CM Vinayagam Advocate Arni

CM Vinayagam Advocate Arni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CM Vinayagam Advocate Arni, Advertising/Marketing, no. 34/a6, thatchur Road, Near head post office arni town, Arni.

14/01/2022

தை பிறந்தால் வழி பிறக்கும்.. என் மக்கள் அனைவருக்கும் தாங்கள் விரும்பும் வண்ணம் வழி அமைய வேண்டும், குன்றாத செல்வமும், வளமும், ஆரோக்கியமும் அமைய ஈசனை வேண்டி என் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.❤️💐

28/06/2021

பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்
பட்டா ( ) – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்

ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு

ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.

ஒன்று பத்திரம் ( ), இன்னொன்று பட்டா ( ).

பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!

பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிற தோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.

அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!

எட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம்.

1. யு.டி.ஆர் பட்டா ( UDR – Updating Data Registry ):
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வே க்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.

அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.

மேனுவல் பட்டா ( Manuel Patta )

இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. பட்டா வில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட் பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு, எந்திரத்துடன் போராடி வருகின்றனர்.

இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கி றார்கள். இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கி றார்கள்.

இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.

2. நத்தம் நிலவரி திட்டம் – தோராய பட்டா & தூய பட்டா:
தோராய பட்டா முன்பக்கம்

யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள் ளைகாரன் காலத்திலேயே வகைபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது. பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும். அந்த நத்தம் நிலத்திற்கு தான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.

தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.

நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் ( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா!

முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும். அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூய பட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவ லாகவே இருக்கும். பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுக ளுடன் வரையபட்டு இருக்கும்.

ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தா தோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடு த்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

தூய பட்டா:

நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண் டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும்போது பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.

எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.

3. ஏ.டி கண்டிசன் பட்டா :
ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.

மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.

அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும் பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.

பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.

முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்

இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களு க்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.

4. நில ஒப்படை பட்டா:
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும்! முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், நலிவுற் றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடு க்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.

5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்க ளை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொது மக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள் . இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .

கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவி ற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்.

ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்க லாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக் கள் செய்யபடுகிறது.

6. தூசி பட்டா:
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது.

அரசு நிலத்தின்மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள், கனிதரும் மரங்க ள், ) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமைய ளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.

தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா

7. கூட்டு பட்டா:
தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.

நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டா வில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப் பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.

8. தனி பட்டா:
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.

புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப் பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன் , ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும்.

யு.டி.ஆர் பட்டா, நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி. கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது . தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

01/10/2020

ஒரு வழக்கறிஞர் அறிவிப்புக்கு பதில் அனுப்பாவிட்டால், அந்த நோட்டீஸில் சொன்னதை மறுக்காமல் ஒத்து கொள்வது போல் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notice not replied amounts to admission of contents of notice.

The Apex Court in Rakesh Kumar Vs. Hindustan Everest Tool Ltd. MANU/SC/0396/1988 : (1988) 2 SCC 165 and in Hiralal Kapur Vs. Prabhu Choudhury MANU/SC/0189/1988 : (1988) 2 SCC 172 has held that a categorical assertion by a landlord in legal notice if not replied to and controverted can be treated as an admission by the tenant.

Referred in M/s Pradeep Oil Corporation vs. Union of India (30.01.2012 - DELHC) : MANU/DE/0281/2012

INDIAN EVIDENCE ACT 1872 Section 106

16/10/2019

விளம்புகை மற்றும் உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி வாதியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கு சொத்து விபரத்தில் சர்வே எண்ணில் உட்பிரிவு எண் சேர்க்கப்படவேண்டும் என்று கோரி வாதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது எதிர்வாதியின் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும்போது மனு தாக்கல் செய்யப்பட்டது அவ்விதம் உட்பிரிவு செய்யப்பட்ட விஷயம் ஆணையர் அறிக்கையின் மூலம் வாதிக்கு ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் உரிய காலத்தில் அவர் திருத்த மனுவை தாக்கல் செய்யவில்லை நடைமுறை சட்டத்தின் படி விசாரணை துவங்கியதற்கு பின்னர் திருத்தல் மனுவை அனுமதிக்கக் கூடாது என்பதால் வாதியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

