27/03/2026
மாவட்ட செயலர்
மாவட்ட செயலகம்,
யாழ்ப்பாணம்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஊடக அறிக்கையிடல்.
மேற்படி விடயம் தொடர்பில் தங்களின் மேலான கவனம் ஈர்க்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் அறிக்கையிடுவதற்கு மேலாக முன்னெடுக்கப்படும் சமூக ஊடக அறிக்கையிடல்கள் மக்களிடையே நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் நம்பிக்கையீனத்தையும் கவலைகளையும் தோற்றுவிப்பதாக அமைந்துவருகின்றது.
குறிப்பாக ஊடக நெறிமுறைகளினை தாண்டி நபர் தாக்குதல்கள் மற்றும் அவை சமூக ஊடகங்கள் ஊடாக பொது வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுகின்றமை பொதுமக்களிடையே சமூக அமைதியின்மையினை தோற்றுவிக்கவும் காரணமாகிவிடலாமென்ற அச்சமுள்ளது.
ஆனால் அவற்றினையும் பொதுமக்கள் தொழில்சார் ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டாகவே காண்கின்றனர்.
தமிழர் தாயகம் உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக கடந்த சில ஆண்டுகளில் 39வரையான ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் காவு கொடுத்துள்ளது.
அவர்களது படுகொலைகளிற்கான நீதி வேண்டி சமரசமின்றி பயணத்தை முன்னெடுத்தும் வருகின்றது.
இத்தகைய சூழலில் வினைத்திறன் மிக்கதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களை முன்னெடுக்க பின்வரும் பரிந்துரைகளை யாழ்.ஊடக அமையம் பரிந்துரைக்கின்றது.
அத்துடன் அவை அமுல்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்ய மாவட்ட செயலக ஊடகப்பிரிவுடன் யாழ்.ஊடக அமையத்தின் பொறுப்பு வாய்ந்த மூத்த ஊடகவியலாளர்கள் இருவர் இணைந்து பணியாற்றதயாராகவுள்ளனர் என்பதையும் அறியத்தருகின்றேன்.
நடைமுறைகள்
01.அமர்வு ஆரம்பமாகுவதற்கு முன்னதாக பத்து நிமிடங்கள் காணொளிகளை பதிவு செய்யவதற்கு அனுமதி
02.அமர்வு உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னராக ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கருத்து மற்றும் ஏனைய தரப்புக்களிற்கான சந்தர்ப்பம்(பொருத்தமாயின் மாவட்ட செயலக வளாகத்தினுள்)
03.ஒருங்கிணைப்புக்குழு அமர்வில் இடையூறுகளை விளைவிக்கத்தக்கதான எந்தவொரு காட்சிப்படுத்தலுமின்றி செய்தி சேகரிப்பதற்கான உரிமை ஊடகவியலாளர்களிற்கு வழங்கப்படுதல்.
04.மாவட்ட செயலக ஊடகப்பிரிவில் பதிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அமர்வு ஆரம்பமாகுவதற்கு முன்னதாகவும் அமர்வு முடிவுற்ற பின்னரும் காணொளிகளை பதிவு செய்ய அனுமதி
05.அமர்வின் போது குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் மற்றும் காணொளிகளை பதிவு செய்யும் ஊடகத்துறை தொடர்புடையோர் மற்றும் சமூக ஊடக பதிவாளர்கள் வெளியேற்ற நடவடிக்கை.
தலைவர்,
யாழ்.ஊடக அமையம்.
பிரதி:கௌரவ அமைச்சர் சி.சந்திரசேகரன்,தலைவர்,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு
கௌரவ நா.வேதநாயகன்,ஆளுநர்,இணைத்தலைவர்,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு