Connect Tenkasi

Connect Tenkasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Connect Tenkasi, Social Media Agency, Tenkasi.

We create and execute effective social media strategies and campaigns

Why us..??

• On time work
• Targeted Local Audience
• High Quality services
• Brand identity
• Measure success with analytics
• 100 % Customer satisfaction guaranteed

" வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற.. "     Connect Tenkasi
07/02/2024

" வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற.. "

Connect Tenkasi

05/02/2024

" அடவிநயினார் 😍 "

Connect Tenkasi

Tsunami , Earth quake, Corona போன்ற‌ பேரழிகளைப் பார்த்த தலைமுறை.. Climate change னால் வரும்‌ விளைவுகளையும் காண ஆயத்தமாகி...
03/10/2023

Tsunami , Earth quake, Corona போன்ற‌ பேரழிகளைப் பார்த்த தலைமுறை.. Climate change னால் வரும்‌ விளைவுகளையும் காண ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்..!!

முக்கியமாக Tropical Region ( India ) போன்ற நாடுகளே அதிகமாக பாதிக்கப்பட போகிறது..

( " மழையே இல்லாத வரட்சி..‌
அதிகபட்ச மழை ,
அதிக பட்ச வெப்பநிலை..
கடல்மட்டம் உயர்ந்து கடல் விழுங்குதல் அதிகரிப்பு... " ) போன்றவையால் அனுபவப்பட போகிறோம்...

ஏன் 2030 ற்குள் பகல் நேரத்தில் Heat waves னால் வெளியே நடமாட முடியாத சூழல் கூட வரலாம்..

விளிம்பு நிலை மக்களின் நிலைதான் கேள்விக்குறியாகும்...

அரிசி, காய்கறி போன்ற வேளாண் பயன்பொருட்கள், கால்நடை மற்றும் கால்நடை சார்ந்த பயன்பொருட்கள் போன்றவை அதிகபட்ச Demand ல் போய் நிற்கப் போகிறது...

எல்லாம் பார்த்த நாம் ( Droughts ) வரட்சியையும் பார்கனும் போல...

- ஆனந்த் கருப்பசாமி

"அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள் "  - Sankarankovil Railway Station ❤️
20/09/2022

"அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள் "

- Sankarankovil Railway Station ❤️

  " 84cents புஞ்சை நிலம் விற்பனைக்கு"சங்கரன்கோவில் - புளியங்குடி Main Road ல் இருந்து பாம்புக்கோவில் செல்லும் வழியில்.. ...
01/09/2022



" 84cents புஞ்சை நிலம் விற்பனைக்கு"

சங்கரன்கோவில் - புளியங்குடி Main Road ல் இருந்து பாம்புக்கோவில் செல்லும் வழியில்.. ( 1 Km )

Cent தலா 60 ஆயிரம் மட்டுமே..
(Asking price - 45 Thousand / per cent )

தொடர்புக்கு : +91 6383 530 852

Veerasaamy Chetiyar Engineering Collage - 3 KMS

Paambu Kovil - 2 Kms

Mullikulkam Higher Secondary school - 2 kms



#கடையநல்லூர் #தென்காசி
#செங்கோட்டை #குற்றாலம்
#கேரளா #தமிழ்நாடு

பொன் அந்தி மாலையில்,  சங்கரன்கோவில் 😍
25/07/2022

பொன் அந்தி மாலையில், சங்கரன்கோவில் 😍

25/07/2022

ஒட்டுமொத்த கிராமமே புற்றுநோயால் பாதிப்பு, போலி டாக்டர்களால் விபரீதம், அச்சத்தில் ஆராய்ச்சிப்பட்டி!

இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆராய்ச்சிப் பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் 26 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு அறிகுறி, மேலும் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை அறிந்து களத்தில் இறங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள அரசு மருத்துவர்களிடமும் இது குறித்து விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன், ''13 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. மார்பக புற்றுநோய் பரிசோதனையில் 13 பேருக்கு அதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்து இருக்கிறது. இந்த 26 பேரையும் முழுமையாக பரிசோதித்து இவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து பிறகு மேல் சிகிச்சை தொடரப்படும்'' என்றார்.

கிராமமக்களிடம் இது பற்றி விசாரித்த போது :

ஒரு பெண் கூறுகையில், ''என் தம்பிக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் அவனுக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இப்போ ரொம்ப கஷ்டப்படுறான். நாங்கள் ஏழைக் குடும்பம் தான். கூரை வீட்டில் தான் வசித்து வருகிறோம். எனது தம்பியின் கஷ்டத்தை பார்த்து பெரியப்பா தற்கொலை செய்துகிட்டாங்க. ரொம்ம கஷ்டப்படுறோம் என்றார்,

அதே கிராமத்தை சேர்ந்த மற்றொருவர், விரதம் இருக்கும் பெண்கள் மாதவிடாய் தள்ளிப்போக வேண்டும் என்பதற்காக போலி மருத்துவர்களிடம் மாத்திரை வாங்கி சாப்பிடுவதாக கூறினார்.

போலி மருத்துவர்கள் என்றால் யார் அவர்கள்..??

ஆங்கில மருத்துவத்தில், மக்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்றால் குறைந்தது அவர் MBBS ஆவது தகுதி பேற்றிருக்க வேண்டும். அவர் அந்த தகுதியை பதிவும் (Register) செய்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் மருந்துகளை பரிந்துரைக்கும் அனைவருமே போலி மருத்துவர்கள் தான்.

பிரச்சனைக்கு மூல காரணம் (Root causes of problem ) :

ஆராய்ச்சிப்பட்டியில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் ஏறத்தாழ 15 KM தொலைவிற்கு அப்பால் உள்ள சாயமலை or சங்கரன் கோவில் ஆகிய இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இதனால் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்படும் மக்கள் உள்ளூர் பகுதிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்களிடம் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதே புற்றுநோய் பரவலுக்கு காரணம் என்கிறார்கள்.

மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள ஆராய்ச்சிப்பட்டியை ஒட்டி 10-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்து மக்கள் அனைவரும் மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 15 KM செல்ல வேண்டியுள்ளது. முறையான பேருந்து வசதியும் இல்லை என்பதால், நாங்கள் ஆட்டோ வாடகைக்கு அமர்த்தியே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயண செலவும், நேர விரயமும் அதிக அளவில் ஏற்படுவதாக கூறிய அப்பகுதி மக்கள், மேலும், தங்கள் கிராமத்திற்கு ஒரு மருத்துவமனை கட்டித் தரவேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ 10 நாட்களுக்கு முன் நடந்த செய்தி தான் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் Connect Tenkasi சமூக கடமையுடன் பதிவு செய்கிறோம். “


- SA .கருப்பசாமி

23/07/2022

" செங்கோட்டை " தென்காசி மாவட்டம் ❤️

#

தென்காசி மாவட்டத்தில் ரூ.2.70 கோடியில் ஆடு இன ஆராய்ச்சி மையம்:சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்...
23/07/2022

தென்காசி மாவட்டத்தில் ரூ.2.70 கோடியில் ஆடு இன ஆராய்ச்சி மையம்:

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகோவிலாங்குளம் கிராமத்தில் ஆடு இன ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதன்படி ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 52 ஹெக்டர் பரப்பளவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆராய்ச்சி மைய கட்டிடம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

இந்த ஆராய்ச்சி மையம் மூலம்

•ஆடு இனங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு மரபியல் திறனை உயர்த்தி இனவிருத்திக்காக பண்ணையாளர்களுக்கு வழங்கி, நிலைத்த வருமானத்தை பெற வழிவகை ஏற்படும்.


•ஆடுகளுக்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டு, பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும்.இதுதவிர இங்கு 210 ஆடுகள் வளர்க்கப்படும். பண்ணை அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு நவீன ஆட்டுப்பண்ணை அமைக்கப்படும்.

இந்த மையத்தால் தென் மாவட்ட ஆடு வளர்ப்போர் மிகுந்த பயன் அடைவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகள் உலாவிய காட்டிலா நாம் வாழ்கிறோம்..??ஆம்..,  உண்மை தான்.,தற்போது  நாம் வாழும் இடம் (திருநெல்வேலியும், மதுரையும்‌) ...
22/07/2022

புலிகள் உலாவிய காட்டிலா நாம் வாழ்கிறோம்..??

