Thirumalai Online Tiruchengode

Thirumalai Online Tiruchengode So i kindly request all of you to utilize this page for your self.

Dear all my dear friends, this page i started regarding all kinds of online works like online application, digital marketting for all smal scale industries were done here.

08/11/2021

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.

(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)

3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.

(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....

(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...

(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....

(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
---------------------

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்..
ஓடுவது முள் அல்ல..!
உன் வாழ்க்கை...

09/10/2021
05/10/2021
27/08/2021

*காலத்தினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் கால பைரவரை எந்த ராசியினர் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?*

*காலமும், இடமும் தான் பூமியை சுழல செய்கிறது. காலம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு பலரும் ”நேரம்” என்று பதில் கூறுவார்கள். காலத்திற்கும், நேரத்திற்கும் வித்தியாசம் உண்டு. காலம் என்பது விதியை குறிக்கும். நேரத்தை அடிப்படையாக வைத்து இன்றைய நவீன அறிவியல் பலவற்றை கண்டுபிடித்தாலும் நமது முன்னோர்கள் நேரத்தை எப்படி கண்டு பிடித்தார்கள்? எந்த உபகரணங்களும் இல்லாத காலத்தில் சுவாசிக்கும் மூச்சை மட்டும் வைத்து காலத்தையும், நேரத்தையும் வென்றவர்கள் நமது முன்னோர்கள். காலையில் எழுந்ததும் வலது நாசியில் தொடங்கும் சுவாசமானது சரியாக 11/2 மணி நேரம் கழித்து இடது நாசிக்கு மாறும். இந்த 11/2 மணி நேரத்தை ஒரு முகூர்த்தமாக அழகாக கணக்கிட்டார்கள்.* *பகல், இரவு என்று மொத்தம் 16 முகூர்த்தங்கள் உள்ளன. 24 மணி நேரம் கிடைத்தாயிற்று. காலம் சாதாரண விஷயம் அல்ல. அப்படிபட்ட இந்த காலத்தை சரியான முறையில் எப்படி வழிபடுவது என்று வழிகாட்டி உள்ளனர் நமது முன்னோர்கள்.*

*ஈசனின் 64 திருவுருவங்களில் ஒன்றாக இருப்பது பைரவர். சனி பகவானின் குருவாக திகழ்பவர். காலத்தை கட்டுபடுத்தும் ஆற்றல் பெற்ற கால பைரவரை முறையாக வணங்கினால் அத்துனை துன்பங்களும் நீங்கும் என்கிறது சாஸ்திரம். ஐப்பசியில் வரும் தேய்பிறை அஷ்டமியில் உதித்த கால பைரவர் நம்முடைய தீர்க்கவே முடியாத பிரச்சனைகளையும் தீர்த்து அருள் புரிவார் என்பது ஐதீகம். இவரை எந்த ராசிக்காரர்கள்?* *எப்படி வழிபட வேண்டும்? என்று இப்பதிவில் இனி காண்போம்.*

*மேஷம் & விருச்சிகம்:*

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் கால பைரவரை செவ்வாய்க் கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும். செவ்வாயில் வரும் அஷ்டமி திதிகளில் மிளகு தீபம் ஏற்றி, பைரவ மூல மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.

*ரிஷபம் & துலாம்:*

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கால பைரவரை வெள்ளிக் கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வில்வம் மற்றும் செவ்வரளி மலர்கள் சாற்றி வழிபாட்டு வந்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.

*மிதுனம் & கன்னி:*

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் கால பைரவரை புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் விருத்தி கிட்டும்.

*கடகம்:*

கடக ராசிக்காரர்கள் கால பைரவரை திங்கட் கிழமைகளில் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் சாற்றி வழிபாடு செய்து வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சந்தான காப்பு அணிவித்து வணங்கினால் செல்வம் சேரும்.

*சிம்மம்:*

சிம்ம ராசிக்காரர்கள் கால பைரவரை ஞாயிறு கிழமைகளில் திருமண தடையை நீங்க வேண்டி கொண்டு ராகு காலத்தில் வடை மாலை சாற்றி ருத்ராட்ச அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றினால் திருமணம் உடனே கை கூடிவரும்.

*தனுசு & மீனம்:*

தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் கால பைரவரை வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீய சக்திகள் விலகி நன்மை உண்டாகும். இழுப்பை எண்ணையில் தீபம் ஏற்றி பைரவ மூல மந்திரத்தை உச்சரித்து வந்தால் செல்வம் பெருகும்.

*மகரம் & கும்பம்:*

மகரம் மற்றும் கும்பம்ராசிக்காரர்கள் கால பைரவரை சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி, செவ்வரளி மலர் சாற்றி வழிபாடுகள் செய்து வந்தால் சனியின் பாதிப்புகள் குறையும்.

*🌹பக்தியுடன்🌹*

*சோழ.அர.வானவரம்பன்*
*அனைத்து ராசிக்காரர்களும் கால பைரவரை தொடர்ந்து 21 அஷ்டமி திதிகளில் 5 எண்ணைகள் கொண்டு 5 தீபம் ஏற்றி பிரார்த்தனைகளை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுகமான வாழ்வு கிட்டும் என்பதில் ஐயமில்லை.*🙏🌹

23/08/2021

வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரி....

Address

Tiruchengode
Tiruchengodu
637211

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Thirumalai Online Tiruchengode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share