காஞ்சி இதழ்

காஞ்சி இதழ் free edition for all people's & lot off areas

06/06/2026
30/04/2026

படித்து பகிர்ந்து 🌹 🌹 🌹 🌹 திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம்?

* திருப்பதி பஸ்-ஸ்டாண்டின் எதிர்புறம் இருக்கும் சீனிவாசன் காம்ப்ளக்ஸில் இலவசக் குளியலறைகள், கழிவறைகள் உள்ளன. இவை தவிர நமது லக்கேஜ் பையை வைக்க, இலவச லாக்கர்களும் உள்ளன. அதில் நாம் கொண்டு போன லக்கேஜ்களை வைத்துவிட்டு, அங்கிருக்கும் ஹாலில் ஓய்வெடுக்கலாம். இரவு நேரம் என்றால் அங்கேயே படுத்து உறங்கலாம். சுத்தமாகவும் சிறப்பாகவும் அவை பராமரிக்கப்படுகின்றன. கீழ்த் திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜ சுவாமி கோயில், அலமேலு மங்காபுரம் ஆகிவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம்.

* ரயிலில் வருபவர்களுக்கு வசதியாக ரயில் நிலையம் எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்திலும் இதே போல் வசதிகள் உள்ளன.

* கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்துசெல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக அலிபிரிக்கும், ஶ்ரீவாரிமெட்டுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இலவச பஸ் வசதி உண்டு.

* திவ்ய தரிசனம் செய்ய, நடந்தே மலையேறி வருபவர்களுக்கு வசதியாக அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை இலவசமாகக் கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.

* திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல இடங்களிலும் இலவச லாக்கர் வசதி உண்டு. இதில் நம் லக்கேஜ்களை வைத்துச் செல்லலாம். ஆனால், மிகவும் காஸ்ட்லியான நகைகள், அளவுக்கு அதிகமான பணம் இவற்றைத் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.

* திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் இலவசக் கழிப்பறைகள், பக்தர்கள் காலைக் கடன்களை முடிக்க எளிதாக உதவக்கூடியவை.

* உங்களின் செல்போன், காலணிகளைப் பாதுக்காப்பாக வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அங்கு வைத்து டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.

* 'கல்யாணக்கட்டா' என்று சொல்லப்படும் முடிக்காணிக்கை செய்யும் இடத்தில் முடிக்காணிக்கைக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. இங்கு சந்தனம் மற்றும் புதிய பிளேடு ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

* சர்வதரிசன க்யூவில் சென்று சுவாமி தரிசனம் செய்தால், தரிசனம் செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது. செவ்வாய், புதன்கிழமைகளில் கூட்டம் மிகவும் குறைவாக இருக்கும். தரிசனத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் பொங்கல், சாம்பார் சாதம், உப்புமா இவற்றில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படும். சிலவேளைகளில் பசும்பால் வழங்கப்படும்.

* தரிசனம் முடித்து வரும் அனைவருக்கும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். இல்லாவிட்டால், பொங்கல், புளியோதரை, மிளகு சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.

* கோயிலின் பிரதான வாசலைத் தாண்டி வெளியே வந்தால், தரிகொண்டா வெங்கமாம்பா இலவச அன்னதானக்கூடம் இருக்கிறது. இங்கு வேண்டுமளவு சாதம் சாம்பார், ரசம், மோர், பொரியல் துவையலுடன் இலவசச் சாப்பாடு வழங்கப்படுகிறது.

* இதையெல்லாம் தாண்டி மலை முழுவதும் சுற்றி வர, இலவச பஸ் ஆரஞ்சு நிறத்தில் ரதம்போல பவனி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பஸ் என காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மலையைச் சுற்றி வருகிறது. இதில் ஏறி நாம், திருமலையில் எந்த இடத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கிக் கொள்ளலாம்.

* இது தவிர இலவச மருத்துவமனை ஒன்றும் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது.

🚆 அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் பாதை இரட்டிப்பாக்கம்: PM கதிசக்தி திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய மைல்கல்! 🚉✨மத்திய அரசின்...
31/03/2026

🚆 அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் பாதை இரட்டிப்பாக்கம்: PM கதிசக்தி திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய மைல்கல்! 🚉✨

மத்திய அரசின் 'PM கதிசக்தி' (PM GatiShakti) திட்டத்தின் கீழ் நடைபெற்ற 110-வது நெட்வொர்க் திட்டமிடல் குழு (NPG) கூட்டத்தில், தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கியமான ரயில்வே திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us 𝕏 | ⓕ ரெயில் தகவல் - TN Rail Info

📍 அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டிப்பாக்கம்:

நீளம்: சுமார் 67.8 கிலோமீட்டர் தூரமுள்ள ஒற்றைப் பாதை, இரட்டைப் பாதையாக (Doubling) மாற்றப்பட உள்ளது.

மாவட்டங்கள்: இந்த ரயில் பாதை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.

நிலையங்கள்: செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் சந்திப்புகள் உட்பட மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

🔹 நெரிசல் குறைப்பு: தற்போதுள்ள ஒற்றைப் பாதையில் ஏற்படும் ரயில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.
🔹 வேகமான பயணம்: பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் காலதாமதமின்றிச் சீராக இயங்க வழிவகை செய்யப்படும்.
🔹 பொருளாதார வளர்ச்சி: தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதிகளில் சரக்குப் போக்குவரத்து எளிதாகும், இது பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

சென்னை - பெங்களூரு வழித்தடம் மேம்பாடு
இதே கூட்டத்தில், ஒயிட்ஃபீல்டு - பங்கார்ப்பேட்டை இடையே 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிப்பாதை (Quadrupling) அமைக்கும் திட்டத்திற்கும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, சரக்கு போக்குவரத்தையும் வேகப்படுத்தும்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் 'ஒட்டுமொத்த அரசு' (Whole of Government) என்ற அணுகுமுறையில், கடைசி மைல் வரையிலான இணைப்பை (Last-mile connectivity) உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளன! 🏗️🛤️

Address

Velalar Street
Dusi
631702

Alerts

Be the first to know and let us send you an email when காஞ்சி இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to காஞ்சி இதழ்:

Share