CTvNews Tamil

CTvNews Tamil Tamil News group
C tv News tamil
One Ceylon Trusted And Target News

-CTvNews இது மக்கள் குரலின் உரம் -

CTv- Ceylon Text and Voice
One Ceylon குழுமத்திலிருந்து உங்களோடு நாங்கள் இலங்கையில் நம்பகரமான செய்திகளையும் உடன் தெரிவிப்பதில் எங்களை அடையாலமாக மாற்றுகிறோம். OneCeylon தமிழ் மற்றும் ஆங்கிலப்பிரிவிலும் வேகமாகவும் செய்திகளை தருகிற முதல் ஊடகமாகவும் வளம்வரும் எம்மை உங்களோடு சேர்க்க எம்மோடு இணைந்திருங்கள்!!

India's official T20I new jersey.Rate it out of 10✍️
18/09/2022

India's official T20I new jersey.

Rate it out of 10✍️

10.1 ஓவர் நிறைவில் ஆப்கான் அணி 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது. ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி  அதிகுறைந்...
27/08/2022

10.1 ஓவர் நிறைவில் ஆப்கான் அணி 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது. ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி அதிகுறைந்த ஓட்டங்களாக 105 பதியப்பட்டுள்ளது..

ஆரம்ப போட்டியில் அதிரடி ஆப்கான் இலங்கை 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
27/08/2022

ஆரம்ப போட்டியில் அதிரடி ஆப்கான் இலங்கை 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.


ஒரு விவசாயிக்கு 50 கிலோ உரம் இலவசம்!!!! உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பவுள்ள ஆயிரம் மெற்றிக் ...
27/08/2022

ஒரு விவசாயிக்கு 50 கிலோ உரம் இலவசம்!!!!

உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பவுள்ள ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள குறைந்த வருமான பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 375,000 50 கிலோ யூரியா உர மூட்டைகளை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்

இதன்படி ஒரு ஏக்கருக்கும் குறைவான நெல் வயல்களை வைத்திருக்கும் 375,000 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 50 கிலோ வீதம் இலவசமாக இந்த உரம் வழங்கப்பவுள்ளது.

லாஃப் எரிவாயுவின் விலை மேலும் குறையும்!!!Laugh Gas இன் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என Laughs குழுமத்தின் தலை...
21/08/2022

லாஃப் எரிவாயுவின் விலை மேலும் குறையும்!!!

Laugh Gas இன் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என Laughs குழுமத்தின் தலைவர் W.KH வகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12.5 கிலோ எடை கொண்ட லாஃப் கேஸ் சிலிண்டரின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 928 ரூபாவாகவும் உள்ளது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை!!!வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவ...
18/08/2022

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை!!!

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

18/08/2022
பங்களாதேஷ் ஆசியகிண்ண அணியை அறிவித்தது. சகீப் அல் ஹசன் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். #ஆசியகிண்ணம்2022           ...
13/08/2022

பங்களாதேஷ் ஆசியகிண்ண அணியை அறிவித்தது. சகீப் அல் ஹசன் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

#ஆசியகிண்ணம்2022

திங்கள் முதல் ஆரம்பம் ; கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!!அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாட...
13/08/2022

திங்கள் முதல் ஆரம்பம் ; கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் வரும் திங்கள் (15) முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வழக்கமான அட்டவணைப்படி செயல்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி செயலாளர்களுடன் இன்று (13) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சிரமங்கள் உள்ள பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிபர்களுக்கான போக்குவரத்து வசதிகளை உறுதி செய்யுமாறு மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை மாத்திரம் நடாத்துமாறும், பாடசாலைக்குப் பின்னர் சுற்றுவட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வட்ஸ்ந்குழுக்களிலும்.
https://chat.whatsapp.com/JOeoz4ED3sl5Q2kJ2uBf4f

"உலகில் நம்பர் 1 பெட்ஸ்மேன் பாபர்" மனந்திறந்த மஹலே!!!!உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐபிஎல் தொடரில் நம்பர்-1 அணியான மும்பை ...
11/08/2022

"உலகில் நம்பர் 1 பெட்ஸ்மேன் பாபர்" மனந்திறந்த மஹலே!!!!

உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐபிஎல் தொடரில் நம்பர்-1 அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும் இங்கிலாந்து நடத்தும் 100 பந்து தொடரில் கடந்த முறை சாம்பியனான சவுத்தர்ன் பிரேவ் அணிக்கும் இவர்தான் தலைமை பயிற்சியாளர்.

இவரிடம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர்-1 பேட்ஸ்மேனாக தற்காலத்தில் வரக்கூடிய அளவிற்கு எந்த பேட்ஸ்மேன் இருக்கிறார் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

மஹலே ஜெயவர்தனே இதுபற்றி கூறுகையில் ” மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு வர தற்காலத்தில் பாபர் ஆசமிற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே சீராகத் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். அவர் இயற்கையாகவே மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். அவர் எந்த சூழலுக்கும் தன்னை தகவமைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடுகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த பந்தயத்தில் என் பணத்தை நான் பாபர் மேல் தான் வைப்பேன். ஆனாலும் அவரைச் சுற்றி இன்னும் சில தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பாபருக்கு அழுத்தம் தருவார்கள். களத்தில் பாபர் எந்தச் சூழ்நிலையிலும் மிக இயல்பாக இருக்கிறார். அவரது பேட்டிங் டெக்னிக் எதையும் சமாளிக்கக்கூடியதாய் இருக்கிறது” என்றார்.

தற்போது பாபர் ஆசம் மூன்று வடிவ கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் நம்பர்-1 ரேங்கில் இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், லபுசேன் இருவருக்கும் அடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார். மஹேல ஜெயவர்தன இது குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் பேசும்பொழுது ” அவர் எந்தச் சூழலிலும் சத்தமிடுவதில்லை. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் தகுந்தமாதிரி அவர் தன்னை மிக எளிதாக மாற்றிக் கொள்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் இதைத்தான் செய்வார். அவருக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மிகச்சரியாக தெரியும். தேவையான நேரத்திற்கு தன் டெம்போவை மாற்றுவார்.

பாபருக்கும் இந்த திறமை அப்படியே இருக்கிறது. இதனால் பாபரால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு உயர முடியும் என்று நான் நினைக்கிறேன் ” என்று இதற்கான தன் காரணங்களை விளக்கி கூறினார்.


Address

Colombo, Western
Colombo
01

Telephone

+94726817855

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTvNews Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share