13/08/2026
🔴News ||திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு குறுவட்டத்தைச் சேர்ந்த நில அளவர் மகேஷை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், தாக்கப்பட்ட நில அளவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாவட்டத் தலைவர் முரளிவானன், மாவட்டச் செயலாளர் பனிமலர், மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.