Justice Lens

Justice Lens Focusing on the truth. Uncovering the facts. We view the world through a Justice Lens to bring hidden stories into focus

 #கடந்த வெள்ளிக்கிழமை 12.06.2026 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குத்பா பிரசங்கம்நிகழ்த்தி...
14/06/2026

#கடந்த வெள்ளிக்கிழமை 12.06.2026 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குத்பா பிரசங்கம்

நிகழ்த்தியவர்: முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி

கண்ணியமான அல்லாஹ்வின் நல்லடியார்களே! அன்புச் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இன்று நாம் இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டரின் படி இந்த வருடத்தின் இறுதி மாதமான துல்ஹிஜ்ஜா மாதத்தில் இருக்கிறோம். இப்போது நாம் 12வது மாதத்தின் 25ஆம் நாளை எட்டியுள்ளோம். வரவிருக்கும் 16ஆம் தேதி புதிய வருடமான முஹர்ரம் பிறை காணப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ், 1447 ஹிஜ்ரி முடிந்து 1448 ஹிஜ்ரி தொடங்கவிருக்கிறது.

மனித வாழ்க்கையில் 20, 30, 40, 50, 60, 70, 80 என்று வயதைக் கணக்கிடுவது போல, நாம் ஹிஜ்ரி ஆண்டுகளையும் கடந்து செல்கிறோம். இந்த காலம் நமக்கு அல்லாஹ் வழங்கிய பெரிய பாக்கியம். அதற்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இந்த சந்தர்ப்பம் ஒரு சிந்தனைக்கான காலமாகும். நாம் செய்த தவறுகளை உணர்ந்து, அல்லாஹ்விடத்தில் இஸ்திஃபார் செய்து, தவ்பா செய்து திரும்பும் ஒரு வாய்ப்பு இது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டிய நேரமாகும்.

அல்லாஹ் நமக்கு ஈமான், இபாதத், நற்காரியங்கள் செய்யும் வாய்ப்புகளை வழங்கியுள்ளான் என்றால், அதற்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும்.

வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள்

கண்ணியமானவர்களே! இஸ்லாம் என்பது வெறும் வணக்க வழிபாடுகளால் மட்டுமல்ல. அதில்:

#ஈமான் மற்றும் இபாதத்
#நல்ல ஒழுக்கம் (அக்லாக்)
#கொடுக்கல் வாங்கல் (முஆமலாத்)
#குடும்ப வாழ்க்கை
#சமூக பொறுப்புகள்

என்ற ஐந்து முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன. இவற்றை சரியாகப் புரிந்து வாழ்ந்தால்தான் ஒரு முஸ்லிமின் வாழ்க்கை முழுமை பெறும்.

மனிதனின் தவறுகளும் சைத்தானின் வழியும்

மனிதன் பல நேரங்களில் தன் மனச்சாட்சியை விடுத்து, “நான் நினைப்பதே சரி” என்ற அகங்காரத்தில் நடக்கிறான். இதுவே சைத்தானின் வழி. மனிதன் மார்க்கத்தை முழுமையாகப் படிக்காமல், விளங்காமல், தன் கருத்தையே மார்க்கமாக மாற்ற முயற்சிக்கிறான்.

இதுவே சமூகத்திலும், குடும்பத்திலும், வியாபாரத்திலும் பல குழப்பங்களை உருவாக்குகிறது.

அநியாயத்தின் ஆபத்து

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: அநியாயம் செய்பவர்கள் தமக்கே தீங்கு செய்கிறார்கள்.

அநியாயம் மூன்று வகை:

1. அல்லாஹ்வுக்கு எதிரான அநியாயம் (பாவங்கள், கட்டளைகளை மீறுதல்)
2. தன்னையே பாதிப்பது (பாவங்களில் விழுதல்)
3. பிற மனிதர்களுக்கு செய்யும் அநியாயம் (உரிமை மீறல்)

சிறிய அநியாயமாக இருந்தாலும் அது மறுமையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

சமூக பொறுப்பும் அமானிதமும்

மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், வக்ஃப் சொத்துக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அமானிதம். அவற்றை பாதுகாப்பது மிகப்பெரிய பொறுப்பு.

