29/12/2021
“ஸ்ரீ லங்கா எவார்ட்” (Sri Lanka Award) ஏன்? ஏதற்கு?
திறமைகளை சிரம் மீது சுமந்து பல கனவுகளுடன் சமூகத்தில் காலடி வைக்கும் எத்தனையோ சின்னஞ் சிறுசுகளும், இளம் சிட்டுக்களும் தமக்கு எங்கு களம் கிடைக்கும் என ஏங்கிக் கொண்டு தனது இலட்சியப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். ஒரு சிலருக்கு விதியின் படியும், பாரிய முயற்சியின் பெயரிலும் வாய்ப்புக்கள் கிட்டுகின்றன. மற்றும் பலரின் இலட்சியங்கள் வெறும் கனவாகவே ஆகிவிடுகின்றன. அதிஉச்ச கட்ட முயற்சிகளும் பலபோது காணல் நீராய் ஆகிவிடுகின்றன. இப்படியான துரதிஷ்ட நிலைகக்கு பிரதானமான இரண்டு காரணங்களைக் கூறலாம்:
1.குறித்த துறையில் முன்னிற்பவர்கள் பின்னால் வரும் இளம் சந்ததியினருக்கு அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டி இடங் கொடுக்காமை.
2.குறித்த துறையில் யார் யார் முன்னிலையில் இருக்கிறார்கள்? யாருக்கு நாம் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும்? யார் யார் எந்தத் துறையில் சாதணை படைத்திருக்கிறார்கள்? என்ற தகவல் அல்லது அறிவு சமூகத் தலைமைகளுக்கு இல்லாமை.
இப்படியான நிலை எமது சமூகத்தை விட்டகல வேண்டும் என்ற நோக்கிலே தான் “ஸ்ரீ லங்கா எவார்ட்” ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் திறமையானவர்களை இணங்கண்டு, புள்ளி வழங்கி, சமூக மற்றும் அரசியல் தலைவர்களைக் கொண்டு விருதுகள் வழங்கி கௌரவித்து அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதே எமது பிரதான நோக்கமாகும்.
Welcome to Sri Lanka Awards - Awarding Organization of Sri Lanka Promoting the new generation