந்துக்களுக்கு நடக்கிறது, பௌத்தர்களுக்கு நடக்கிறது என்று பிரித்து பார்க்கக் கூடிய பிரச்சினை அல்ல. இது இலங்கையர்களாக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சினை. நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்குவதற்காக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

இன்று சாராயத்தின் போதையில் அடிப்பவர்கள், நாளை கல்லால் அடிப்பார்கள், அதற்குப் பிறகு ஆயுதங்களால் தாக்குவார்கள், பின்னர் இன்னும் பெரிய வலிமையுடன் தாக்குவார்கள். எமது வளமிகு அழகிய சிறிய தீவை இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு தள்ளிவிடக் கூடாது. அதை பாதுகாப்பது எமது ஒற்றுமையான பொறுப்பு.

இலங்கையர்களாகிய நாம் வேறுபாடுகளைத் தாண்டி, ஒன்றிணைந்து நம் தேசத்தை பாதுகாத்து மறுபடியும் கட்டியெழுப்ப வேண்டும்.

மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே, உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு ஒரு புனிதமான பொறுப்பு. எம் மக்களை பாதுகாக்கவும், எம் நாட்டை பாதுகாக்கவும் — நீங்கள் உங்கள் கடமையை எவ்வாறு நிறைவேற்றினீர்கள் என்பதை இறைவன் உங்களிடமிருந்து கேட்பான்.

அதிகாரிகள் தவறு இழைத்த இஸ்ரேலர்களை பாதுகாப்பதற்கு பதிலாக, எம் மக்களையும் எம் நாட்டையும் பாதுகாப்பதற்கு வழிவகைகள் செய்ய வேண்டியது அவசியம்.

ஒன்றிணைவோம் – நம் மண்ணை பாதுகாப்போம். 🇱🇰

ඉස්‍රායෙල්වරුන් පලස්තීන භූමිය ආක්‍රමණය කළා මෙන්, සමහරුන් ලංකාවේද එවැනි ආක්‍රමණකාරී අදහස් පෙන්වන්නට පටන්ගෙන ඇත. අපේ නියෝජිතයින් දෙදෙනෙකු මධ්‍යම පාරේ පහර දීම මේ සඳහා පැහැදිලි සාක්ෂියකි. දුක දැනෙන දේ වන්නේ, එය කළ අය කිසිදු පව්බෝධයක් නැතිව සියල්ලන්ටම සටන් කැඳවීමයි.

මෙවන් අවස්ථාවකදී රජය සහ පොලිසිය නිශ්ශබ්දව සිටීම අපහසු සහ නිරාශාදායකයි. නීතිය සහ නීතිපාලනය දැඩිව පිළිපැදිය හැකිව තිබුණේ නම් මෙවන් සිද්ධි නොවන්නට තිබුණි.

මෙය මුස්ලිම්, හින්දු, බෞද්ධයින්ට වෙන වෙනම සිදුවන ගැටලුවක් නොවේ. මෙය ලංකිකයන් ලෙස සමස්ත ජනතාවගේ ගැටලුවකි. අපේ අනාගත පරපුරට ආරක්ෂිත ජීවිතයක් ලබාදීමට, අපි සියල්ලෝ එකට එක්ව අපේ රට ආරක්ෂා කළ යුතුය.

අද මත්පැන්ගත් අය පහර දෙන්නේ නම්, හෙට ගල් ගහනු ඇත. ඊළඟට ගිනිඅවි, අවසානයේ වැඩි බලයෙන්ද පහර දෙනු ඇත. අපේ ආකර්ෂණීය හා සම්පත් පිරුණු දූපත මෙවන් විනාශයට ලක්වීමට ඉඩ නොදිය යුතුය. එය ආරක්ෂා කිරීම අපේ එකමුතු වගකීමකි.

ලංකිකයන් වන අපි වෙනස්කම් මඟහරිමින්, එක්වී අපේ රට ආරක්ෂා කර නැවත ගොඩනගමු.

ගරු නායකවරුනි සහ අධිකාරීවරුනි, ඔබට බාර දී ඇති වගකීම පූජනීය වගකීමකි. අපේ මිනිසුන් ආරක්ෂා කළේද, අපේ රට ආරක්ෂා කළේද යන්න අල්ලාහ් ඔබගෙන් ප්‍රශ්න කරනු ඇත.

අධිකාරීවරුන් වැරදි කළ ඉස්‍රායෙල්වරුන් ආරක්ෂා කිරීම වෙනුවට, අපේ මිනිසුන් හා අපේ රට ආරක්ෂා කිරීමට මග පෙන්විය යුතුය.

එක්වමු – අපේ මව්බිම ආරක්ෂා කර ගනිමු. 🇱🇰

Just as the Israelis occupied Palestinian land, some have begun to show similar expansionist intentions here in Sri Lanka. The recent attack on two of our representatives in the street is clear evidence of this. What is most disturbing is that those responsible showed no guilt, but instead openly challenged everyone to fight.

In such a situation, the silence of the government and the police is deeply disappointing. Had law and order been strictly upheld, such incidents would never have occurred.

This is not something happening only to Muslims, Hindus, or Buddhists separately. This is, as Sri Lankans, the problem of the entire nation. For the sake of our future generations, we must unite as one people to defend our land.

Those who beat others today under the influence of alcohol will throw stones tomorrow, then use weapons, and eventually escalate to greater destruction. We must not allow our beautiful and resource-rich island to fall into such chaos. Protecting it is our collective responsibility.

