27/12/2025
சென்னை மாநகரில் காற்றின் தரத்தை இனி பொதுமக்கள் நேரடியாக கண்காணிக்கலாம். இதற்காக, சென்னை மாநகராட்சி (GCC) ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம், காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் 75 இடங்களில் சிறப்பு சென்சார்கள் பொருத்தப்படும்.