27/05/2017
மனைவி ஒரு (மு)மந்திரி
+அடிக்கடி பி.ஜெ. சொல்வதுபோல் தாய், தந்தை, சகோதர, சகோதரி அனைத்தையும் விட்டிட்டு புருஷன் தான் தனக்கு உசுரு என்று வருபவள்.
+புகுந்த வீட்டை விட்டு, பிறந்த வீட்டை எட்டியே பார்க்காதவள்.
+கணவனின் அனுமதி பெறாமல் எங்குமே செல்லாதவள், தகவல் புரட்சிக்கேற்ப 24மணி நேரமும் தொடர்பில் இருப்பவள்.
+மனைவியை செல்லமாக, உரிமையாக கண்டிக்கும் பொழுதும் மரியாதை குறையாதவள். அவளை பெத்தவர் ஊருக்கு உத்தமர் கண்டிக்கும் பொழுது குறுக்கீடு செய்யாதவர்.
+கணவன் பார்க்கும் பொழுதெல்லாம் வாஞ்சையோடு வருபவள், கணவன் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் முகமலர்ச்சியோடு வரவேற்பவள், பிள்ளைகள் எங்கே என்பதற்கு வாப்சி வீட்டிற்கு என்பவள். தன்னையும், தன்பிள்ளைகளையும் கணவன் அருகிலேயே இருந்து மகிழ்விப்பவள்.
+கணவர் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருக்கும் பொழுது சரியாக கொடுக்காமலிருந்தாலும் (வஞ்சபுகழ்ச்சி) இன்னும் அணி பிறழாமல் நடப்பவள்.
+இத்தனைக்கும் மார்க்க அறிவு பட்டம் பெற்றவளும் அல்ல.
மேலுள்ள அணி அனைத்தும் வஞ்சபுகழ்ச்சி அணி
அப்படி இருந்தும்.
உண்மையாக பி.ஜெ. சொல்வதுபோல் மனைவி அல்ல கணவர்மார்கள்தான் தாய், தந்தை, சகோதர, சகோதரி அனைத்தையும் விட்டிட்டு மனைவி நினைப்பது போல் வாழ உடல், பொருள், ஆவியை இழந்து சந்தோசமாக இருக்கனும் இது தான் நபி வழியா?