ஆம்.., உண்மை தான்.,

தற்போது நாம் வாழும் இடம் (திருநெல்வேலியும், மதுரையும்‌) ஒருகாலத்தில் புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு அடர்ந்த‌ வனாந்திரமாக இருந்தது. இதணை French Officer அவர்களின்
மேலதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக நாம் அறிய நேரிட்டது.

ஆந்த‌ கடிதத்தில்.. எழுதப்பட்டது (1700ம் ஆண்டு),

#திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் என்னற்ற புலிகள் உலாவருகின்றன, இது மலைப் பகுதியை ஒட்டிய கடற்கரையாக காணப்படுவதால் அதனின் அச்சுறுத்தல்கள் அதிகமாக காணப்படுகிறது. இரவுநேரத்தில் அல்லது சூரியன் மறையும்‌ நேரத்தில் யாரும் பெரும்பாலும் ஊரைவிட்டு வெளியே வருவதில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் எல்லையிலோ அல்லது வீட்டின் முன்போ பெரிய அளவிலான தீ மூட்டப்படுகிறது. பகல் நேரப் பயணம் கூட இந்த மாவட்டங்களில் அவ்வளவு எளிதல்ல.
என்னற்ற மக்களும் கால்நடைகளும் பெருமளவு காணாமல் போயுமுள்ளனர், சந்தேகமே வேண்டாம் அவர்களை புலிகள் தான்‌ கடத்திருக்க வேண்டும்.

மேலும் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும்..,
மதுரையிலும், திருநெல்வேலி உள் மாவட்டத்திலும் பெரும்பாலும் வெகுநாட்களாக புலிகள் அச்சுறுத்தல்கள் ‌இல்லை. அது ஏன் என்று தெரியவில்லை, ஒருவேலை மக்கட்தொகை பெருக்கத்தின்‌ காரணமாக காடுகளை அழித்தது கூட‌ காரணமாக இருக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் மூலமாக நாம் அறிவது என்னவென்றால், அதனால் தான் அந்த காலத்தில் புலிவேட்டைக்குப் போவதும், புலி பல் அனிவதும்., புலித்தலை, தோலினை விட்டில் காட்சிப் பொருளாக வைப்பதுமாக தனது வீரத்தின் அடையாள மரபாக இருந்ததிருக்கிறது !!

புகைப்பட இணைப்பு கீழே (1-6)

இதில் முதல் 4 படம் #செங்கோட்டை #தலைவானர் உடையது.

இறுதி (5,6) இரண்டு படம் #ஊத்துமலை #ஐமீனுடையது..!!

( படத்தில் பாருங்கள் நமது வீட்டின் நாயை கூட ஒரு பெரிய சங்கிலியால் கட்டி வைப்போம்.., எந்தளவு புலிகளை லாவகமாக அடக்க தெரிந்தவர்களாக இருந்தால் இந்தளவு சிறிய சங்கிலியால் கட்டி இருப்பார்கள்.

மற்றொரு படத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் கூண்டே இல்லாமல் சிறிய மரத்திலான அடைப்பினை பயன்படுத்தி யுள்ளார்கள்., இது மக்களும் எந்தளவு புலிகளின் மேல் பரிட்சையமாக இருந்தார்கள் எனக் காட்டுகிறது..!!

#புறநானூற்றில் #தமிழ்ப்பெண்கள் புலியை முரத்தால் அடித்து விரட்டிய கதையும், காடையர்கள் புலியை அடக்கிய கதையும் இவைகள் அனைத்தும் புனையப்பட்டதல்ல என்பதை இந்தப் பதிவு நிறுவுகிறது..!!
நன்றி

- S A கருப்பசாமி


Hi Tenkasi..Greetings..We create and execute effective social media strategies and campaigns.
11/07/2022

Hi Tenkasi..

Greetings..

We create and execute effective social media strategies and campaigns.

Address

Tenkasi
627803

Opening Hours

Monday 8am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Connect Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share