Bala printers

Bala printers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bala printers, Advertising agency, 61-d/3-1p, kilakku mayaana Street, , rajive gandhi nagar, Sivakasi.

All kinds of printing and publishing works
#தினசரிநாள்காட்டி #மாதநாள்காட்டி தேவைக்கு அணுகவும்
#சிவகாசி - 098946 07108
book daily post designing works done

கொண்டை ஊசி வளைவு பயணம் இன்ஜின் பிரேக்கில் இறங்குவோம் ♦️மலைப்பாதைகளில் ஏறுவதை விட இறங்குவது தான் மிகவும் சவாலானது ஆபத்து ...
20/04/2026

கொண்டை ஊசி வளைவு பயணம்
இன்ஜின் பிரேக்கில் இறங்குவோம்

♦️மலைப்பாதைகளில் ஏறுவதை விட இறங்குவது தான் மிகவும் சவாலானது ஆபத்து நிறைந்தது. ஆனால் இன்றைய பல ஓட்டுநர்கள் குறிப்பாக நியூ ஜெனரேஷன் பசங்க இதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். சமீபத்தில் நடந்த துயரமான விபத்தின் பின்னணியில் சில முக்கியமான விஷயங்களை இங்கே பார்ப்போம்.

♦️மலை ஏறும் போது எந்த கியரில் (Gear) நாம் ஏறினோமோ, அதே கியரில் தான் அந்த இறக்கத்தையும் இறங்க வேண்டும். இறக்கங்களில் வாகனத்தைக் கட்டுப்படுத்த கியர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அடிக்கடி பிரேக் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தானது.

இதோ அதன் காரணங்கள்
♦️பெரிய இறக்கங்களில் தொடர்ச்சியாக பிரேக் பயன்படுத்தும் போது பிரேக் டிரம் (Brake Drum) அதிகப்படியாக சூடாகிறது (Overheating). இதனால் பிரேக் லைனர்கள் ஹார்ட் ஆகி, பிரேக் சுத்தமாகப் பிடிக்காமல் போய்விடும்.

♦️என்ஜின் பிரேக்கிங் (Engine Braking) அதாவது கிளச் மிதிக்காமல் லோ-கியரில் (Low Gear) இறங்கும்போது என்ஜினே வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். இதையே 'என்ஜின் பிரேக்கிங்' என்கிறோம். இப்படிச் செய்யும்போது, மிகக் குறைந்த அளவில் மட்டும் பிரேக் பயன்படுத்தி பாதுகாப்பாக வண்டியை இறக்கலாம்.

கவனமும் நிதானமும்
♦️வண்டிக்குள்ளே அடிக்கும் லூட்டி அல்லது கவனச்சிதறல் மட்டும் விபத்தை ஏற்படுத்துவதில்லை. டிரைவிங்கில் இத்தகைய அடிப்படை தொழில்நுட்ப அறிவு இல்லாததும், அதிக வேகமுமே விபத்துகளுக்கு முக்கிய காரணம். சாலையின் ஒவ்வொரு வளைவிலும் (Hairpin Bend) ஓட்டுநரின் முழு கவனம் அவசியம்.

♦️புதிய தலைமுறை ஓட்டுநர்களிடம் சொல்வதற்கு ஒன்றுதான். சாலை விதிகளையும், இந்த அடிப்படை முறைகளையும் பின்பற்றுவது உங்கள் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் காப்பதற்கே. ஒரு நொடி கவனக்குறைவு பல குடும்பங்களின் கனவைச் சிதைத்துவிடும்.

🌾திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் இயற்கை உழத்தி லெட்சுமி தேவி அம்மையாரை இன்று சந்தித்தேன்🌾நூற்றுக்கும் மேற்பட்ட பார...
14/04/2026

🌾திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் இயற்கை உழத்தி லெட்சுமி தேவி அம்மையாரை இன்று சந்தித்தேன்

🌾நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பொதிகை உழத்தி விதை வங்கி என்ற பெயரில் விதைகளுக்காக மண் குடுவைகளில் விதைகளை சேமித்து வைத்திருக்கிறார்

🌾விதை நெல் கேட்பவருக்கும்
அரிசி கேட்பவருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறார்

🌾2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த பாரம்பரிய நெல் பாதுகாவலர் என்ற விருது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்துள்ளார்

🌾 இந்த சமுதாயத்திற்கு நஞ்சில்லா உணவை வழங்குவதால் என் மனம் மகிழ்ச்சியும் அமைதியும் அடைகிறது என்று சொல்லும் இவரை பசுமை சாரலுக்கு வீடியோ எடுத்து நானும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன்.
🌾 இவரின் கருத்துக்கள் கொண்ட வீடியோ இன்னும் சில நாட்களில் நமது சானலில் பார்க்கலாம்

🌾இவரின் கைபேசி எண்
9443081066

14/04/2026

#இனிய_தமிழ் #புத்தாண்டு_நல் #வாழ்த்துகள்

13/04/2026

#நோயற்ற_வாழ்வே #பெருஞ்செல்வம்

01/04/2026

Offer offer ஓடி வாங்க மக்கா 💐💐💐 #சிவகாசி
#விருதுநகர் #சங்கரன்கோவில்
#ஶ்ரீவில்லிபுத்தூர் #சாத்தூர்

(Posted on 25-03-2026 ) தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் கொளுத்துவது ஏன்?மார்ச் 1 முதல் மே 31 வரையிலான கா...
25/03/2026

(Posted on 25-03-2026 ) தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் கொளுத்துவது ஏன்?

மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலகட்டமே தமிழ்நாட்டிற்கு கோடைகாலமாகும்.பொதுவாக கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் வெயில் அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். சமீப காலமாக இயற்கை எழில் கொஞ்சும் உயரமான மேற்கு தொடர்ச்சி மலையை எல்லையை கொண்ட மாவட்டங்களில் தற்போது கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் அதிகரிப்புக்கு என்ன காரணம்?

ஈரப்பதம் இல்லாத வறண்ட கிழக்கு திசை காற்று வீசுவதன் காரணமாக குமரி தென்காசி திண்டுக்கல் கோவை ஈரோடு திருப்பூர் நாமக்கல் கரூர் சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது.

கிழக்கு திசை காற்று அதாவது கடல் காற்று வீசுவதால் தமிழக கடலோர பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது. ஆனால் இக்காற்றானது உள் மாவட்டங்களை நோக்கி நகரும் போது வறண்ட காற்றாக வீசுகிறது. இதனால் மலைபகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. கேரளாவில் இருந்து மேற்கு திசை காற்று தமிழகத்தை நோக்கி வீச தொடங்கியவுடன் குமரி தென்காசி கோவை மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறையும். தென்மேற்கு பருவகாற்று வீசு தொடங்கியவுடன் குறிப்பாக மே மூன்றாவது வாரத்திற்கு பிறகே மலை மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்.

தற்போது கிழக்கு கடலோர மாவட்டங்களான கடலூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை இராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் குறைவாகவே உள்ளது காரணம் வங்க கடலில் இருந்து வீசும் கிழக்கு கடல் காற்று தமிழக கடலோர மாவட்டங்களில் நுழைவதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் வெப்பநிலை குறைவாக உள்ளது இதே நிலை வரும் நாட்களிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது எப்போது?

கடலோர பகுதியை பொறுத்தவரை கடல் காற்று வீசுவது தடைபடும் போது வெப்பம் அதிகரிக்கும். குறிப்பாக மே ஜுன் மாதங்களில் தென் மேற்கு பருவ காற்று வீச தொடங்கியவுடன் தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வீசுவது தடைப்பட்டு விடும் அப்போது தமிழக கடலோர மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்.

மார்ச் ஏப்ரல் மே ஆகிய 3 மாதங்கள் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கோடைகாலமாகும். மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடலோர மாவட்டங்களுக்கு கோடைகாலங்கள். விருதுநகர் மதுரை சேலம் நாமக்கல் கரூர் திருச்சி ஆகிய உள் மாவட்டங்களில் ஆண்டுக்கு பெரும்பாலான நாட்களில் அதிகப்படியான வெப்பநிலையே இருக்கும்.

-Tenkasi Weatherman

25/02/2026
நீரிழிவு நோய் மீட்பு  & சிறுதானிய உணவு பயிற்சி @ சிவகாசி – (Freedom from Diabetes Mission)🗓️ 2 நாட்கள் மீட்பு (Restorati...
25/02/2026

நீரிழிவு நோய் மீட்பு & சிறுதானிய உணவு பயிற்சி @ சிவகாசி – (Freedom from Diabetes Mission)

🗓️ 2 நாட்கள் மீட்பு (Restoration) நிகழ்ச்சி
📅 தேதி: மார்ச் 14&15 2026
📍 இடம்: மூங்கில் பாத அழுத்த சிகிச்சை மையம், சிவகாசி

🔆 நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

நச்சு நீக்க சிகிச்சைகள் (பெருங்குடல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல்)

குளுக்கோஸ் &ஹார்மோன் சமநிலை கட்டுப்பாடு

இன்சுலின் எதிர்ப்பு மாற்றம்

இயற்கை சர்க்கரை கட்டுப்பாட்டிற்கான சிறுதானிய அடிப்படையிலான உணவுத் திட்டம்

தனிப்பட்ட ஊட்டச்சத்து வழிகாட்டல்

உடல் இயக்க யோகா (நேரமில்லாதவர்களுக்கான சிறப்பு பயிற்சி)

🎓 பயிற்சியாளர்
டாக்டர் ஏ. எம்.அரசு BEMS, MD (Acu)
எலெக்ட்ரோபதி நிபுணர்,
அரசு அங்கீகரிக்கப்பட்ட நீரிழிவு கல்வியாளர்

💰 பங்களிப்பு: ரூ.1999 மட்டும்
📞 பதிவு செய்ய: 8667387901 l 9489206709
👉 உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள செய்யவும்

Address

61-d/3-1p, Kilakku Mayaana Street, , Rajive Gandhi Nagar
Sivakasi
626189

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

9894607108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bala printers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share