சின்னசாமி
-எதிர்-
கந்தசாமி(லேட்)மற்றும் பலர்
2016(1)TLNJ411 Cvil high court of Madras
ms.mala.j.
crp(po)no.1158 of 2015

14/10/2019

நீதி மன்றத்தில் சாட்சி சொன்ன அன்றே,வழக்காடிகளுக்கு சாட்சி சொன்ன deposition கிடைக்க வேண்டும் என்று தீர்ப்பு*⭐SC:Evidence & deposition to be given to parties immediately after being recorded in same day!*_

_The pernicious practice of the trial judge leaving the recording of deposition to the clerk concerned and recording of evidence going on in more than one case in the same Court, at the same time, under the presence and general supervision of the presiding officer has to be disapproved strongly and discontinued forthwith._

_The deposition of witnesses, must be recorded in typed format, using computers, in Court, to the dictation of the presiding officers(in English wherever possible) so that readable true copies will be available straightaway and can be issued to both sides on the date of examination itself. In the circumstances, we direct that the notices be issued to the Rrgistrars General of all HCs, and The Chief Secretaries/Administrators and the Advocate General/Senior Standing Counsels of all the states/Union Territories, so that general consensus can be arrived at on the need to amend the relevant rules of practice/criminal manuals to bring about uniform best practices across the courntry. This court may also consider issuance of directions under Art. 142 of the Constitution. They can be given the option to give suggestions also on other areas of concern._

_Case/Citation:_

_*Suo Moto Writ (Crl.) No. 1 of 2017.*_

_Date of decision:_
_30/03/2017._..

14/10/2019

பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா ? - உச்சநீதிமன்ற தீர்ப்பு.!

1960-ல் ஒரு தாயும் மகனும், மற்ற மகன்கள் மீது குடும்பச் சொத்துக்களைப் பொறுத்து பாக வழக்கு போட்டார்கள் .நிலங்கள் அல்லாத சில அசையாச் சொத்துக்களையும் அசையும் சொத்துகளையும் பாகம் செய்ய வேண்டும் என்பது வழக்கு !

கீழ்கோர்ட்டில், வழக்கு நடந்து, 1964-ல் பாகப் பிரிவினை வழக்கில் முதல் தீர்ப்பு வருகிறது ! மூன்றில் ஒருபாகம் வாதிகளுக்கு பாக உரிமை உள்ளது என முதல் நிலைத் தீர்ப்பானை வருகிறது. இதை Preliminary Decree என்பர் முதல் நிலைத் தீர்ப்பில், வழக்குப் போட்டவர்கள் பாகம் பெற உரிமை உள்ளவர்களா என்றும், அப்படியென்றால், அவர்களுக்கு எவ்வளவு பாகம் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வரும் ! அதன் அடுத்த கட்டமாக பைனல் டிகிரி (Final Decree) க்கு மனுச் செய்ய வேண்டும் . அதில், அவ்வாறு பாகம் கேட்டவரின் பாகத்தை, அளந்து பிரித்து தனியாக கோர்ட் தனி அனுபவத்துக்குக் கொடுக்கும்; இதுவே பொதுவான நடைமுறை.

