14/03/2026
🚨இன்று (15) காலை 6.00 மணி தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.
https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.
முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு
⛽ பேருந்துகள் : 60 லீற்றர்
⛽ மோட்டார் சைக்கிள்கள் : 5 லீற்றர்
⛽ வான்கள் : 40 லீற்றர்
⛽ மோட்டார் வாகனங்கள் : 15 லீற்றர்
⛽ மோட்டார் லொறிகள்: 200 லீற்றர்
⛽ காணி வாகனங்கள் : 25 லீற்றர்
⛽ முச்சக்கர வண்டிகள்: 15 லீற்றர்
⛽ விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 லீற்றர்
⛽ குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5 லீற்றர்
நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும்