15/03/2026
தேசிய எரிபொருள் QR கோடு பதிவு – முக்கிய அறிவிப்பு 🚨
அரசாங்கம் தேசிய எரிபொருள் பாஸ் (National Fuel Pass) QR கோடு முறையை இன்று (2026 மார்ச் 15) காலை 6.00 மணி முதல் அமல்படுத்தியுள்ளது என்று ஆற்றல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த புதிய முறையின் படி, வாகனங்களுக்கு வாராந்திரமாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு QR கோடு மூலம் நிர்வகிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட QR கோடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் பதிவு
வாகன உரிமையாளர்கள் Fuel Pass QR Code பெற கீழே உள்ள இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்:
🔗 https://fuelpass.gov.lk/
Fuel QR Code பெறும் முறை
1. மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்துக்கு செல்லவும்.
2. தேவையான வாகன மற்றும் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யவும்.
3. பதிவு முடிந்ததும், தனிப்பட்ட Fuel Pass QR Code உருவாகும்.
4. அந்த QR கோட்டை மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது அச்சிட்டு (print) எடுத்துக் கொள்ளலாம்.
5. பின்னர் எரிபொருள் நிலையங்களில் QR கோட்டை காட்டி எரிபொருள் பெறலாம்.
அரசாங்கம் தெரிவித்ததாவது, இந்த Fuel Quota Management System மூலம் எரிபொருள் விநியோகம் ஒழுங்காக நடைபெறவும், தவறான பயன்பாடுகளைத் தடுப்பதற்கும் உதவும்.