இந்த வழக்கில், 1964-ல் முதல்நிலை தீர்ப்பானையை கோர்ட் கொடுத்தது. ஆனால் வாதிகள் 1987-ல் (சுமார் 23 வருடங்கள் கழித்து) பைனல் டிகிரி வழங்கும்படி கோர்ட்டை அணுகுகிறார்கள்! எதிர்ப்பாரட்டிகள் “இது காலதாமதமான மனு என்றும், ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு காலக்கட்டம் உள்ளது என சட்டம் சொல்லி உள்ளது என்றும் அவ்வாறான காலகட்டம் சொல்லாமல் விட்ட விஷயங்களுக்கு காலக்கெடு சட்டம் 1963-ல் தனியே ஒரு பிரிவு உள்ளது என்றும், அது பிரிவு 137 என்றும், அதன்படி மூன்று ஆண்டுகளுக்குள் பைனல் டிகிரி கேட்டு மனுச் செய்ய வேண்டும் என்றும், ஆனால் இங்கு இந்த வழக்கில் வாதிகள் சுமார் 23 வருடங்கள் கழித்து அந்த பைனல் டிகிரி மனுவைப் போட்டிருக்கிறார்கள் என்பதால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோர்ட்டில் வாதிடுகிறார்கள். அதற்கு ஆதாரமாக முன் வழக்கான Sital Prashad vs. Kishori Lal (AIR 1967 SC 1236 என்ற வழக்கையும், பழைய பிரைவி கவுன்சில் வழக்கான Saiyid Jowad Hussain vs. Gendan Singh, AIR 1926 PC 93 என்ற வழக்கையும் முன்தீர்ப்பாக காண்பிக்கிறார்கள்.

இதைப் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் கீழ்கண்டபடி தீர்ப்பை வழங்குகிறது.

பாகப் பிரிவினை என்பது ஏற்கனவே உரிமை உள்ள சொத்தில், பாகங்களை மட்டும் ஒதுக்கிக் கொள்வது; அதில் புதிதாக எந்த உரிமையும் ஏற்படுத்திக் கொள்வதில்லை; பலர் கூட்டாக அனுபவித்து வந்த சொத்தை, தனித்தனியாக அவரவர் பாகமாக ஒதுக்கித் தருவது மட்டுமே பாகப்பிரிவினை என்பது ஒரு சொத்தில் கூட்டு உரிமை இல்லாதவர், வழக்கில் ஒரு பார்ட்டியாக சேர முடியாது பாகம் என்றாலே பிரித்துக் கொள்வது என்பதே,

கூட்டுப் பாகஸ்தர்கள் எல்லோரும் தனித்தனியே சொத்தைப் பிரித்துக் கொண்டால் அது பாகப்பிரிவினை When all the co-owners get separated, it is a partition. ஆனால், அதில் ஒருவர் அல்லது இருவர் மட்டும் பிரித்துக் கொள்கிறார்கள், மற்றவர்கள் மறுபடியும் சேர்ந்தே சொத்தை அனுபவிக்கிறார்கள் என்றால் அது ஒரு பகுதி பாகப்பிரிவினையாகும். If only one brother wants to get his share separated and other three brothers continue to remain joint, there is only a separation of the share of one brother.

இப்படி எந்தப் பாகப்பிரிவினையாக இருந்தாலும் (தனித்தனி பாகங்களாகப் பிரித்தாலும், ஒருவர் மட்டும் தன் பாகத்தைப் பிரித்துக் கொண்டு விலகினாலும்), இதில் கோர்ட் இரண்டு டிகிரிகளை கொடுக்க வேண்டும்! ஒன்று பாக உரிமை உள்ளதா, அப்படியென்றால் எவ்வளவு பாகம் என்று முடிவு செய்வதைPreliminary Decree என்னும் முதல்நிலை தீர்ப்பானை என்றும், அப்படி முடிவு செய்தபின்னர், அதே கோர்ட், அந்தப் பாகங்களை தனித்தனி துண்டுகளாக பிரித்து அவரவர் பாகமாக ஒதுக்கி, அதன் அனுபவத்தை அவரவருக்கு கொடுப்பது Final Decree என்னும் இறுதிநிலை தீர்ப்பானை. இத்துடன் பாகப் பிரிவினை வழக்கு முடிவுக்கு வருகிறது

