Mannar News

Mannar News News FB page 24/7, not promotes or encourages any activities.

page, covering Free & fair policy for purposes such as -religious , News & Current Affairs.

இன்றைய நாளுக்கான வானிலை..16.05.2026
16/05/2026

இன்றைய நாளுக்கான வானிலை..16.05.2026

12/05/2026

மகளிர் கிரிக்கெட்டில் வடக்கின் மகள்.. Mannar News

11/05/2026

கூட்டத்திற்குள் சிக்கிய த்ரிஷா.!


தமிழகத்தின் புதிய முதல்வராக, த.வெ.க தலைவர்   திரு. ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்...
09/05/2026

தமிழகத்தின் புதிய முதல்வராக, த.வெ.க தலைவர் திரு. ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின், 164 வது பிரிவிற்கு அமைவாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாதன் அர்லேக்கர் இந்த அறிவிப்பை விடுத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

17/04/2026

சர்ச்சையை கிளப்பியிருக்கும் பாடகியின் பதிவு..++++ரஃபா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு எ...
15/04/2026

சர்ச்சையை கிளப்பியிருக்கும் பாடகியின் பதிவு..

++++

ரஃபா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு எதிராக பிரபல Pop பாடகி துவா லிபா (Dua Lipa) கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அவர், தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"குழந்தைகளை உயிருடன் எரிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 45 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அவர் "இனப்படுகொ*லை" என சாடியுள்ளார்.
கொசோவோ போரினால் பாதிக்கப்பட்ட குடும்பப் பின்னணியைக் கொண்ட துவாலிபா, அகதிகளின் வலியை உணர்ந்தவர் என சொல்லப்படுகிறது.

#அகதிகள் #அகதிகள்முகாம் #இனப்படுகொலை #ரஃபா #கொசோவோ

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்ச வருமானத்தை இலங்கை போக்குவரத்துச் சபை பெற்றிருப்பதாக, சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன அறி...
15/04/2026

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்ச வருமானத்தை இலங்கை போக்குவரத்துச் சபை பெற்றிருப்பதாக, சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 10 முதல் 15 ஆம் திகதி வரையிலான, 6 நாட்களில் மாத்திரம் ஒரு பில்லியன் ரூபாய் (100 கோடி ரூபாய்) வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில், 5000 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 11 ஆம் திகதி மாத்திரம் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றில் மிகக்குறுகிய காலத்தில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

#சஜீவநந்தனகனகரத்ன

மர்ம ஆயுதங்களை வெளிப்படுத்துமா ஈரான்..ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் தொடருமானால், இதுவரை பார்த்...
15/04/2026

மர்ம ஆயுதங்களை வெளிப்படுத்துமா ஈரான்..

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் தொடருமானால், இதுவரை பார்த்திராத புதிய ஆயுதங்கள் மற்றும் இராணுவ உத்திகளை ஈரான் வெளிப்படுத்தும் என, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

#இரான்




#போர்செய்தி #உலகசெய்தி
#சர்வதேசசெய்தி

நாளைய கை விசேடம்:தமிழ் சிங்கள புத்தாண்டின், நாளை புதன்கிழமை காலை 9.04 முதல் 9.55 வரையிலான நேரமும் கைவிசேடத்திற்கு உகந்த ...
14/04/2026

நாளைய கை விசேடம்:

தமிழ் சிங்கள புத்தாண்டின், நாளை புதன்கிழமை காலை 9.04 முதல் 9.55 வரையிலான நேரமும் கைவிசேடத்திற்கு உகந்த நேரமாகும்.

இதேவேளை, சிங்கள மரபுகளின் பிரகாரம், புத்தாண்டில் தலைக்கு எண்ணெய்க்கு தேய்க்கும் தேசிய வைபவம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள ‘நாத்த’ தேவாலய வளாகத்தில் நாளை புதன்கிழமை இடம்பெறும்.

மல்வத்தை, அஸ்கிரி, உபய விஹாரைகளின் அனுசாசனத்துடன் இடம்பெறும் புத்தாண்டு சடங்கில். அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பார்.

பின்னவலையில் உள்ள யானைகள் பாதுகாப்பு நிலையத்தில், யானைகளின் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சடங்கு அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் நாளை காலை 6.30இற்கு இடம்பெறும்.

#கைவிசேடம் #விசேடம் #பின்னவலை #புதன்கிழமை
#பராபவ #சிங்கள #கண்டி #சிங்களமரபு #ஸ்ரீ #தலதாமாளிகை #ஸ்ரீதலதாமாளிகை #சித்திரை

தமிழ் சிங்கள புத்தாண்டு உதயம்...இலங்கை மக்கள் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.அறுபது ஆண...
14/04/2026

தமிழ் சிங்கள புத்தாண்டு உதயம்...

இலங்கை மக்கள் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
அறுபது ஆண்டுகளைக் கொண்ட தமிழ் வருடச் சக்கரத்தில் பராபவ என்றழைக்கப்படும் ஆண்டு இன்று பிறந்திருக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படிஇ காலை 8.40 இற்கு பராபவ வருடம் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ற காலை 4.40 முதல் நண்பகல் 12.40 வரை புண்ணிய காலமாகும். அந்நேரத்தில் மருத்து நீர் தேய்த்து நீராடுதல் நலம்.
சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளையும், வைரம் மற்றும் பவளம் போன்ற ஆபரணங்களையும் அணிதல் நன்மை தருமென சோதிட நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

#பராபவ #மருத்துநீர் #பராபவபுத்தாண்டு #சோதிடநிபுணர்கள் #தமிழ்சிங்கள #சித்திரை #புத்தாண்டு #உதயம் #தமிழ்சிங்களபுத்தாண்டு

Address

Mannar
41000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share