MaduraiPlus

MaduraiPlus Madurai's Positive Aspects,Personalities,Places,Brands & Businesses

05/03/2026
25/01/2026
30/11/2025

நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல் கலாம் நிறுத்தம் என்ற இடத்தில் வழக்கறிஞர் படிப்பை படிக்கும் மாணவி ஒருவர் இரவு 10. 30 மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்க தயாரானார் ஆனால் உடனே நடத்துனர் மாணவியிடம் உன் பெற்றோர்கள் யாராவது அழைத்து சென்றால்தான் இந்த இரவில் இறக்கி விடுவேன் இல்லையென்றால் இறக்கி விடமாட்டேன் என்று கறாராக கூறினார்.

அந்த மாணவியின் பெற்றோருக்கு போன் மூலமாக தகவலும் கொடுத்தார் அவர்கள் வருவதற்கு 15 நிமிடங்கள் காலதாமதமானது உடனே ஓட்டுனரும் நடத்துனரும் இரவில் இறக்கி விட மாட்டோம் தயவுசெய்து வண்டியிலேயே இருமா ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடுகிறோம் என்றார்கள் காலம் கெட்டு கிடக்கு பெண் குழந்தையை பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

பத்து நிமிடம் காத்திருப்புக்கு பின் மாணவியின் சித்தப்பா அவரை அழைத்து செல்லும் வரை பேருந்து அந்த இடத்தில் நின்றது உண்மையிலேயே இரவு நேரங்களில் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுநர் அந்தோணி ராஜ் நடத்துனர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்..
#பகிர்வு

Source - Yonadoss

14/09/2025

மதுரையில் அறிவின் அலைகள்...

உலகின் முதல் புத்தகக் கண்காட்சி ஜெர்மனியில் 17-ஆம் நூற்றாண்டிலே துவங்கியிருக்கிறது. நவீன புத்தக கண்காட்சியும் முதன் முதலில் ஜெர்மனியின்பிராங்பர்ட்டில் 1949-இல் தொடங்கியிருக்கிறது. அதனை அடுத்து லண்டன் புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்தியாவில் கொல்கத்தா புத்தகக் கண்காட்சி முக்கியமானதாக கருதப்படுகிறது, புது தில்லியில் ப்ரகதி மைதானத்தில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று உலகின் முக்கிய கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சென்னையில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சி விரைவில் உலகின் முக்கிய கண்காட்சிகளில் ஒன்றாக மிளிரும் சாத்தியங்கள் நோக்கி பயணித்து வருகிறது. இவைகளை எல்லாம் குறிப்பிடும் போது ஜெய்பூர் இலக்கிய திருவிழாவையும் நாம் பேசியாக வேண்டுன், ஜெய்பூர் இலக்கிய திருவிழா இன்று உலகின் கவனிக்கத்தக்க விழாவாக மிக முக்கிய உரையாடல்களின் களமாக மாறி வருகிறது.

தமிழகத்தில் 1977-இல் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கி இன்றைக்கு அது வளர்ந்து வந்துள்ள பாதை மிக முக்கியமானது. இன்றைக்கு தமிழகத்தில் ஊர் தோறும் புத்தக கண்காட்சிகள் நடைபெற்று வந்தாலும் அது மதுரையில் மட்டுமே புத்தகத் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவிற்கு எங்கள் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று பசுமை நடை குழு திட்டமிட்டதன் விளைவாக எங்கள் குழுவின் உள்ள அனைவரையுமே புத்தக திருவிழாவிற்கு வரச் செய்யும் ஏற்பாடாக ஒரு புத்தக நடைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று மாலை 5.30 முதல் 6 மணி வரை அனைவரும் புத்தக கண்காட்சியில் உள்ள மதுரை வரலாற்று கண்காட்சியில் கூடலாம், அதன் பின்னர் பெருங்குழுவாக புத்தகத்திருவிழாக்குள் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

உலகில் உருவாகியிருக்கும் எல்லா கீழ்மைகளில் இருந்து மனிதன் விடுபட ஒரே ஆயுதம் கல்வியும் புத்தகங்களுமே, அடுத்த தலைமுறைக்கு இன்று நாம் கொடுக்க கூடிய ஆக மதிப்புமிக்க விசயம் புத்தகங்கள் மட்டுமே ஆகையால் வாருங்கள் வாருங்கள் ஒரு அறிவுக்கடலுக்குள் பயணிக்கலாம்......

Address


625001

Alerts

Be the first to know and let us send you an email when MaduraiPlus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MaduraiPlus:

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share