M Mani

M Mani Ad Film Making, TV Telecasting, Radio Telecasting, Celebrity Invite,theater telecast,
Hoarding board

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு. தெரிந்து கொள்வோம்.!!!1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லி...
08/07/2016

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு. தெரிந்து கொள்வோம்.!!!

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. இரண்டாவது மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

Highest Gopuram In ASIA Is Srirangam Temple..  The tallest gopuram in ASIA is the one at sri Ranganathaswamy temple in S...
07/07/2016

Highest Gopuram In ASIA Is Srirangam Temple..

The tallest gopuram in ASIA is the one at sri Ranganathaswamy temple in Srirangam. situated on the Island of river cauvery,this temple has 21 gopuram. the rajagopuram or the main gateway is a staggering 236ft tall and has 13 kalasams made of heavy copper on the top
visit:www.geethai.in

மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ். "ஏண்ணே, இப்போ எல்லா பசங்களும் ...
07/07/2016

மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ்.

"ஏண்ணே, இப்போ எல்லா பசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும் தலைவர் யோசித்தார்.

"சரி, இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுடறேன். வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.

இலவச சீருடை அணிந்து பள்ளிக்குச்சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம்.

நேற்று வரை தங்க ஜரிகை சட்டை போட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப் போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான்.

அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப் படுகிறது.

இன்டஸ்டிரியல் போட்டோ கிராபி,கார்ப்பரேட் போட்டோகிராபி,ஸ்ட்ரீட் போட்டோகிராபி,உணவு போட்டோகிராபி,கிட்ஸ் போட்டோகிராபி,மாடலிங்...
06/07/2016

இன்டஸ்டிரியல் போட்டோ கிராபி,
கார்ப்பரேட் போட்டோகிராபி,
ஸ்ட்ரீட் போட்டோகிராபி,
உணவு போட்டோகிராபி,
கிட்ஸ் போட்டோகிராபி,
மாடலிங் போட்டோகிராபி என
பலவித களங்கள் உண்டு இங்கே…!!!!
மனம் மட்டுமே வேண்டும்
ஒவ்வொரு நொடியும் நம் ஒவ்வொரு செயலும்
உண்மையான தொழில் முறை உணர்வோடு
உழைத்திட…!!
முயன்றால் முடியும் தோழர்களே!!!

பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், 2011வது வருடம் இடம...
06/07/2016

பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், 2011வது வருடம் இடம் பெற்றவரில் ஒருவர், 98 வயதான மூதாட்டி ஹோமய் வைதரலா.

இவர்தான், நம் நாட்டின் முதல் பெண் பத்திரிகை போட்டோகிராபர்.

இவர் விருது பெறுவதற்கு, இது மட்டுமே தகுதி இல்லை. இவர், தன் வேலையின் போது காட்டிய சாதனைகளே, இவரை விருது பெற வைத்துள்ளது.

அப்படி என்ன சாதித்தார்?

குஜராத் மாநிலம், நவசார் பகுதியில், 1913ல் பிறந்தார். ஆண்களே பள்ளிப் படிப்பை தாண்டாத அந்தக் காலத்தில், படிப்பது பிடித்து போனதால், பிடிவாதமாக படித்து, கல்லூரி வரை சென்றவர், அந்த ஊரில் இவர் ஒருவரே.

மும்பையில் உள்ள கலைக் கல்லூரியில், ஓவியம் தொடர்பான பாடப் பிரிவை எடுத்து படித்தார். அப்போது, அதே கல்லூரியில் மானேக்ஷா என்பவர் புகைப்படம் தொடர்பாக பாடம் எடுக்க வந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது.

காதல் கணவர் மானேக்ஷாவின் பிரதான தொழில், பத்திரிகைக்கு படம் எடுப்பதுதான். உனக்கு எதற்கு இதெல்லாம் என்று சொல்லாமல், புகைப்படம் தொடர்பான அனைத்தையும் மனைவிக்கு கற்றுக் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில், அவசரமாக எடுக்க வேண்டிய ஒரு படத்தை, தன் மனைவியை எடுக்கச் சொன்னார். எந்தவித பதட்டமும் இல்லாமல், அவர் எடுத்த புகைப்படம் அருமையாக இருக்கவே, தன்னால் போக முடியாத இடத்திற்கு, தன் மனைவியை அனுப்பி வைத்தார். அந்த வகையில், இவர் எடுத்த படம், முதல் முறையாக இவரது பெயருடன் மும்பை பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதற்கு, ஒரு ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது. இது, அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை என்பதால், ஓவியமா, புகைப்படமா என எண்ணியவர், இனி, புகைப்படமே தன் வாழ்க்கை என்று முடிவு செய்தார்.

அதன் பிறகு, "யார் இவர்?' என கேட்கும் அளவிற்கு, பல படங்கள் வெளிவந்தன.

இதன் காரணமாக, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் அரசு, இவரை புகைப்படக்காரராக பணியாற்ற அழைப்பு விடுத்தது; அழைப்பை ஏற்று, டில்லி சென்றார்.

டில்லியில் இவரது வளர்ச்சி வேகமெடுத்தது. அதற்கு, இவர் தந்த விலையும் அதிகம். பாலுக்காக எப்போது அழும் எனத் தெரியாத, மூன்று மாத கைக் குழந்தையுடனேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது, புகைப்படக் கருவிகளும் சற்று கடினமானவை, எடை கூடுதலானவை, வேலையும் அதிகம் வைப்பவை.

