30/03/2018
மகிழ்ச்சியான செய்தி...
தாம்பரம் - கொல்லம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் - கடையநல்லூர் , செங்கோட்டை, புனலூர் வழியாக இயக்கம்...
5 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில் நாளை மறுநாள் தாம்பரம் - கொல்லம் - தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வண்டி எண்: 06027, தாம்பரம் - கொல்லம் சிறப்பு ரயில் மார்ச் 30ம் தேதி (வெள்ளி) அன்று, தாம்பரத்திலிருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 05.00 மணிக்கு கடையநல்லூர்-க்கு வந்து கொல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு போய் சேரும்.
வண்டி எண்: 06028, கொல்லம் - தாம்பரம் சிறப்பு ரயில் மார்ச் 31ம் தேதி (சனி) அன்று, கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 05.30 மணிக்கு கடையநல்லூர் வந்து, மறுநாள் காலை 05.00 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் , விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது.