Srisai Designer Computer Embroidery and Aari

Srisai Designer Computer Embroidery and Aari Blouse computer embroidery and Aari work

01/03/2024
01/03/2024

‘சக்கரத்தாழ்வார் ‘ பின்னால் ‘நரசிம்மர் ‘ இருப்பது ஏன் ?

திருமாலின் கையிலுள்ள
சக்கரத்தை சக்கரத்தாழ்வார்
என்பர்.
சக்கரத்தை வழிபட்டால்
துன்பம் உடனடியாக தீரும்
என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை
காக்க திருமால்,
நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து
வராததாலும் , கருடருடன்
வராத காரணத்தாலும்,
இந்த அவதாரத்தை அவசர
திருக்கோலம் என்பர்.

பக்த பிரகலாதனுக்காக
ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி
யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்...!

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும்
அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும்
நரசிம்மர் நம் முன்னே வந்து
உடனடியாக குறைகளைத்
தீர்ப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால்
சங்கடம் நீங்கி வாழ்வில் சகல
நன்மையும் உண்டாகும் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாளை என்பது நரசிம்மருக்கு
கிடையாது .
துன்பத்தில் இருந்து விடுபட்டு
உடனடியாக நற் பலன்களை
அடைய சக்கரத்தாழ்வரையும்
நரசிம்மரையும் ஒரு சேர
வழிபடுவது மிகச் சிறப்பு.

இதன் அடிப்படையில் தான்
சக்கரதாழ்வர்க்கு பின்
ஸ்ரீநரசிம்மர் இருப்பார்...!

01/03/2024

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பற்றி
ஸ்ரீ மஹாபெரியவா சொல்கிறார்...

ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே” என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

ஸ்ரீ தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.

இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.

இது நோய்களைப் போக்கும்.

செல்வத்தை அளிக்கும்.

அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்)

நீண்ட ஆயுள் தரும்.

பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி
பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

இது பாவத்தை நீக்கும்.
பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .

பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.

பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.

எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.

அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.

ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீலலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.

தேவியின் அருளின்றி யாரும் இதனைப்பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.

எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர...

01/03/2024

"இலைகள் கூடி பேசினவாம்"

"வாழை இலை சொன்னதாம்...
"நான் தான் எல்லோரையும் விட 'சிரேஷ்டம்' யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள்.

அதனால் நான் தான் சிரேஷ்டம் என்றதாம் .

வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை குபீரென்று சிரித்து ....

' அட பைத்தியமே , 'நீ என்ன ஸ்ரேஷ்டம்? நன்றாக சாப்பிட்டு முடித்ததும் உன்னை 'குப்பைத் தொட்டியில் 'அல்லவா வீசி எறிகிறார்கள், என கிண்டல் அடித்தது .

உன்னை விட நான் தான் சிரேஷ்டம், தெரியுமா?
'மடத்து' சமையல் ருசியில் அனைவரும் வயிறு நிறைய..
ஏன் அதற்கு மேலும் நிறைய சாப்பிட்டு விடுவார்கள்.....

மடத்து சாப்பாட்டின் ருசி அப்படிப்பட்டது, நெஞ்சு நிறைய சாப்பிட்டவர்கள் அடுத்து , அது ஜீரணமாக தேடுவது என்னைத்தான் வயிற்றிலிருக்கும் சாப்பாடு ஜீரணமாக நான் மிக, மிகத் தேவை அதனால் நான் தான் மிகச் சிரேஷ்டம் என பதிலளித்ததாம் வெற்றிலை.!

இதைக் கேட்ட கருவேப்பிலை சொன்னதாம்..... என்ன?
நீ தான் சிரேஷ்டமா? என்ன ஒரு முட்டாள் தனமாக பேசுகிறாய்.....

ஜீரணமாக உன்னை உபயோகித்துவிட்டு சக்கையாக்கி!!
உன்னை "தூ' என துப்பி விட்டு, போகிறார்கள்.....
ரோடெல்லாம் உன்னால் அசுத்தம்....
'நீ என்ன சிரேஷ்டம் ?....
என கூறிய கருவேப்பிலை, ' நான் தான் மிக மிக முக்கியமானவன், எங்கு சாப்பாடு நடந்தாலும், எந்த சமையல் ஆனாலும், நான் இல்லாமல் ருசிக்குமா? அனைத்து சமையலிலும் என் தாளிப்பு இல்லாமல் ருசிக்காது, அதனால் நான் தான் ஒசத்தி, சிரேஷ்டம் என்றதாம் கருவேப்பிலை........

வாழை இலையும் ,வெற்றிலையும் குபீரெனச் சிரித்ததாம்.....

சமையல் ஆகும் வரைத் தான் உன் ஆட்டமெல்லாம்,...

இலைக்கு வந்ததும் ,முதலில் உன்னை சாப்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்து தானே சாப்பிடுகிறார்கள்....

ஒதுக்கப்பட்ட நீ என்ன சிரேஷ்டம்? எனச் சொல்லி கேலி செய்ததாம் இரண்டும்.

இதையெல்லாம் கேட்டும் மவுனமாக இருந்த ஒரு இலையை, பக்தர் எடுத்து தெய்வத்தின் மேல் சூட்டினார் , தெய்வத்தின் மார்பில் அமர்ந்த அந்த இலை சொன்னதாம்......

"நான் துளசி"

வாழை இலையே!!!! நீ தான் ஒசத்தி ,சிரேஷ்டம் என பேசினாய், அகங்காரப்பட்டாய்.......
அதனால் நீ குப்பை தொட்டிக்கு போனாய்.

வெற்றிலையே!! உன் கர்வப் பேச்சால் நீயும் அகங்காரம் கொண்டாய் அதனால் நீ தெருவிற்கு போனாய்...

கருவேப்பிலையே!!! ''நான்' தான் சிரேஷ்டம் என அகங்காரப் பட்டாய், அதனால் இலையின் வெளியில் தள்ளப்பட்டாய்.....

நான் அகங்காரத்தை விட்டேன்...
அதனால் அந்த பகவானின் பாதம் சேர்ந்தேன்
' நான் துளசி' என்றதாம்.
*துளசி பத்ரம் அகங்காரத்தை விட்டதால்தான் என்றும் ஆண்டவனை அலங்கரிக்கிறது*

*துளசி இல்லாத ஹரி பூஜையே முழுமையாகாது,
நாம் எல்லோரும் அகங்காரத்தை விடுத்து இறைவனது திருவடி நிழலில் சேர்வோம்.

" நான்" எனும் அகங்காரத்தை(அகந்தை) ஒழந்தால்தான் ,

நாம் அந்த இறைவனின் திருவடியை அடைவோம் இறைவனின் அன்புக்கு பாத்திரமாவோம்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்!

நாமும் நமது அகங்காரத்தை விடுத்து துர்குணங்களை விடுத்து நற்குணங்களை ஏற்றுக் கொண்டோமே ஆனால் நாம் இறைவன் திருவடியை
எளிதில் சென்றடையலாம்.

சர்வம் ஓம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம் !

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்

01/03/2024
01/03/2024
28/02/2024

Address

SRISAI DESIGNERS
Cheyyar
604407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srisai Designer Computer Embroidery and Aari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share