மஞ்சள் மாநகரம்

மஞ்சள் மாநகரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மஞ்சள் மாநகரம், Advertising agency, Erode.

In this page sharing like News entertainment Social informations , Business Advertisement, promotions, New technology, commonly we say updating people's business.

லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் நியமனம்!  |   |   |   |
25/05/2026

லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் நியமனம்!

| | | |

 #சட்டம்_ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக அன்பு ஐ.பி.எஸ் நியமனம்: சென்னை முன்னாள் கமிஷனர் அருணுக்கு முக்கிய பதவி*தமிழக காவல்துறையி...
25/05/2026

#சட்டம்_ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக அன்பு ஐ.பி.எஸ் நியமனம்: சென்னை முன்னாள் கமிஷனர் அருணுக்கு முக்கிய பதவி*

தமிழக காவல்துறையில் மிக முக்கியப் பதவிகளான சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவிகளுக்குப் புதிய உயர் அதிகாரிகளை நியமித்துத் தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஏ.டி.ஜி.பி டி.எஸ்.அன்பு ஐ.பி.எஸ் புதிய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையரான ஏ.அருண் ஐ.பி.எஸ், லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக (ஏ.டி.ஜி.பி) நியமிக்கப்பட்டு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் இன்று (25.05.2026) வெளியிட்டுள்ள ஆணைப்படி, மாநில காவல்துறையின் முக்கிய உயர் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளன.

புதிய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி நியமனம்:

தமிழக காவல்துறையின் மிக முக்கியப் பொறுப்பான சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) பதவியில் இருந்த டாக்டர் மகேஸ்வர் தயாள் ஐ.பி.எஸ் மாற்றப்பட்டு, சென்னை நிர்வாகப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக இருந்த டி.ஜி.பி (நிர்வாகம்) பணியிடத்தை ஏ.டி.ஜி.பி அந்தஸ்திற்குத் தரம் இறக்கி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, ஏற்கனவே கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான டி.எஸ்.அன்பு புதிய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை:

இதேபோல், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையராகப் பணியாற்றி, பின்னர் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏ.அருண் ஐ.பி.எஸ்-க்கு தற்போது மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக / இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக இருந்த டி.ஜி.பி (லஞ்ச ஒழிப்பு) பணியிடத்தை ஏ.டி.ஜி.பி நிலைக்குத் தரம் இறக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக ரீதியாகப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் சூழலில், இந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அதிரடி இடமாற்ற உத்தரவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

 #ஈரோட்டின்_கொடைவள்ளல் ‘கயிலைமணி’ முனுசாமி முதலியாரின் 103-வது பிறந்தநாள்: கல்வி, ஆன்மீகம் மற்றும் சமுதாயப் பணிகளின் உன்...
25/05/2026

#ஈரோட்டின்_கொடைவள்ளல் ‘கயிலைமணி’ முனுசாமி முதலியாரின் 103-வது பிறந்தநாள்: கல்வி, ஆன்மீகம் மற்றும் சமுதாயப் பணிகளின் உன்னத சாட்சி!

சமுதாயத்தில் வாழ்ந்த காலத்தில் வளம் பல சேர்த்து, ஆன்மீகம், கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் முத்திரை பதித்து, இன்று நாம் நினைத்துப் பார்த்து வணங்கத்தக்க மாமனிதராகத் திகழ்பவர் ஈரோட்டைச் சார்ந்த கயிலைமணி முனுசாமி முதலியார் அவர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய இந்த மாபெரும் சான்றோரின் 103-ஆவது பிறந்தநாளான இன்று (25.05.2026), ஈரோடு செங்குந்த மகாஜன சங்கம் சார்பாக அவரது எண்ணற்ற சேவைகள் நினைவு கூரப்பட்டு போற்றப்படுகின்றன.

தன் தந்தை தன் பெயரிலேயே தொடங்கி நடத்திய 'அர்த்தனாரி முதலியார் இரும்பு கடை' என்ற கடையில், பள்ளிப் பருவத்திலேயே தந்தைக்குத் துணையாகச் சென்று வரத் தொடங்கினார் முனுசாமி முதலியார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் முழுமையாகக் கடையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு 'சிவ தீட்சை' பெற்றவராகத் திகழ்ந்தார்.

