People's Voice

People's Voice கசத்தாலும் சொல்வது உண்மை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்த ஊழியர்கள் கடமையேற்கத் தடை!?🚨பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என வைத்தியச...
10/08/2026

கல்முனை ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்த ஊழியர்கள் கடமையேற்கத் தடை!?🚨

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதி!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிய நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்ககளை கடமைக்கு அறிக்கை செய்ய விடாது தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நியமனம் பெற்ற குறித்த பெண் உத்தியோகத்தர்களும் தங்களது கலாசார மற்றும் மத நடைமுறைக்கு அமைவாக பர்தா அணிந்த நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளனர். எனினும், அவர்கள் கடமைக்கு அறிக்கை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் தங்களது கலாசார முறைக்கேற்ப உடை அணிந்து கடமையாற்றுவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறிருக்கையில் தங்களை கடமையேற்க விடாது தடுத்தமை தொடர்பில் உரிய விளக்கம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் “இனவாதமாகவோ, பிரதேசவாதமாகவோ, தான் விரும்பியவாறோ யாரும் செயற்பட முடியாது. இது அரச ஸ்தாபனம். இந்த இடத்தில் யாருடைய விருப்பத்தின் படியும் யாரும் நடக்க முடியாது. அரசியலமைப்பு, தாபன விதிக்கோவை மற்றும் உரிய சுற்றுநிருபங்கள் என்ன கூறுகின்றனவோ அதற்கமையவே செயற்பட முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், சம்பவத்தின் உண்மை நிலை, நடைமுறையில் உள்ள சுகாதார அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் அரச சேவை விதிமுறைகளுக்கு அமைவாக உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பர்தா அணிந்து கடமையாற்றுவதற்கான அனுமதி தொடர்பான சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சுற்றுநிருபங்கள் தெளிவுபடுத்தப்படுவது, எதிர்காலத்தில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

゚viralシ

Breaking News🚨விசாரனைக்கு சென்ற பொஹட்டுவ கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது🚨ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...
10/08/2026

Breaking News🚨

விசாரனைக்கு சென்ற பொஹட்டுவ கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது🚨

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (ஆகஸ்ட் 10) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது சர்ச்சைக்கரிய கருத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை 10:30 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பு குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக சாகர காரியவசம் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

எனினும், விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

​ ゚viralシ

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளை நிர்வாணமாக்கி பெண் உறுப்புக்களை டார்ச் லைட் அடித்து பார்க்கிறார்கள்!🚨ஹிருணிக்கா குற்...
09/08/2026

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளை நிர்வாணமாக்கி பெண் உறுப்புக்களை டார்ச் லைட் அடித்து பார்க்கிறார்கள்!🚨

ஹிருணிக்கா குற்றாச்சாட்டு!

இலங்கைச் சிறைச்சாலை அமைப்பிற்குள் பெண் கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான அநீதியான மற்றும் அசிங்கமான பரிசோதனை முறைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் கடுமையான மன மற்றும் உடல்ரீதியான சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அல்லது வேறு வெளிப்புற இடங்களில் இருந்து கைதிகள் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்படும் சந்தர்ப்பங்களில், அவர்கள் ஆடைகள் இன்றி முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அங்கு கைதிகளின் ரகசிய உறுப்புகள் கூட மின்சார டார்ச் விளக்குகளின் உதவியுடன் பரிசோதிக்கப்படுவதாகவும், இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரிகமான செயலாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் சரியான முறையில் மறைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஹிருணிகா பிரேமச்சந்திர, சில சந்தர்ப்பங்களில் சிறைச்சாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அல்லது அதிகாரிகளுக்குக்கூட இந்த காட்சிகள் தென்படக்கூடிய நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சோதனைகளின் போது சிறைச்சாலை பெண் அதிகாரிகள் கைதிகளின் உடலமைப்பு குறித்து அவதூறான மற்றும் பாலியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“சிறைவாசிகளும் மனிதர்களே” என்பது சிறைச்சாலைச் சுவரில் மட்டுமே எழுதப்பட்ட வாசகமாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற கேவலமான செயல்களால் கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் மீது கடுமையான வெறுப்பும் குரோதமும் உருவாகிறது என்று சுட்டிக்காட்டினார்.

சமீபகாலமாக சிறைச்சாலைகளுக்குள் ஏற்பட்ட பல்வேறு பதற்றமான சூழ்நிலைகளுக்கும் மோதல்களுக்கும் இதுபோன்ற மனிதாபிமானம் அல்லாத நடத்தைகளும் மறைமுகமாகப் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.