அதே போல், படம் எடுக்க எவ்வளவு நேரமும், சிரமமும் உண்டோ, அதே போல, எடுத்த படத்தை பிரின்ட் போடவும் ஆகும். படத்தில் நேர்த்தி வேண்டும் என்பதற்காக, புகைப்படம் எடுத்த காலம் முழுவதும் இவர் உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தானே அனைத்து வேலைகளையும் செய்வார். இதனால், தூங்கிய நேரம் மிகக்குறைவே!

இவர் படம் எடுக்கும் விதம், பலருக்கும் பிடித்து போனது. இதன் காரணமாக, நேருவின் நெருங்கிய தோழி போல இருந்தார். இன்றைக்கு காணக்கூடிய நேருவின் நல்ல படங்கள் பல, இவருடையது தான்.

இருபதாம் நூற்றாண்டில் இடம் பிடித்த சரித்திர நாயகர்கள் மவுண்ட்பேட்டன், கென்னடி, குருசேவ், நிக்சன், சூ-என்-லாய் உள்ளிட்ட டில்லி வந்த விருந்தினர்கள் பலர், இவரது கேமராவில் சிக்கியுள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின் போது, "நாட்டின் நிஜ தரிசனத்தை காட்ட வேண்டும், கொஞ்சம் சவாலான விஷயம், களத்தில் இறங்க முடியுமா?' என்று கேட்டு முடிப்பதற்குள், களமிறங்கி, ஆண் போட்டோகிராபர்கள் பலரும் அஞ்சி தவிர்த்த விஷயங்களைக் கூட, இவர் அஞ்சாமல் சென்று, அற்புதமாக பதிவு செய்தார். நாடு சுதந்திரமடைந்ததும், டில்லி செங்கோட்டையில் பிரதமராக, நேரு கொடியேற்றும் முதல் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை படம் எடுத்தார்.

காந்தி, நேரு, சாஸ்திரியின் இறுதி சடங்குகளை பதிவு செய்தவர் என்று, சரித்திரத்தின் பல பக்கங்கள் இவரது படங்களால் நிரப்பப் பட்டுள்ளன. இப்படி, 57 வருடங்கள் பம்பரமாக சுற்றி, சுழன்று படம் எடுத்தவருக்கு, திடீரென இடி, இவரது கணவர் மறைவு என்ற ரூபத்தில் வந்தது. தனக்கு எல்லாமாக இருந்த கணவரின் மறைவிற்கு பின், வாழ்க்கையே சூன்யமாகிப் போனதாக உணர்ந்தவர், அதன்பின், புகைப்படக் கருவியை தொடவில்லை; அதுவரை எடுத்த படங்களை பாதுகாப்பதிலும் பெரும் அக்கறை காட்டவில்லை.

பேராசிரியராக வதோராவில் பணியாற்றிய தன் ஒரே மகனிடம் போனார். அங்கும், அவருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரது மகன், புற்றுநோயால் எதிர்பாராத விதமாக இறந்து போக, அதன் பிறகு எந்தப் பிடிப்பும் இல்லாமல், வதோராவில் உள்ள வீட்டில், யாருடைய உதவியும் இல்லாமல், தனியாக, தன் சேமிப்பில், வாழ்ந்து வருகிறார். யாரையும் வேலை வாங்குவது, அவருக்கு எப்போதுமே பிடிக்காது. ஆகவே, இந்த வயதிலும் தனக்கான துணிகளை துவைப்பது முதல், சமையல் செய்து கொள்வது வரையிலான சகல வேலைகளையும் செய்து, வாழும் அவரை, அரசு இப்போது அடையாளம் கண்டு, பத்மவிபூஷன் விருதை அறிவித்தது.

06/07/2016



#காலா காலமாக
மனிதன் அதிகம் தோற்றது
அவனது வயிற்றிடம்தான்
அந்த வயிறே தோற்றது
நோன்பிடம்தான்

மருதோன்றி மணம் கமழ
ஊரெல்லாம் அம்மி இசை
விடிந்தால் பெருநாள்
பெண்ணவர்கள் உள்ளங்கையில்
மேற்கு வானம் விரியக்கண்டோம்
அதில் பிறையுடன் நட்சத்திரங்கள்
சிவந்து மின்னக் கண்டோம்

புத்தாடை புது மணத்தில்
கிறங்கி நின்றோம்
துதலுடன் மஸ்கட்டும்
வித விதமாய் பலகாரம்
முறுக்கும் சேர்த்து
அயலெலாம் பகிர்ந்த்துண்டோம்
எண்ணை தோய்ந்த
மருதோன்றிப் பிஞ்சுக் கையில்
பெருநாள் பணம் புரள
குதூகலிக்கும்
சிறப்பு கண்டோம்

நோன்புக் கஞ்சிபோல்
சுவையான மாதத்தின்
பேரீத்தம் பழத்தைப்போல்
இனிப்பான நாள் இன்று...

#இனியரமலான்தினநல்வாழ்த்துக்கள்

ManimediaFour Wheelers Ad Making  &  Contact +91 9677285385manimedia13@gmail.com
06/02/2016

Manimedia
Four Wheelers Ad Making
&
Contact
+91 9677285385
[email protected]

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Mani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Mani:

Share