கல்விப் பணியை மக்கள் பணியாகக் கருதிய அவர், ஈரோட்டில் கல்வி நிறுவனங்கள் பல உருவாக முக்கியக் காரணமாக இருந்தார். ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கு மிக முக்கிய உறுதுணையாக இருந்தார். புகழ்பெற்ற 'இருமொழி சொற்கொண்டல்' திரு. மீனாட்சி சுந்தரம் முதலியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சமுதாயப் பணிகளை மேற்கொண்டார். ஈரோட்டில் அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்கக் காரணமாக இருந்து, அதன் சார்பாக வைராபாளையத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியைக் கட்டி, அதன் தலைவராகப் பல்லாண்டுகள் திறம்பட வழிநடத்தினார். முதலியார் கல்வி அறக்கட்டளையின் (ஈரோடு கலைக் கல்லூரி) பொருளாளராகப் பணியாற்றினார். ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தின் பொறுப்பில் இருந்து, சாதி மத பேதமின்றி அனைத்து இன மாணவர்களும் கல்வி பயில வழிவகுத்தார். துடுப்பதி ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆன்மீகக் கடல் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் பெயரால் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். அங்கே தினசரி இரண்டு மருத்துவர்களைக் கொண்டு ஏழை எளிய மக்களின் நோய்களைப் போக்கினார். நோயாளிகளிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு, அவர்களுக்கான மருந்து, மாத்திரைகளைத் தன் சொந்தச் செலவிலேயே வழங்கி வந்து அரியதொரு சமுதாயத் தொண்டைச் செய்தார். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எப்பொழுது ஈரோட்டிற்கு வந்தாலும் முனுசாமி முதலியார் அவர்களின் இல்லத்தில்தான் தங்குவார் என்பது இவர்களது ஆன்மீக நட்பிற்குச் சான்றாகும். ஒருமுறை இவரது இல்லத்திற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்காக வந்தபோது, வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்று தேனீர் அருந்த அழைத்தார். அதிகாரிகள் மறுத்து சோதனையைத் தொடங்கினர். ஆனால், நேர்மையின் சிகரமான கயிலைமணி ஐயா அவர்கள், முன்னதாகவே வருமானவரி சம்பந்தப்பட்ட அனைத்து வரிகளையும் துல்லியமாகக் கட்டி அதற்கான ரசீதுகளைத் தயாராக வைத்திருந்தார். இதைப் பார்த்து வியந்த அதிகாரிகள், "இப்போது நீங்கள் கொடுக்கும் உபசரிப்பை ஏற்றுக் கொள்கிறோம்" என்றனர். அதற்கு ஐயா, "எங்கள் பணியாள் சென்றுவிட்டார், இப்போது எதுவும் கிடைக்காது" என்று கம்பீரமாகச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபங்களின் தலைவராகவும், சமுதாய பொருளாதார தொண்டு மன்றத்தின் ஈரோடு உள்ளூர் குழு தலைவராகவும் பல்லாண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். செங்குந்த மகாஜன சங்கக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார். ஆன்மீகத் துறையில், ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள சோளீஸ்வரர் கோயில் மற்றும் ஈரோடு கோட்டை திருத்தொண்டீஸ்வரர் கோயில் ஆகியவற்றைத் தன் தலைமையில் புணரமைத்து, மகா கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். எப்பொழுதும் கதர் வெள்ளை வேட்டி, ஜிப்பா அணிந்து மிக எளிமையாகக் காட்சியளிப்பார். காலில் செருப்பு அணியும் பழக்கம் இவரிடம் இல்லை. வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடைக்கு நடந்துதான் செல்வார். "செருப்பு வாங்கும் காசில் ஏழை எளியவர் யாருக்காவது உதவலாம்" என்று கூறும் அளவிற்குத் தியாக உள்ளம் கொண்டவர். அதுமட்டுமின்றி, தினசரி மதியம் மட்டுமே உணவருந்தி, காலை மற்றும் இரவு உணவைத் தவிர்த்து கடுமையான விரத வாழ்வை மேற்கொண்டவர். கல்விப் பணி, ஆன்மீகப் பணி, சமுதாயப் பணி என மூன்றிலும் தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்து, "இவரைப் போன்ற ஒருவரை இனி நாம் பார்க்க முடியாது" என்று எல்லாரும் போற்றும் வண்ணம் வாழ்ந்து மறைந்த மாமனிதர் ஈரோடு கயிலைமணி முனுசாமி முதலியார் ஆவார்.

அவரது 103-ஆவது பிறந்தநாளான இன்று, அவர் காட்டிய நல்வழியில் நடக்க உறுதிபூண்டு, ஈரோடு செங்குந்த மகாஜன சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அவரது புகழையும் சேவையையும் நெஞ்சார நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்!

#ஈரோடு_மாவட்டம்

24/05/2026

திகினாரை - கரளவாடி ரோடு,
அரசமரம் கோவில் அருகில்

 #கோபி அருகே உள்ள  #கொளப்பலூரில் மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்... #ஈரோடு_மாவட்...
24/05/2026

#கோபி அருகே உள்ள #கொளப்பலூரில் மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...