குறிப்பாகக் குழந்தைகள் உள்ள தாய்மார்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு நிலைகளிலுள்ள பெண்கள் இதுபோன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

゚viralシ

பாலத்தில் இருந்து வீசப்பட்ட பூனைக்குட்டி!விலங்கு வதை சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது!🚨இலங்கையில் சமூக வலைத்தளங்களில் பெரும...
09/08/2026

பாலத்தில் இருந்து வீசப்பட்ட பூனைக்குட்டி!
விலங்கு வதை சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது!🚨

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளையும், பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்திய பூனைக்குட்டி ஒன்றின் மீதான கொடூர வதைத் சம்பவம், தற்போது ஒரு நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான முடிவை எட்டியுள்ளது.

பாலத்தின் மேல் இருந்து கீழே வீசி எறியப்பட்ட அந்த அப்பாவிப் பூனைக்குட்டி பாதுகாப்பாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் மீட்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, இரு இளைஞர்கள் சேர்ந்து ஒரு பூனைக்குட்டியை மிகக் கொடூரமான முறையில் பாலத்திலிருந்து கீழே வீசி எறியும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து, 'இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு' (Animal Welfare Coalition Sri Lanka) இது குறித்து கண்டி காவல் துறையினரிடம் (Thalathuoya Police) முறைப்படி புகார் அளித்தது.

இதன் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட காவல் துறையினர், இந்த வன்முறையில் ஈடுபட்ட 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை அதுல்கம பகுதியில் வைத்து கைது செய்தனர்.

காணொளியைப் பார்த்த பலரும் அந்தப் பூனைக்குட்டி இறந்திருக்கலாம் என்றே அஞ்சினர். ஆனால், அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக, அந்தப் பூனைக்குட்டி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையின் பிரபல விலங்கு நல அமைப்பான "Baw Baw Animal Welfare" குழுவினர் அந்தப் பூனைக்குட்டியைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டனர்.
மீட்கப்பட்ட பூனைக்குட்டி உடனடியாகக் கால்நடை மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, அதன் உடல்நிலை தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும், நன்றாகவுமே உள்ளது. நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் முடியும் வரை, அந்தப் பூனைக்குட்டி "Baw Baw" விலங்குகள் காப்பகத்தில் (Baw Baw Sanctuary) மிகவும் பாதுகாப்பாகவும் அன்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதற்குப் பொருத்தமான, அன்பான ஒரு குடும்பம் கிடைக்கும் வரை அது அங்கேயே தங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

゚viralシ

டொனால்ட் டிரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது!நெதன்யாகு அறிவிப்பு!🚨காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட்...
09/08/2026

டொனால்ட் டிரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது!

நெதன்யாகு அறிவிப்பு!🚨

காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கீழே போடும் வரை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நெதன்யாகு, "போலித்தனமான ஆயுதக் குறைப்புச் செயல்முறைகளை இஸ்ரேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" என்று குறிப்பிட்டார். ஹமாஸ் உண்மையாகவே அனைத்து வகையான கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களையும் துறக்க வேண்டும் என்றும், அதுவரை இஸ்ரேலிய ராணுவம் தனது படைகளைத் திரும்பப் பெறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், காசாவிலோ அல்லது மேற்கு கரையிலோ பாலஸ்தீன அரசு உருவாவதை முற்றிலும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 'அமைதி வாரியம்' (Board of Peace) மூலம் கடந்த மாதம் இந்த 15 அம்ச அமைதி வரைவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்களைக் கலைத்து, காசாவை மறுசீரமைப்பு செய்து, பாலஸ்தீனக் குழுக்களிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கிடையில், இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என ஹமாஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

​ ゚viralシ

இலங்கையின் புதிய கடவுச்சீட்டுகள் சில நாடுகளில் நிராகரிப்பு🚨முஜிபுர் ரஹ்மான் MP!புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரத்தில் ஏற்ப...
09/08/2026

இலங்கையின் புதிய கடவுச்சீட்டுகள் சில நாடுகளில் நிராகரிப்பு🚨

முஜிபுர் ரஹ்மான் MP!

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை காரணமாக, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த கடவுச்சீட்டை இயந்திரம் மூலம் முறையாக வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளுக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், இலங்கை கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும், கடவுச்சீட்டு வழங்குவதற்கான 6,000 ரூபா கட்டணம் குறைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கடவுச்சீட்டுகளில் Observation மற்றும் Extension பக்கங்கள் இல்லை என்றும், அச்சுத் தரம் குறைவாக இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்திற்கும் ஊடுருவுவது போன்ற பிரச்சினைகளால் சில நாடுகளில் கடவுச்சீட்டுகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரப் பிரச்சினைகள் இல்லை எனத் தெரிவித்தார்.

பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைத்தமை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாகவும், பல நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும், e-Passport முறையை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

​ ゚viralシ

09/08/2026

ஒருவேளை இந்த நாட்டை நான்தான் ஆட்சி செய்கிறேன் என்று அரசாங்கம் நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை🚨

நாமல் ராஜபக்‌ஷ

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உரையாற்றுகையில், தற்போதைய அரசாங்கம் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சியினரை நோக்கி விரல் நீட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "ஏதேனும் ஒரு சிக்கல் எழும்போதெல்லாம், இது நிச்சயம் நாமலினுடைய வேலைதான் என்று அரசாங்கம் கூறுகிறது.

