RBC Media unit

RBC Media unit social media

அமோக வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்வேம்...
17/10/2024

அமோக வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்வேம்...

13/08/2024

இன்ஷா அல்லாஹ் விரைவில் ......

மாகாணத்திற்கு பெருமைசேர்த்த மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.இலங்கை மாகாண ...
05/03/2022

மாகாணத்திற்கு பெருமைசேர்த்த மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.

இலங்கை மாகாண உதைபந்தாட்ட லீக் -2022 இறுதிப் போட்டி வடக்கு மாகாணத்துக்கும் தென்மாகாணத்திற்கும் இன்றைய தினம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.இப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய வடமாகாண அணி வெற்றிவாகை சூடியது.

வீரர்கள்,பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும்! பாராட்டுக்கள்
இன்றைய வெற்றிக்கிண்ணத்தை மண்ணின் மைந்தன் அமரர் டக்சன் பியூஸ்லஸ்க்கு சமர்ப்பித்தனர் வடமாகாண அணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rifkan Bathiudeen Rifkan Badiudeen

“வடக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வ...
10/01/2021

“வடக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” –

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் நாளை (11) ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் விடுத்துள்ளன.

எனவே, நாளை இடம்பெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது. எமக்குள் உள்ள சிறிய சிறிய பேதங்களை மறந்து ஒன்றுபடுமளவுக்கு பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம் கருதுகிறோம்.

எனவே, நாளை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது நாட்டில், இந்த அரசினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்த ஹர்த்தாலை ஆதரிப்பது அவசியம்.

ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகளிலிருந்து நமது சமூகங்கள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்கள், இந்த ஒத்துழைப்புக்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன்.

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  #ரவூப்_ஹகீம் மற்றும் இராஜாங்க அமைச்சரும் ஸ்ர...
10/01/2021

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் #ரவூப்_ஹகீம் மற்றும் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான #தயாசிறி_ஜெயசேகர ஆகியோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பப் பிரார்த்திப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் #றிஷாட்_பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உலகில் ஏற்பட்டுள்ள இக்கொடிய நோய் நீங்கி, சகலரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன். நமது இறுதி வெற்றி பிரார்த்தனையில் உள்ளதென்ற நம்பிக்கையாலேயே, சகலதையும் வெல்ல வேண்டி உள்ளது.

கொரோனா தொற்று தொடர்பில் அனில் ஜாசிங்க விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!நாட்டிலிருந்து கொரோனா தொற்றினை முழுமையாக இல்லாதொழிக...
02/01/2021

கொரோனா தொற்று தொடர்பில் அனில் ஜாசிங்க விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

நாட்டிலிருந்து கொரோனா தொற்றினை முழுமையாக இல்லாதொழிக்க விஞ்ஞான ரீதியான நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என முன்னாள் சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதை விடுத்து புராண நம்பிக்கைகளுக்கு பின்னால் செல்வதை விடுத்து விஞ்ஞான நடைமுறைளை பின்பற்ற முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையிவ் நாட்டில் பலர் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புராண நம்பிக்கைகளுக்கு முக்கியத்துமளிப்பதாக அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பல அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புக்கள் இருந்த போதிலும் மக்களின் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 #கிழக்கு கரைக்குள் புகுந்தது புரவி சூறாவளி  : நாளை காலை அளவில் மன்னார் குடாவை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுபுரவி ச...
02/12/2020

#கிழக்கு கரைக்குள் புகுந்தது புரவி சூறாவளி : நாளை காலை அளவில் மன்னார் குடாவை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

புரவி சூறாவளி தற்போது கிழக்குக் கரைக்குள் புகுந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குக் கரையோரத்தின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவும் இந்த புயல் திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் கிழக்கு கரையை தொட்டுள்ளது.

இந்த புயல் நகரும் தடத்தில், மணிக்கு 80 முதல் 90 மைல் வேகத்தில் காற்று வீசும். அது மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். புரவி புயல் மேற்குத் திசையில் நகர்ந்து நாளை காலை அளவில் மன்னார் குடாவை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் காரணமாக, திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலும் கரையோரப் பிரதேசங்களில் ஒரு மீற்றர் வரையிலான அலைகள் தோன்றி, கடல்நீர் நிலத்திற்குள் வரக்கூடும் என திணைக்களத்தின் சிவப்பு அறிவித்தலில் எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியின் காரணமாக, நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து, கடல் மிகவும் கொந்தளிப்பானதாக மாறலாம்.

நாட்டின் உட்பிரதேசங்களைப் பொறுத்தவரையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு வடமேல், மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசலாம். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லி மீற்றரைத் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

பிரதமர் மஹிந்தவிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை! November 27, 2020  0 Commentsஅடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வர...
27/11/2020

பிரதமர் மஹிந்தவிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை!
November 27, 2020 0 Comments
அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும், ஒரு அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்காக முன்னைய அரசாங்கம் 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்தாலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”அன்னையர் முன்னணி” அமைப்பில் இணைந்து செயற்படும், மரணச் சான்றிதழ்களை தம்வசம் வைத்திருக்கும் பெரும்பாலான காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்பிலேயே பிரதமர் அவதானம் செலுத்தத் தவறியுள்ளதாக காணமற்போனோரின் குடும்ப ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச 1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தலைமையில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பே ”அன்னையர் முன்னணி” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அரசியல் கட்சிகளுக்கும், இந்த அமைப்பின் தலைவர் சிரேஷ்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோவின் கையெழுத்துடன் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 6,000 ரூபாயை வழங்குவதற்காக, முன்னைய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன சற்றுமுன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
27/11/2020

இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன சற்றுமுன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

48வது. அகவையில் கால் பதிக்கும் தேசம் போற்றும் தேசிய தலைவரின் நிம்மதியான ஆரோக்கியமான, நீண்ட ஆயுளைக் கொண்ட வாழ்க்கையை கொடு...
27/11/2020

48வது. அகவையில் கால் பதிக்கும் தேசம் போற்றும் தேசிய தலைவரின் நிம்மதியான ஆரோக்கியமான, நீண்ட ஆயுளைக் கொண்ட வாழ்க்கையை கொடுத்தருவாயாக ஆமீன்

25/11/2020

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when RBC Media unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share