முதல்நிலை தீர்ப்பானையில், இன்னும் கோர்ட் செய்ய வேண்டிய வேலை உள்ளது என்பதை குறிக்கும்; பைனல் டிகிரியில் வேலை முடிந்து விட்டது என்பதாகும்

ஆனால், Decree என்றால் என்ன என்று சிபிசி சொல்கிறது.இரண்டு பார்ட்டிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையை அறுதியான முடிவுக்கு கொண்டு வந்தால் அது டிகிரி எனப்படும். ஆனால், Order என்பதும் டிகிரி போலவே இருக்கும் ஆனால், அது டிகிரி அல்ல இதற்கும் அதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், டிகிரியில் முடிவான முடிவு இருக்கும்! ஆர்டரில், முடிவு இருக்கும் ஆனால் அது மொத்த பிரச்சனையின் முடிவான முடிவாக இருக்காது!! ஒரு வழக்கில் எல்லாப் பிரச்சனையையும் முடிவான முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்புச் சொன்னால் அது டிகிரி; அந்த வழக்கில் ஒரு பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு மட்டும் முடிவு சொன்னால் அது ஆர்டர் ! சில ஆர்டர்களின் மீது அப்பீல் போகலாம்! சில ஆர்டர்களின் மீது அப்பீல் போக முடியாது!! ஆனால் எல்லா டிகிரியின் மீதும் அப்பீல் போகலாம்; இவ்வளவுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

The word Decree is defined in Sec.2(2) of CPC.

The word Preliminary Decree is explained in Order 20 R18(2) of CPC.

விவசாய நிலங்களாக இருந்து அதை பிரித்துக் கொடுக்க நினைத்தால், அதை அந்தக் கோர்ட் ஆர்டர் 20 ரூல் 18(1) மற்றும் பிரிவு 54 ன் படி சொத்தை பாகப்பிரிவினை செய்து தனித்தனியே பிரித்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும்,

விவசாய நிலம் அல்லாத மற்ற அசையாச் சொத்துக்களாக இருந்தால், பிரிவு 54 மற்றும் ஆர்டர் 20 ரூல் 18(2)-ன்படி முதல் நிலை தீர்ப்பானை வழங்கி, பாகத்தை முடிவு செய்து தீர்ப்புக் கொடுக்க வேண்டும். பின்னர், அந்த பாகத்தை கோர்ட்டே ஒரு வக்கீல்-கமிஷனர் மூலம் தனித்தனியே பிரித்துக் கொடுத்து, அதை உறுதிசெய்து பைனல் டிகிரி வழங்க வேண்டும். அத்துடன் அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும்,

முதல்நிலை தீர்ப்பின் மீது அப்பீல் போகலாம்! அவ்வாறு அப்பீல் போகாமல் இருந்துவிட்டால், அதைத் தொடர்ந்து வழங்கும் பைனல் டிகிரிமீது அப்பீல் போகமுடியாது! ஆக, முதல் நிலை தீர்ப்பானையே டிகிரி என்ற வரைமுறையில் வரும்.பைனல் டிகிரி என்பது, முதல்நிலை தீர்ப்பானையை தீர்த்துவைக்கும் வேலையே என்பது சரியாகும்,

முதல்நிலை தீர்ப்பானை வழங்கிய பின்னர், எவ்வளவு காலத்துக்குள் பைனல் டிகிரிக்கு மனுச் செய்ய வேண்டும் என்பதில் பல கோர்ட்டுகள் பல தீர்ப்புகள் வழங்கி உள்ளன ஆனால்