அரசாங்கத்திற்கு அவ்வாறு தெரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இந்த நாட்டை நான்தான் இயக்குகிறேன் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற 'அரகலய' (மக்களின் போராட்டம்) சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போராட்டக் களத்திலிருந்த பிள்ளைகள் மீது கை வைக்கவில்லை என்றும், அவர்களைத் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நாட்களில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் மக்கள் போராட்டங்களை எவ்வாறு எதிர்கொண்டன என்பதை சமூக ஊடகங்கள் வழியாக அனைவரும் பார்த்திருப்பார்கள் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த நாடுகள் கையாண்ட கடுமையான வழிமுறைகளைப் போலன்றி, இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவும் தங்களது அரசாங்கமும் ஒரு படி பின்வாங்குவதற்கே தீர்மானித்ததாக நாமல் ராஜபக்ஷ விவரித்துள்ளார்.

"ஆம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாங்களும் ஒரு படி பின்வாங்கினோம். மக்களின் உயிர்களைப் பறித்து, பிள்ளைகளைக் கொலை செய்து, அந்தப் பிள்ளைகளின் உயிர்களின் மேல் ஓர் அரசாங்கத்தைக் காப்பாற்ற நாங்கள் முயலவில்லை; இனிமேலும் அவ்வாறு செய்ய மாட்டோம்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், மனிதநேய அடிப்படையில் அந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்த தங்களின் இத்தகைய செயலை ஒருபோதும் பலவீனமாகவோ அல்லது கோழைத்தனமாகவோ பார்க்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

​ ゚viralシ

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையே!🚨ஆஸ்திரேலிய ஆய்வகமும் அறிக்கை சமர்ப்பித்தது!இலங்கைக்...
09/08/2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையே!🚨

ஆஸ்திரேலிய ஆய்வகமும் அறிக்கை சமர்ப்பித்தது!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்றும், இதன் காரணமாக நாட்டுக்கு 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

லக்விஜய மின்நிலையத்தினால் வழங்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்த நிலக்கரி தரமற்றது என முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் சில தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

பின்னர், ஆஸ்திரேலியாவின் ‘பியூரோ வெரிடாஸ் இன்டர்நேஷனல்’ (Bureau Veritas International) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் தரப்பு சோதனையிலும் குறித்த 19 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியமையினால் மின் உற்பத்தியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக டீசல் மற்றும் ஃபர்னஸ் எண்ணெயை (Furnace oil) கொள்முதல் செய்ய அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையிலான காலத்தில் மட்டும் 8,536 மில்லியன் ரூபாய் கூடுதல் செலவீனத்தை ஏற்க வேண்டியிருந்ததாகவும், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை இந்த தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால், மொத்த இழப்பு 10,000 மில்லியன் ரூபாயைக் கடக்கும் என்றும் மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

மின் கட்டணம் இருமுறை உயர்த்தப்பட்டதற்கு இவ்வாறான முறைகேடுகளே நேரடியாகக் காரணம் எனக் குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பான ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அரசாங்கம் கூறும் ‘சிஸ்டம் சேஞ்ச்’ (அமைப்பில் மாற்றம்) என்பதன் உண்மையான வடிவம் இதுதானா என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

​ ゚viralシ

Breaking News🚨பொரளை மகசின் / வெலிக்கடை சிறையில் பதற்றம்🚨பொரளை மாகசின் சிறையில் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தகவல். அனைத்து...
06/08/2026

Breaking News🚨

பொரளை மகசின் / வெலிக்கடை சிறையில் பதற்றம்🚨

பொரளை மாகசின் சிறையில் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தகவல்.

அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​ ゚viralシ

06/08/2026

இலங்கையில் இருக்கும் திருடர்கள் போதாதென்று இப்போது சீனாவின் திருடர்களும்!?🥹

கொழும்பு கொள்ளுப்பிட்டிய பகுதியில் கைபேசியை திருடிய சீன திருடனை துரத்திப் பிடித்த இலங்கை இளைஞர்?🚨

இலங்கையின் கொழும்பு, கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள வீதி ஒன்றில் நபர் ஒருவரின் கைபேசியை திருடிக்கொண்டு தப்பியோட முயன்ற சீன நாட்டவர் ஒருவர், அங்கிருந்த இலங்கை இளைஞரால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைபேசியைப் பறித்துக்கொண்டு ஓடிய அந்த சீன நபரை, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு இலங்கை இளைஞர் பின் தொடர்ந்து வேகமாக ஓடிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்தச் சீன திருடன் பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இலங்கையில் அண்மைக் காலமாக சீன நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், "இலங்கையில் உள்ள திருடர்கள் மட்டுமல்ல, சீன திருடர்களும் இப்போது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள்" என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கருத்துக்களைப் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

​ ゚viralシ

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when People's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share