#ஈரோடு_மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் சிவாஜி மகன் சுரேஷ்(41). இவரது மனைவி மஞ்சுளா(38). கூலி வேலை செய்து வந்த சுலேஷ் மூப்பன்சாலை என்ற இடத்தில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். இவர்களக்கு அனுசுயா (18) என்ற மகளும் கதிரேசன்(17) என்ற மகனும் உள்ளனர். அனுசுயா கோபியில் உள்ள சுவீட் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கதிரேசன் தற்போது 11ம் முடித்து விட்டு இந்த ஆண்டு 12ம் வகுப்பு செல்ல உள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுரேசும், அவருக்கு உதவியாக அவரது மனைவி மஞ்சுளாவும் இறைச்சி கடையில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கொளப்பலூர், வேட்டைகாரன் கோயில், கரட்டடிபாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

மழை காரணமாக சுரேசும், மஞ்சுளாவும் ஓலைக்குடிசையிலான இறைச்சி கடையிலேயே இருந்துள்ளனர். அப்போது பலத்த சத்தத்துடன் இடி, குடிசை மீது விழுந்தது. அதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி விழுந்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் கோபியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

09/05/2026
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் துணை முதல்வராக மட்டுமல்லாமல், முதல்வராகக் கூட வாய்ப்பு உள்ளத...
09/05/2026

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் துணை முதல்வராக மட்டுமல்லாமல், முதல்வராகக் கூட வாய்ப்பு உள்ளது." - வன்னி அரசு

எம்மை-ஓரங்கட்ட நினைத்தாலும்ஒதுக்க நினைத்தாலும்நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம்! வன்னி அரசு
09/05/2026

எம்மை-
ஓரங்கட்ட நினைத்தாலும்
ஒதுக்க நினைத்தாலும்
நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம்! வன்னி அரசு

 #கட்சி அங்கீகாரத்தை இழக்குமா NTK..? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன..? விவரம்!நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எத...
09/05/2026

#கட்சி அங்கீகாரத்தை இழக்குமா NTK..? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன..? விவரம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதே போல அந்த கட்சியின் வாக்கு சதவீதமும் 4 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருந்து நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் களம்கண்டு வரும் நிலையில், அப்போதில் இருந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016-ல் 1.1 சதவீத வாக்குகளை பெற்ற அக்கட்சி, 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 2.15 சதவீதம் வாக்குகளை பெற்றது.

தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளும், 2021 சட்டமன்ற தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதனையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீதம் வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, அந்த தேர்தலில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது.

இந்தியாவில் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற, சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் மற்றும் 2 இடங்களை வெல்ல வேண்டும். அல்லது சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 8 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இதனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அக்கட்சி கோரிய கலப்பை ஏந்திய விவசாயி சின்னம் வழங்கப்பட்டது.

ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் மாநில கட்சி அங்கீகாரத்துக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. அதே நேரம் இந்த சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறத் தவறினாலும், ஒரு கட்சி தனது அங்கீகாரத்த நிரூபிக்க தேர்தல் ஆணையம் மற்றொரு வாய்ப்பையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை நாம் தமிழர் கட்சியின் மாநில அங்கீகாரத்துக்கு எந்த சிக்கலும் இல்லை. அதே நேரம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளையோ அல்லது 6% வாக்குகளுடன், 1 மக்களவை இடத்தை கைப்பற்ற தவறினால் நாம் தமிழர் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

*+2 பொதுத்தேர்வில் கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்..+2 பொதுத்தேர்வில் கோபி சாரதா மெட்ரிக் ...
09/05/2026

*+2 பொதுத்தேர்வில் கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்..

+2 பொதுத்தேர்வில் கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்.
கடந்த மார்ச் 2026-ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08.05.2026) வெளியிடப்பட்டன. இதில் கோபி சாரதா பள்ளி மாணவர்கள் சிறந்த மதிபெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி N. மதுமிதா 595/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும் மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார். மேலும் மூன்று பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் - 99, ஆங்கிலம் – 98, பொருளியல் – 100, வணிகவியல் – 98, கணக்குப் பதிவியல் – 100, வணிகக்கணிதம்– 100.
592/600 மதிப்பெண்களுடன் மாணவி N. சஷ்மிதா இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவரது மதிப்பெண்கள்: தமிழ் - 99, ஆங்கிலம் – 99, பொருளியல் – 99, வணிகவியல் – 98, கணக்குப் பதிவியல் – 99, வணிகக்கணிதம்– 98.
இப்பள்ளி மாணவி K.சுதர்சனா 590 / 600 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் தமிழ் -99, ஆங்கிலம் -97, இயற்பியல் -98, வேதியியல் – 99, உயிரியல் -99, கணிதம் -98.
பொதுத் தேர்வில் 32 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பாடவரியாக 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை: கணிதம்- 2, இயற்பியல் -2 , வேதியியல் – 4, உயிரியல்-1 கணினி அறிவியல் – 18, வணிகவியல் – 1, கணக்குப் பதிவியல் -2, பொருளியல் – 1, வணிகக்கணிதம்– 1.
தேர்வு எழுதிய மாணவர்களில் 10 பேர் 585 மதிப்பெண்களுக்கு மேலும், 18 மாணவர்கள் 580 மதிப்பெண்களுக்கு மேலும், 81 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 186 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பொறியியல் CUT-OFF மதிப்பெண்களில் 79 மாணவர்கள் 180 மதிப்பெண்களுக்கு மேலும் 35 மாணவர்கள் 190 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.. இத்தகைய சாதனை புரிந்துள்ள மாணவர்களையும் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் திரு. பெருமாள்சாமி, முதல்வர் திரு. இளமுருகு மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

Address

Erode
638452

Alerts

Be the first to know and let us send you an email when மஞ்சள் மாநகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share