21/05/2026
எதிர்கட்சியின் 4000 வாகனங்கள் கதை பொய் என்று நிரூபணமானது...
📍
வாகனங்களுக்கான வரி உயர்வுக்கு முன் 4000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டு முழுமையான பொய்யென தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, மே 15 ஆம் திகதி வரை 1782 வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாகவும், 380 வாகனங்களுக்கு மட்டுமே கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதற்காக செலவிடப்பட்ட தொகை அமெரிக்க டொலர் 23.71 மில்லியன் மட்டுமே என்றும், “4000 வாகனங்கள்” என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வாகன இறக்குமதி தடை செய்யப்படலாம் என்ற போலி வதந்திகளால் கடந்த வாரங்களில் இறக்குமதி அதிகரித்திருந்தாலும், அது தற்போது குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதியை சற்றுக் காலம் தாமதிக்குமாறு இறக்குமதியாளர்களிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.