எல்லா வழக்குகளுக்கும் காலக்கெடு உள்ளது .எனவே எல்லா வழக்குகளையும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்! காலம் தவறினால், அந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது.அப்படியென்றால், பாக வழக்கில் முதல்நிலை தீர்ப்பானை வழங்கியபின், எவ்வளவு காலத்துக்குள் பைனல் டிகிரிக்கு மனுச் செய்ய வேண்டும்; அப்படி ஏதும் பைனல் டிகிரிக்கு அந்தச்சட்டத்தில் (The Limitation Act, 1963) குறிப்பிட்டுச் சொல்லவில்லை ஆனாலும், அந்த சட்டத்தில், அவ்வாறு காலக்கெடு ஏதும் சொல்லாத வழக்குகளில் மூன்று ஆண்டுகளுக்குள் மனுச் செய்ய வேண்டும் என்று பொதுவாகச் சொல்லி உள்ளது . எனவே அதை இந்த பைனல் டிகிரிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பல கோர்ட்டுகள் பல வழக்குகளில் முடிவு செய்துள்ளன,

மற்றும், சாதாரணமாக ஒரு வழக்கில் ஒரு டிகிரியை பெற்றால், அதை 12 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் . பணம் கேட்டு போட்ட வழக்கில் கிடைத்த தீர்ப்பை, தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து 12 ஆண்டுகளுக்குள் வசூலித்துக் கொள்ள வேண்டும் . அதற்குமேல் அந்த டிகிரியை உபயோகப் படுத்த முடியாது,

ஆனால், பாகப் பிரிவினை வழக்கில் கொடுக்கப்பட்ட முதல்நிலை டிகிரியை எவ்வளவு காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன

முதல்நிலை தீர்ப்பானைதான் முடிவான தீர்ப்பானை எனலாம்; அதற்குப்பின் அதை நிறைவேற்ற தனியே மனு ஏதும் செய்யத் தேவையில்லை! தீர்ப்பு வழங்கிய கோர்ட்டே தொடர்ந்து அந்த வேலையைச் செய்து பைனல் டிகிரியை கொடுத்து வழக்கை முடிக்க வேண்டும். முதல் நிலை தீர்ப்பானையின் தொடர்ச்சியே பைனல் டிகிரி ஆகும்! அதை ஒரு டிகிரியை நிறைவேற்றும் மனு என்று தனியே கணிக்கக் கூடாது தொடர் நிகழ்வே எனவே அதற்கு காலக்கெடு ஏதும் இல்லை; எப்போது வேண்டுமானாலும், ஒரு பாக வழக்கில் கொடுத்த முதல்நிலை டிகிரியை நிறைவேற்றலாம் அப்படியென்றால், இப்படிபட்ட வழக்குகள் பல ஆண்டுகள் நிறைவேற்றாமல் இருந்துவிடுமே! எனவே இதற்கு ஒரு முடிவு தெரியவேண்டும். என்பதால், அப்படிப்பட்ட பாக வழக்கில் முதல் நிலை டிகிரி கொடுத்த கோர்ட்டே, அதைத் தொடர்ந்து -பார்ட்டிகளுக்கு சம்மன் அனுப்பி, சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்; அதற்கு காலக் கெடு ஏதும் சட்டத்தில் இல்லாத போதிலும், கோர்ட்டே எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் இதில் பார்ட்டிகள் மனுச் செய்தால்தான் கோர்ட் அந்த பைனல் டிகிரி மனுவை எடுத்துக் கொள்ளும் என்று இருந்துவிடக் கூடாது

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் தீர்ப்புக் கொடுத்துள்ளது,

இனி வரும்காலங்களில், பாக வழக்கில் முதல்நிலை தீர்ப்பு வந்தபின்னர்,பைனல் டிகிரிக்கு மனுச் செய்தாலும், அதற்கு காலக் கெடு ஏதும் இல்லை என்பதை சுப்ரீம்கோர்ட் உறுதிசெய்துள்ளது.

Address

No. 34/a6, Thatchur Road, Near Head Post Office Arni Town
Arni
632301

Telephone

+918012079339

Website

Alerts

Be the first to know and let us send you an email when CM Vinayagam Advocate Arni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CM Vinayagam Advocate Arni:

Share