30/05/2025
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🔴🔴. *.. படிக்க., தவறாமல்..*. 🔴🔴
*டிஜிட்டல் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்..!*
நமது தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்கத்தின் *15 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள், ஜூன் 1 ஆம் தேதி, ஈரோடு மாநகரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. என்பதை அனைவரும் அறிவீர்கள்..*
*👉 நம் டிஜிட்டல் சொந்தங்களுக்கு, சில சிறப்பான, பயனுள்ள புதிய அறிமுகங்கள், மிகவும் விலை குறைந்த பிரிண்டிங் இயந்திரங்கள். அங்கு காட்சிப்படுத்தபட உள்ளன, அத்துடன் அரசு மானியத்துடன் கூடிய கடன் சேவை, அடமானம் இல்லாத தனியார் வங்கி கடன் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
*நம் சொந்தங்கள் அனைவரும் சொந்தமாக மெஷின் வைத்து தொழில் செய்ய வேண்டும். யாரையும் நம்பி இருக்க கூடாது என்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்கம்.*
*👉 மிகுந்த பணிச்சுமை மற்றும் நிதிச் சுமைகளை ஏற்று தலைமை மற்றும் ஈரோடு மாவட்டம் சார்பில் இந்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.*
*👉 இது 15 ஆம் ஆண்டு விழா என்பதால் மிகுந்த பொருட்ச் செலவில் ஏற்பாடு செய்து, இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர ஆணையர், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து தென்னிந்திய டிஜிட்டல் சங்க நிர்வாகிகள், அனைவரும் இதில் பங்கு பெற அழைக்கப்பட்டிருக்கின்றனர்.*
*👉 இச்சங்கம் முழுக்க முழுக்க நம் தொழிலை காப்பாற்றுவதற்காக போராடி வருகிறது. பல கட்ட நேரடி போராட்டங்கள் மூலமும், பல கட்ட சட்டப் போராட்டங்கள் மூலமும், பலகட்ட உயர்மட்ட அதிகாரிகளின் சந்திப்பின் மூலமாகவும் பல சட்ட திருத்தங்களை மேற்கொண்டு, இதுவரை இந்தத் தொழிலை நாம் காப்பாற்றி வருகிறோம், என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.*
*👉 இந்த சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில், இன்று இந்த டிஜிட்டல் தொழில் உயிர்ப்புடன் இருக்கிறது, என்பது அனைவருக்கும் அறிந்த உண்மை.*
*" இது அனைவரது கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி "*
*👉 அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் விதத்திலும் அதிகாரிகளுக்கும் அரசுக்கும் நமது பலத்தை நிரூபிக்கும் விதத்திலும் ஆண்டுதோறும் இந்த விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.*
*👉 இந்த சங்கத்திற்காக நம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தன் குடும்பத்தை மறந்து, தொழிலை மறந்து மிகப்பெரிய தியாக மனப்பான்மையுடன் இந்த தொழிலை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.*
*👉அதனால் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்ட உறுப்பினர்கள், தங்கள் நிறுவன ஊழியர்கள், தங்களுடன் இணைந்து பணிபுரியும் சாரம் கட்டும் தொழிலாளர்கள், வெல்டர்கள், பேப்ரிகேட்டர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இதில் குடும்பமாக பங்கு பெறும்படி தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்க ஈரோட்டில் காத்திருக்கிறோம்.*
*" ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு!! "*
-மாநிலத் தலைமை.