22/07/2022
புலிகள் உலாவிய காட்டிலா நாம் வாழ்கிறோம்..??
ஆம்.., உண்மை தான்.,
தற்போது நாம் வாழும் இடம் (திருநெல்வேலியும், மதுரையும்) ஒருகாலத்தில் புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு அடர்ந்த வனாந்திரமாக இருந்தது. இதணை French Officer அவர்களின்
மேலதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக நாம் அறிய நேரிட்டது.
ஆந்த கடிதத்தில்.. எழுதப்பட்டது (1700ம் ஆண்டு),
#திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் என்னற்ற புலிகள் உலாவருகின்றன, இது மலைப் பகுதியை ஒட்டிய கடற்கரையாக காணப்படுவதால் அதனின் அச்சுறுத்தல்கள் அதிகமாக காணப்படுகிறது. இரவுநேரத்தில் அல்லது சூரியன் மறையும் நேரத்தில் யாரும் பெரும்பாலும் ஊரைவிட்டு வெளியே வருவதில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் எல்லையிலோ அல்லது வீட்டின் முன்போ பெரிய அளவிலான தீ மூட்டப்படுகிறது. பகல் நேரப் பயணம் கூட இந்த மாவட்டங்களில் அவ்வளவு எளிதல்ல.
என்னற்ற மக்களும் கால்நடைகளும் பெருமளவு காணாமல் போயுமுள்ளனர், சந்தேகமே வேண்டாம் அவர்களை புலிகள் தான் கடத்திருக்க வேண்டும்.
மேலும் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும்..,
மதுரையிலும், திருநெல்வேலி உள் மாவட்டத்திலும் பெரும்பாலும் வெகுநாட்களாக புலிகள் அச்சுறுத்தல்கள் இல்லை. அது ஏன் என்று தெரியவில்லை, ஒருவேலை மக்கட்தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகளை அழித்தது கூட காரணமாக இருக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் மூலமாக நாம் அறிவது என்னவென்றால், அதனால் தான் அந்த காலத்தில் புலிவேட்டைக்குப் போவதும், புலி பல் அனிவதும்., புலித்தலை, தோலினை விட்டில் காட்சிப் பொருளாக வைப்பதுமாக தனது வீரத்தின் அடையாள மரபாக இருந்ததிருக்கிறது !!
புகைப்பட இணைப்பு கீழே (1-6)
இதில் முதல் 4 படம் #செங்கோட்டை #தலைவானர் உடையது.
இறுதி (5,6) இரண்டு படம் #ஊத்துமலை #ஐமீனுடையது..!!
( படத்தில் பாருங்கள் நமது வீட்டின் நாயை கூட ஒரு பெரிய சங்கிலியால் கட்டி வைப்போம்.., எந்தளவு புலிகளை லாவகமாக அடக்க தெரிந்தவர்களாக இருந்தால் இந்தளவு சிறிய சங்கிலியால் கட்டி இருப்பார்கள்.
மற்றொரு படத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் கூண்டே இல்லாமல் சிறிய மரத்திலான அடைப்பினை பயன்படுத்தி யுள்ளார்கள்., இது மக்களும் எந்தளவு புலிகளின் மேல் பரிட்சையமாக இருந்தார்கள் எனக் காட்டுகிறது..!!
#புறநானூற்றில் #தமிழ்ப்பெண்கள் புலியை முரத்தால் அடித்து விரட்டிய கதையும், காடையர்கள் புலியை அடக்கிய கதையும் இவைகள் அனைத்தும் புனையப்பட்டதல்ல என்பதை இந்தப் பதிவு நிறுவுகிறது..!!
நன்றி
- S A கருப்பசாமி