SPN Online Services

SPN Online Services Financial, Online services

31/05/2026
11/05/2022
03/05/2022

என்னத்த சொல்ல

03/05/2022

|| கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ் | | | | | PolimerNews.com

29/04/2022

Corona update world wide: (உலக அளவில் கொரோனா பாதிப்பு அப்டேட்)Worldwide, 6,27,952 people have been affected by corona in the last 24 hours. The total number of corona victims so far has risen to 51,20,73,140. 46,58,29,487 people worldwide h...

27/04/2022

நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.

திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.

மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் பொது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்...!

25/04/2022
25/04/2022

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குத்துக்கல்வலசை வரை உள்ள சாலையில்....

கே.ஆர்.நகர் முதல் குத்துக்கல்வலசை வரை சாலையின் நடுவில் சுவர் கட்டி இருபுற சாலையையும் குறுகச் செய்திருக்கிறார்கள்.

சாலையின் நடுவில் தடுப்பு சுவர் இருப்பதற்கு சாலையின் இருபுறமும் 30 அடி அகல சாலைகள் இருக்க வேண்டும் என விதி இருப்பதாக தெரிகிறது.

ஆனால் ஒரு பஸ் போகும் அளவு இருமுறை சாலையை நடுவில் மறித்து சுவர் கட்டி இருப்பது போக்குவரத்தின் போது ஒரு ஆம்புலன்ஸ் வந்தால் முந்திச்செல்ல கூட இடமில்லை.

சாலையில் பேருந்து வரும் போது ஆட்டோ ஒதுங்கவும் டூவீலரில் போகும் போது ஒதுங்கவும் ஆபத்தான சூழல் உள்ளது. சாலையின் விளிம்பு பகுதி ஓர பாதையை விட்டு கால் அடி அரை அடி உயர்ந்து இருக்கிறது.

சாலையின் அகலத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் சாலையின் நடுவில் கட்டப்பட்டிருக்கும் சுவரை அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சாலையில் பயணிப்போர் கேட்டுக்கொள்கின்றனர்.

Address

Ambasamudram
627401

Telephone

+918838655611

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPN Online Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SPN Online Services:

Share