டிரஸ்டிகள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பதவியை தனிப்பட்ட அதிகாரமாக மாற்றக் கூடாது. அது ஒரு தற்காலிக பொறுப்பு மட்டுமே. காலம் முடிந்தால் அதை சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

நான் கடந்த 38 வருடங்களாக கொல்லுபிட்டி மஸ்ஜிதில் ஜும்ஆக் குத்பா நடத்தி வருகின்றேன். இங்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாகமும் மாஷா அல்லாஹ், மஸ்ஜிதை சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். அதன் தலைவர் மிகச் சிறப்பாக மஸ்ஜிதின் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

அமானிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது இஸ்லாமின் கட்டளை. அதனை மறப்பது அல்லது தன் அதிகாரமாக வைத்துக் கொள்வது பெரிய தவறாகும்.

வக்ஃப் மற்றும் நிர்வாக ஒழுங்கு

வக்ஃப் போர்டு, காழி அமைப்புகள், மஸ்ஜித் நிர்வாகங்கள் அனைத்தும் சமூக நலனுக்காக அமைக்கப்பட்டவை. அவற்றில் ஒழுங்கு, நேர்மை, வெளிப்படைத்தன்மை அவசியம்.

நிர்வாகிகள்:
#காலக்கெடு மதிக்க வேண்டும்
#தேர்தல் முறையை பின்பற்ற வேண்டும்
#சமூக ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்
#தனிப்பட்ட அதிகாரத்தை உருவாக்கக் கூடாது

நீதியும் நேர்மையும்

இஸ்லாம் நீதியை வலியுறுத்துகிறது. பொய் சாட்சி, சூழ்ச்சி, மோசடி அனைத்தும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிம் தனது குடும்பத்திலும், வியாபாரத்திலும், சமூகத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும்.

முடிவுரை

கண்ணியமானவர்களே! நாம் முஹர்ரம் மாதத்தை நோக்கி செல்கிறோம். இது ஒரு புதிய தொடக்கம். நம்மை நாமே பரிசோதிக்க வேண்டிய நேரம்:

#நான் அல்லாஹ்வுக்கு எதிராக தவறு செய்தேனா?
#நான் மனிதர்களுக்கு அநியாயம் செய்தேனா?
#நான் எனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றினேனா?

என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்கு தந்திருக்கும் அனைத்து நிஃமத்துகளுக்கும் நன்றி செலுத்தி, நேர்மையாக வாழ்ந்து, அமானிதங்களை பாதுகாத்து, சமூக ஒற்றுமையை காப்போம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈமானுடன், நேர்மையுடன், நல்ல அமல்களுடன் இந்த புதிய ஹிஜ்ரி ஆண்டை தொடங்கும் பாக்கியத்தை வழங்குவானாக.

ஆமீன்.

08/04/2026

President after the ceasefire announcement

அதிபர் ட்ரம்பின் இன்றைய டுரூத் தள பதிவு ஈரானில் செவ்வாய்க்கிழமை, மின் உற்பத்தி நிலைய தினமும்,பாலம் தினமும் ஒரே நாளில் கொ...
05/04/2026

அதிபர் ட்ரம்பின் இன்றைய டுரூத் தள பதிவு

ஈரானில் செவ்வாய்க்கிழமை, மின் உற்பத்தி நிலைய தினமும்,பாலம் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்
படவுள்ளது. இதைப்போல் வேறு எதுவும் இருக்காது.

"அந்தப் பாழாய்ப்போன ஜலசந்தியைத் திறவுங்கள், பைத்தியக்காரப் பயல்களே, இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள்"

"பொறுத்திருந்து பாருங்கள்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்."

அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்

03/04/2026

ஈரானின் உட்பகுதியில் தற்போது கடுமையான தரைவழி மோதல்கள் நடைபெற்று வருவதை செய்தியாளர் உறுதிப்படுத்துகிறார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானிகளைக் காப்பாற்ற (IRGC) நடக்கும் சண்டையில் அமெரிக்க மீட்புப் படைகள் இழப்புகளைச் சந்தித்துள்ளன.

Time பத்திரிகையின் இன்றைய அட்டைப்படம்இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்????
03/04/2026

Time பத்திரிகையின் இன்றைய அட்டைப்படம்

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்????

‼️🇮🇷⚠️ டிரம்பின் ஈரான் தாக்குதலுக்கு ஆதரவு: மிஷாரி  #அல்பாசியை  #நீக்கியது 'Quran.com'  #இணையதளம்!ஈரான் மீதான அமெரிக்க அ...
02/04/2026

‼️🇮🇷⚠️ டிரம்பின் ஈரான் தாக்குதலுக்கு ஆதரவு: மிஷாரி #அல்பாசியை #நீக்கியது 'Quran.com' #இணையதளம்!

ஈரான் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் தாக்குதல்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததையடுத்து, உலகின் மிகப்பிரபலமான திருக்குர்ஆன் இணையதளமான Quran.com, புகழ்பெற்ற காரி மிஷாரி அலபாசியை தனது இயல்புநிலை காரி என்ற இடத்திலிருந்து நீக்கியுள்ளது.

மிஷாரி அலபாசி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், அதிபர் டிரம்ப் ஈரானின் மீது நரகத்தின் கதவுகளைத் திறப்பார் என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வெளியான சில நேரங்களிலேயே, Quran.com இணையதளம் அவரை முதன்மை ஓதுவார் தேர்விலிருந்து நீக்கியது. அவரது ஓதுதல்கள் இன்னும் இணையதளத்தில் இருந்தபோதிலும், பயனர்கள் திருக்குர்ஆன் வசனங்களைக் கேட்கும்போது அவர் இனி தானாகவே முதலில் தோன்றும் தேர்வாக இருக்கமாட்டார். போர்ச் சூழலில் அரசியல் ரீதியான கருத்துகளை வெளியிட்டது, மிஷாரி அலஃபாசியின் நீண்டகால செல்வாக்கில் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

02/04/2026

இறைவன் ஒரு விடயத்தை நடத்த‌ வேண்டும் என்று எண்ணினால் அதை எவ்வாறாயினும் நடத்தி காட்டுவான். அவனுக்கு எதனுடைய உதவியும்‌ தேவையில்லை அவன் அதை நடத்தி காட்டுவான்.

ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அமெரிக்க மக்களுக்கு எழுதிய கடிதம்..! அல்லாஹ்வின் பெயரால், கருணையாளனும் இரக்கமுடையோனுமான...
02/04/2026

ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அமெரிக்க மக்களுக்கு எழுதிய கடிதம்..!

அல்லாஹ்வின் பெயரால், கருணையாளனும் இரக்கமுடையோனுமானவனின் பெயரால்…

அமெரிக்க மக்களே,!
பொய் பிரச்சாரங்கள் மற்றும் திரிக்கப்பட்ட கதைகளுக்கு மத்தியிலும் உண்மையைத் தேடி, சிறந்த வாழ்க்கையை விரும்பும் அனைவருக்கும்…

ஈரான் உலகின் மிகப்பழைய தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்று. நவீன வரலாற்றில் ஈரான் ஒருபோதும் ஆக்கிரமிப்பு, விரிவாக்கம், காலனித்துவம் அல்லது ஆதிக்கம் செலுத்தும் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.

பலமுறை ஆக்கிரமிப்பு, படையெடுப்பு, அழுத்தங்களைச் சந்தித்தும், அண்டை நாடுகளைவிட ராணுவ வலிமை இருந்தும் ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்கவில்லை.

தாக்கியவர்களை மட்டும் துணிச்சலோடு முறியடித்திருக்கிறது.

ஈரானிய மக்கள் அமெரிக்க, ஐரோப்பிய அல்லது அண்டை நாட்டு மக்களுக்கு எதிரான விரோதம் எதுவும் கொண்டிருக்கவில்லை. அரசுகளையும் மக்களையும் எப்போதும் வேறுபடுத்திப் பார்க்கிறோம்.

இது எங்கள் கலாச்சாரத்தின் ஆழமான கொள்கை.

ஈரான் அச்சுறுத்தல் என்று சொல்வது வரலாற்று உண்மைக்கும் இன்றைய நிலைக்கும் பொருந்தாதது.

இது சக்தி வாய்ந்தவர்களின் அரசியல், பொருளாதார தேவைக்காக உருவாக்கப்பட்ட பொய்.

ஆயுதத் தொழிலை நடத்த, ராணுவ ஆதிக்கத்தைத் தக்க வைக்க, சந்தைகளைக் கட்டுப்படுத்த.
அமெரிக்கா ஈரானைச் சுற்றி உலகின் மிகப் பெரிய ராணுவத் தளங்களை வைத்திருக்கிறது.

ஒருபோதும் போர் தொடங்காத நாட்டுக்கு இப்படி அச்சுறுத்தல் — அதனால்தான் ஈரான் தன் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

இது சுயபாதுகாப்பு மட்டுமே, ஆக்கிரமிப்பு அல்ல. 1953-ல் அமெரிக்கா எங்கள் ஜனநாயகத்தை கவிழ்த்தது, எங்கள் வளங்களை தேசியமயமாக்க முயன்றதைத் தடுத்தது.

சதாம்ஹுசைனுக்கு ஆதரவு, நீண்ட சாங்ஷன்கள், அணு உடன்பாட்டை கிழித்தெறிந்து பேச்சுவார்த்தை நடக்கும் போதே இரண்டு முறை தாக்குதல் — இவை எல்லாம் எங்களுக்கு பெரிய துரோகம்.

ஆனாலும் இந்த அழுத்தங்கள் ஈரானை பலவீனப்படுத்தவில்லை.

கல்வியறிவு 30%-லிருந்து 90%க்கு மேல் உயர்ந்தது. உயர் கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், உள்கட்டமைப்பு — எல்லாம் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது.

இப்போதைய போர், குண்டு வீச்சு, சாங்ஷன்கள் எங்கள் மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. குழந்தைகளைக் கொல்வது, புற்றுநோய் மருந்து தயாரிக்கும் ஆலைகளைத் தாக்குவது, “கல் யுகத்துக்கு அனுப்புவோம்” என்று பெருமை பேசுவது — இது அமெரிக்க மக்களின் நலனுக்கு எப்படி உதவும்?

இஸ்ரேல் தன் நலனுக்காக அமெரிக்காவைப் பயன்படுத்துகிறது. “America First” என்று சொல்லும் அரசு உண்மையில் இஸ்ரேலின் ஏஜெண்டா செயல்படுகிறதா?

எங்கள் மக்கள் படித்தவர்கள், திறமையானவர்கள்.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும், வேலை செய்யும் ஈரானியர்களைப் பாருங்கள். பிரச்சாரத்தை நம்பாமல் உண்மையைத் தேடுங்கள்.

மோதல் பாதை இப்போது முன்பைவிட அதிக விலை கொடுக்கும். உரையாடல் vs மோதல் — இந்தத் தேர்வு எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

ஈரான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல ஆக்கிரமிப்பாளர்களைத் தாண்டி வந்திருக்கிறது. நாங்கள் தொடர்ந்தும் நிலைத்திருப்போம்.

-ஈரான் அதிபர்

25/03/2026

இஸ்ரேல் டெல்அவிவ் மேலே கூட்டம் கூட்டமாக வட்டமடிக்கும் காகங்கள் வைரல்வீடியோ
யூதர்கள் பீதி

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Justice Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category