As Sri Lankans, we must rise above all divisions and unite to protect and rebuild our country.

Respected leaders and authorities, the responsibility entrusted to you is a sacred one. You will be questioned by the Almighty about how you protected our people and our nation.

Instead of protecting the Israelis who have committed wrongs, authorities must take action to protect our people and our country.

Unite – Protect Our Motherland. 🇱🇰

22/08/2025

#காதி #நீதிமன்றங்களை சீர்திருத்துவதற்கு முன்னர், எமது வாழ்க்கையையும், இளைஞர் யுவதிகளையும், பெருமைக்காக பல திருமணங்களைச் செய்து வைக்கும் பல பெற்றோர்களையும், சமூக வலைத்தளங்களினால் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் பலரையும், நாம் சீர்திருத்த வேண்டும்.

அப்படி இல்லை என்றால், தொடர்ந்தும் கொஞ்சம் கூட தகுதி இல்லாத #காதி #நீதிபதிகளுக்கும் அவரோடு இருக்கும் சில நேர்மையற்ற அல்லக் கைகளுக்கும் முன் தலை குனிந்து நிற்க வேண்டும்.

இது தேவையா?

மீண்டும் ஒருமுறை அதே விடயத்தை நினைவூட்டியவனாக அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து விடைபெறுகிறேன்.. அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்,❤️❤️🤲🤲🤲

15/08/2025

சமூக வலைத்தளங்களில் டான்ஸ் ஆடிக்கொண்டு, ஆபாசமான வார்த்தைகளைப் பேசிக்கொண்டு, கட்டுப்பாடுகளைக் கலைந்தறிந்து, கலாச்சாரத்தை மறந்து, தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

குடும்பங்களும், சமூகத் தலைவர்களும், இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

மீண்டும் சொல்கிறேன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் அனைவருக்காகவும் பிராத்தித்தவனாக....
❤️❤️🤲🤲🤲🤲🤲

#பெற்றோர்களே
#சமூகநலன்

25/07/2025

தந்தை" இல்லாமல் பிள்ளைகளை வளர்க்கும் நிலைக்கு ஆளாகாவிடாதீர்கள்..

உங்களின் பிள்ளைகள், உங்களின் கண்களுக்கு தங்கமாக இருந்தாலும்,
கண்காணிக்க வேண்டிய உங்களின் கடமையைத் தவற விட்டுவிடாதீர்கள்...

அனைவருக்காகவும் பிரார்த்தித்தவனாக...❤️🤲🤲🤲

சிறிய நினைவூட்டல்..

18/07/2025

இழம் வயதில் கூடிக்கி ஓடுவதும்,அதற்கு மீம்"ஸ் போடுவதும், கேவலமான விடையம்.
மதிப்புக்குரிய பெற்றோர்களே!
நடப்பதற்கு முன் காப்போம்..

உங்களின் பிள்ளைகளிடம் அன்பாக நடந்து அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள்..

வீட்டில் கிடைக்காத அன்பைத்தான் அதிகமான பிள்ளைகள் வெளியில் தேடிச் சென்று சீரழிகின்றார்கள்..

அனைவருக்காகவும் பிரார்த்தித்தவனாக

11/07/2025

O/L பரீட்சையில், சித்தி பெற்ற, பெறாத அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், பெற்றோர் மற்றும் ஆசியர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள்..

தயவு செய்து சித்தியடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்துவதைப் போல சித்தி பெறாத மாணவர்களுக்கான மீழ் நடவடிக்கைகளையும் எடுங்கள், அதுதான் சமூகத்தின் உண்மையான வெற்றி...

எம்மில் அதிகமானவர்கள், சித்தி அடைந்த மாணவர்களைப் பற்றி மட்டும் சிந்திக்கின்றோம் , நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய விடையம் தான். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விடா முயற்சியால் கிடைத்த வெற்றி...

இம்முறை அதிகமான மாணவர்கள் சாதாரண தரத்தில் சிறந்த சித்தியை அடைந்திருக்கின்றார்கள்..

இருந்தும் என் மனது இதில் தற்காலிகமாக தோல்வி அடைந்த மாணவர்களை மட்டும் தேடுகிறது, காரணம் நான் அந்த மன வேதனையை நன்கறிந்தவன்..

வெற்றி பெற்றவர்கள், ஓவர் ஆட்டம் போடத் தேவையும் இல்லை, தோல்வி அடைந்தவர்கள், மனதை தளரவிடத் தேவையும் இல்லை

இது வெறும் ஆரம்பம்
இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கின்றது, சித்தியடையாத மாணவர்கள் விடா முயற்சியோடு விட்டதை பிடியுங்கள்..

ஏனைய மாணவர்கள் உயர்தரத்தில் மேலும் நல்ல அடைவுகளைப்
பெற்றுக்கொள்ள வேண்டும் உள்ளத்தில் கடுகளவும் பெருமை வந்துவிடக்கூடாது..

பழைய பதிவாக இருந்தாலும் எனது மீழ்பதிவு சிலருக்கு சிலவற்றை ஞாபகப்படுத்தும்..

🤲🤲🤲🤲

Address

Colombo

Telephone

+94740031919

Alerts

Be the first to know and let us send you an email when 𝐈𝐊𝐌 𝐌𝐄𝐃𝐈𝐀 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share