17/04/2025
ஒட்டுசுட்டான் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கென சொந்தமாக காணி இல்லாத நிலையில் நீண்ட காலமாக அரசாங்க அதிபரிடம் கோரப்பட்டு இருந்து.
அதனை தொடர்ந்து சங்கத்தின் தலைவர் கண்ணன் அவர்கள் தமிழரசு கட்சியின் இணைப்பாளர் ஜெகன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதுக்கு அமைய உடனடியாக சொந்தமாக காணி வழங்க வேண்டும். என்றும் 16/04/2025 அன்று ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் காணப்பட்ட பொது காணியினை அரசாங்க அதிபரின் அனுமதியுடன் உறுப்பினர்களிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கும் தமிழரசு கட்சியின் இணைப்பாளர் ஜெகன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.