02/08/2020
கல்விமாணி பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
#பாடநெறி - கல்விமாணி (சிறப்பு) ஆரம்பக் கல்வி
#மொழிமூலம் - தமிழ், சிங்களம், ஆங்கலம் (ஏதாவது ஒரு மொழியில்)
#கற்கை காலம் - 4 வருடங்கள்
#தகைமை -
1. க.பொ.த உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி மற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் தாய் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி
அல்லது
2. தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கற்பித்தல் டிப்ளோமா
அல்லது
3. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் சான்றிதழ்
அல்லது
4. திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பள்ளி உயர் கல்விச் சான்றிதழ் (மட்டம் 2)
( #திருத்தப்பட்டுள்ளது)
குறிப்பு - தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை நிறைவு செய்தவர்களும் மட்டம் 3 இலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
#தமிழ் மூல கற்கை நடைபெறும் நிலையங்களும் மாணவர் எண்ணிக்கையும்
கொழும்பு - 30
கண்டி - 30
யாழ்ப்பாணம் - 30
பண்டாரவளை - 20
மட்டக்களப்பு -40
அம்பாறை -30
திருகோணமலை -20
ஹட்டன் - 30
புத்தளம் -20
கிளிநொச்சி - 20
மன்னார் -20
முல்லைத்தீவு -20
வவுனியா - 20
குறிப்பு - குருணாலையில் தமிழ் மூலப் பாடநெறி இல்லை
#பாடநெறிக்கான_அனுமதி
கணினி அடிப்படையிலான தெரிவுப் பரீட்சைக்கு அனைவரும் தோற்ற வேண்டும்
தெரிவுப் பரீட்சை 2020 செப்டம்பர் 26-27 நடைபெறும்
ஒவ்வொரு நிலையத்திற்கும் உள்வாங்கப்படும் எண்ணிக்கையை விட அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றால், நேர்முகப் பரீட்சையும் நடாத்தப்படும்
#விண்ணப்பித்தல்
http://payment.ou.ac.lk எனும் முகவரிக்குச் சென்று கட்டணம் செலுத்தி ஒன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
#விண்ணப்ப_கட்டணம்
மட்டம் 3 - 600/-
மட்டம் 5 -350/-
#விண்ணப்பங்கள்
2.8.2020 முதல் 15.9.2020 வரை விண்ணப்பிக்க முடியும்
மட்டம் 5, 6 இன் பாடநெறி உள்ளடக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் கொமண்டில் வினவுங்கள்
தொகுப்பு - ஜெஸார் ஜவ்பர்
மேலதிக விபரங்கள்
https://bit.ly/31lWUMH
திருத்தம்.
குறிப்பு - தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை நிறைவு செய்தவர்களுக்கு மட்டம் 3,4 ஆகிவற்றைத் தவிர்த்து நேரடியாக மட்டம் 5 க்கு விண்ணப்பிக்க முடியும். (சுமார் 2 வருடங்களைக் கொண்டிருக்கும்)
என்பது #தவறான குறிப்பாகும்.
இந்த ஏற்பாடு திருத்தப்பட்டுள்ளது.
மட்டம் 3, 4 பூரணப்படுத்தியவர்கள் Higher Diploma பெறுவர். அவர்கள் அடுத்த கட்டமாக, கல்விமாணி பட்டத்தை மட்டம் 5,6 களைப் பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய கல்வியில் கல்லூரியின் 3 வருடக் கற்கை, மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி சான்றிதழ் விதிவிலக்கு எதனையும் பெறாது. அனைவரும் மட்டம் 3 இலிருந்தே செல்ல வேண்டும்.